தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர்.
இவர் காவல் நிலையத்தில் தன் வீட்டு பணியாளர் மீது புகார் அளித்துள்ளார்.
தன் வீட்டில் வேலை பார்த்த சுபாஷ் சந்திர போஸ் தன்னிடம் உள்ள விலை உயர்ந்த பொருட்களை திருடி சென்று விட்டதாக நடிகை பார்வதி நாயர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் குற்றம் சுமத்தப்பட்ட சுபாஷ் அவரும் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். தன் மீது வீண்பழி சுமத்துவதாக அவர் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது…
” கேஜேஆர் ஸ்டுடியோஸ் கோட்டப்பாடி ராஜேஷ் என்பவரிடம் நான் வேலை செய்தேன்.
அவரின் சிபாரிசின் பெயரில் தான் நான் நடிகை பார்வதி நாயர் வீட்டில் வேலைக்கு வந்தேன். அதுவும் வாரத்தில் இரு நாட்கள் மட்டும் தான் பார்வதியிடம் வேலை செய்து வந்தேன்.
பார்வதி நாயர் வீட்டில் இரவு நேரங்களில் பார்ட்டி நடப்பதுண்டு. மேலும் அவரது பாய் பிரண்டுகளுடன் அவர் பார்ட்டியில் நெருக்கமாக காணப்படுவார்.
அவரது சில ரகசியங்கள் எனக்கு தெரிந்து விட்டதாலும் நான் அந்த ரகசியத்தை KJR ராஜேஷிடம் சொல்லிவிடுவேன் என்பதாலும் அவர் சுதாரித்துக் கொண்டு என் மீது திருட்டுப் பழி போடுகிறார்.
அவர் உங்கள் மீது பழி சுமத்த என்ன காரணம் என செய்தியாளர்கள் கேட்டபோது.? என அவர்தான் பார்வதிய வச்சிருக்காரு என்று சொல்லிவிட்டார்.
இந்த சம்பவம் திரை உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.
நயன்தாரா நடித்த அறம், ஐரா உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் கே ஜே ஆர் ஸ்டுடியோ நிறுவனர் கோட்டப்பாடி ராஜேஷ்.
இவர் அஜித் நடித்த விஸ்வாசம் பட தமிழக வெளியீடு உரிமையை பெற்று இருந்தார்.
ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் மோதிய போது ரஜினி படத்தை அஜித் முந்திவிட்டார் என ட்விட்டர் புரமோஷன் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Actress Parvathy Nair and Producer KJR Rajesh connection