சிந்தித்தேன் எழுதுகிறேன்.: அழகிய தேவதை நயன்தாரா ஸ்பெஷல்.; காதலில் வென்றது எப்படி.?

சிந்தித்தேன் எழுதுகிறேன்.: அழகிய தேவதை நயன்தாரா ஸ்பெஷல்.; காதலில் வென்றது எப்படி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிந்தித்தேன் எழுதுகிறேன்…

தலைப்பே சும்மா அதிருதில்ல அப்படின்னு நினைக்கும்போதே பக்கத்துல இருந்து ஒரு குரல் எல்லாரும் சிந்திச்சுதான் எழுதுவார்கள் அப்படின்னு சொல்ல..

ஆமால்ல மொக்க வாங்கிட்டோமே அப்படின்னு தோணிச்சு. சரி விஷயத்துக்கு வருவோம். அது இதுன்னு எந்த வரைமுறையும் இல்லை.

சம கால நிகழ்வுகள், மனிதர்கள், சினிமா, அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகள் சார்ந்த ஒரு அலசல்.

சரி முதல் பதிவு எதைப் பத்தி எழுதலாம்னு சிந்திக்கும்போதே (அப்பாடி தலைப்பை justify பண்ணியாச்சு) எல்லா மீடியாலயும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் கல்யாணம்தான் ஹைலைட்… தமிழ் கூறு நல்லுலகம் நம்மள கைவிடாதுங்கற நம்பிக்கையோட ஆரம்பிக்கிறேன்.

சரி நயன்தாரா பேருக்கு என்ன அர்த்தம்ன்னு கூகுள் ஆண்டவர்கிட்ட search பண்ணினால் 2 மீனிங் அந்தம்மாவுக்கு எப்படி சூட் ஆகுது பாருங்க… ஒண்ணு அழகிய தேவதை இன்னொன்னு a light for one’s life…

மொதல் விஷயம் தெரிஞ்சது தான் ரெண்டாவது விஷயம் ஒருவரது வாழ்க்கையில் வெளிச்சம் கொடுப்பவர் அவருக்கு பொருந்துதா என்பதை விரிவாக பார்ப்போம்..

நயன்தாராவுக்கு சொந்த ஊர் கேரளா மாநிலம் திருவல்லா… இந்திராகாந்தியின் பிறந்த தேதியை ஒட்டி பிறந்தவர் நயன் (நவம்பர் 18.)

திருப்பதியில் விதிகளை மீறிய புதுமண தம்பதி நயன்தாரா – விக்னேஷ்சிவன்

அப்ப மனவலிமையும், மனிதத்தன்மையும் கலந்துதானே இருக்கும். அது ரெண்டும் தான் நயன்தாராவை வாழ்க்கை பூரா வழிநடத்துது.

நாம இவங்கள பத்தி பேசுறதுக்கு காரணம் சினிமா நடிகைன்றதால மட்டுமில்ல. தன் வாழ்வின் முக்கிய தருணங்களில் மிக திடமாக முடிவெடுத்து வெற்றி கண்டவர்.

மிக மென்மையான மனதுக்கு சொந்தக்காரர்… எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவர் காதல் வயப்படுதல் உட்பட….

முதல் காதல் சிம்புவுடன் சரியான வயதில்… நயன்தாரா சிம்பு மீது உயிரையே வைத்திருந்தார். ‘வல்லவன்’ படத்துக்கு அவர் கொடுத்த முழுமையான ஒத்துழைப்பே அவர் சிம்பு மீது வைத்திருந்த காதலுக்கு சாட்சி.

ஆனால் இவர்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியானதும் நொருங்கிவிட்டார். சிம்பு மேல் எழுந்த சந்தேகம் அந்த காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

ஆனால் காதலியாக இருந்தவரை சிம்பு தன் திரை வாழ்வில் உயர்வதற்கு தனது பங்களிப்பை ஒரு காதலியாக நேர்மையாக கொடுத்தார். அவர் வாழ்விற்கு ஒளியாக இருப்பதற்கான முயற்சி எடுத்தார். ஆனால் அது கைகூடவில்லை.

இளகிய மனதிற்கு சொந்தக்காரியான நயன்தாராவை மிக எளிதாக தனது காதல் வலையில் வீழ்த்தி விடுகிறார் பிரபுதேவா.

இந்த காதலிலும் காதலன் உயர்வுக்கு பக்கபலமாக இருக்கிறார். நயன்தாராவால் பிரபுதேவாவுக்கு சில பட வாய்ப்புகள் இயக்குவதற்கு கிடைக்கின்றன.

காதலில் நேர்மை என்பது நயன்தாராவின் கொள்கை. அது போல் தன் காதலன் தன்னிடம் மட்டுமே அன்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பதும் நியாயம் தானே.

பிரபுதேவா மேல் தான் கொண்ட காதலுக்காக இந்துவாக மதம் மாறினார். பிரபுதேவா பெயரை கையில் பச்சை குத்திக்கொண்டார்.

காதலிக்க தொடங்கும்போதே முதல் மனைவி மற்றும் குழந்தைகளுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டேன் என்று உறுதி அளித்திருந்த பிரபுதேவா அதை மீறும்போது அவரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஏமாற்றப்பட்டதாக நம்பினார்.

அந்தக் காதலும் முடிவுக்கு வந்தது. காதலித்த வரை அவருக்கும் வெளிச்சமாக திகழ்ந்தார்.

எந்த பெரிய பின்புலமும் இல்லாத கதை சொல்ல வந்த விக்னேஷ் சிவனுடன் மூன்றாவது காதல். அதே அன்பு, அதே உயர்வு, அதே வெளிச்சம் விக்னேஷ் சிவனுக்கும் கிடைத்தது.

இருவரும் காதலில் காட்டிய நேர்மை திருமணமாக உயர்ந்தது. இருவரும் சீரோடும், சிறப்போடும் வாழ நாமும் வாழ்த்துவோம்.

மேற்கண்ட அனைத்து காதலிலும் நயன்தாரா சாதாரண பெண்ணாக நேர்மையுடன் நடந்து கொண்டார். அந்த நேர்மை அவரது காதலை வெற்றி பெற செய்தது.

இனியும் தொடரும்… மீண்டும் சந்திப்போம்.

(நன்றி : ராமராஜன்)

Ramarajan

Actress Nayantharas love and life review

யோகிபாபு படத்தை தயாரித்து இயக்கும் சந்தானம் பட டைரக்டர்.; டைட்டில் வேற லெவல்

யோகிபாபு படத்தை தயாரித்து இயக்கும் சந்தானம் பட டைரக்டர்.; டைட்டில் வேற லெவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரில்லர், காதல், குடும்ப படம் என ஒவ்வொரு வகை படங்களையும், ஒரு தரப்பினர் ரசிப்பார்கள் ஆனால், காமெடி படங்களை அனைத்து ரசிகர்களும் கொண்டாடுவார்கள்.

காமெடி படங்கள் மனதிற்கு முழுமையான நிம்மதியை தரும், ஆனால் முழுமையாக அனைவரும் ரசிக்கும்படி, வாய்விட்டு சிரிக்கும்படி காமெடி படங்கள் தருவதென்பது எளிதல்ல, அந்த வகையில் தமிழ் திரையுலகில் பெரும் வெற்றியை குவித்த, அனைவராலும் கொண்டாடப்பட்ட, காமெடி படங்களான சந்தானம் நடித்த “ஏ1, பாரீஸ் ஜெயராஜ்”, படங்களை தந்த இயக்குநர் ஜான்சன்.கே, தனது அடுத்த படத்தை துவங்கியுள்ளார்.

இந்த புதிய திரைப்படத்திற்கு “மெடிக்கல் மிராக்கல்” என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.

முழுக்க முழுக்க காமெடி ஜானரில், அனைவரும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாக இருக்கிறது.

இப்படத்தை எழுதி இயக்குவதோடு, ஏ1 புரோடக்சன்ஸ் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார் இயக்குநர் ஜான்சன்.கே.

இப்படத்தில் நாயகனாக தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கிறார். இப்படத்தில் அவர் ஓலா டிரைவர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

தர்ஷா குப்தா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மன்சூர் அலிகான், சேசு, கல்கி, மதுரை முத்து, டி.எஸ்.ஆர், நாஞ்சில் சம்பத், KPY வினோத், KPY பாலா, டைகர் தங்கதுரை, சித்தார்த் விபின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

தொழில்நுட்ப குழுவினராக இசை – சித்தார்த் விபின், ஒளிப்பதிவு – S.மணிகண்ட ராஜா, எடிட்டிங் – தமிழ்குமரன், கலை இயக்கம் – ராஜா A, பாடல்கள் – ரோகேஷ், நிர்வாக தயாரிப்பு – கார்த்திக் V, தயாரிப்பு மேற்பார்வை – கே.ஆர்.பாலமுருகன், மக்கள் தொடர்பு – சதீஷ்குமார் (AIM) ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

முழுக்க முழுக்க அரசியல் காமெடியாக உருவாகவுள்ள “மெடிக்கல் மிராக்கல்” படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் இனிதே தொடங்கியது.

இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

Yogi babu joins with Santhanam’s A1 hit director

ஹிந்திப் படத்தை தயாரித்து நடிக்கும் சூர்யா.; ரஜினி வில்லனுடன் இணைகிறார்.!

ஹிந்திப் படத்தை தயாரித்து நடிக்கும் சூர்யா.; ரஜினி வில்லனுடன் இணைகிறார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘சூரரைப் போற்று’.

சுதா கொங்கரா இயக்கிய இந்த படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க சூர்யாவே தயாரித்திருந்தார்.

தியேட்டர்ல ரிலீஸ் ஆகாமல் நேரடியாக ஓடிடி-யில் வெளியான இந்த படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.

எனவே இந்த படத்தை மற்ற மொழிகளில் தயாரிக்க பலத்த போட்டி உருவானது.

இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகின்றனர். அதனை இயக்குநர் சுதா கொங்கராவே இயக்க உள்ளார்.

சர்வதேச திரைப்பட விருது விழாவில் ‘சூரரைப் போற்று’ படைத்த சூப்பர் சாதனை

ஹிந்தியில் இப்படத்தை விக்ரம் மல்ஹோத்ராவுடன் இணைந்து சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் நாயகனாக அக்‌ஷய்குமார் நடிக்க அவருக்கு ஜோடியாக ராதிகா மதன் நடிக்கிறார்.

ஷங்கர் இயக்கிய ரஜினியின் 2.0 படத்தில் வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஹிந்தி ரீமேக்கில் சூர்யா கேமியோ ரோலில் நடிக்கிறார். இதை படக்குழுவினர் உறுதிப்படுத்துள்ளனர்.

அக்‌ஷய் குமாருடன் இருக்கும்படியான புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளனர் சூர்யா.

அவரின் பதிவில்… “அக்‌ஷய் சார் உங்களை இந்த படத்தில் வீரராகப் பார்ப்பது எனக்குப் பழைய நினைவுகளை நினைவுப்படுத்துகிறது.

நம் கதையை மீண்டும் உயிர்ப்பித்து மிக அழகாக ‘மாறா’வாக சுதா கொங்கரா உருவாக்கியுள்ளார்.

‘சூரரைப் போற்று’ பட இந்தி ரீமேக்கில் எனது கேமியோ ரோலையும், இந்தப் படப்பிடிப்பு குழுவினருடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் மிகவும் மகிழ்ச்சியாக செலவு செய்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள அக்‌ஷய் குமார்…

“நன்றி பிரதர், சூரரைப் போற்று போன்ற ஒரு உத்வேகக் கதையின் படப்பிடிப்பின் ஒவ்வொரு தருணத்தையும் விரும்புகிறேன்.

எங்களின் ஸ்ட்ரிக்ட் கேப்டன் சுதா கொங்கரா இருந்தாலும் சென்னையில் இருப்பது ஒருவகை காதலை வெளிப்படுத்துகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

சூர்யா

Surya produces and stars in a Hindi film;

சந்திக்காத மனிதர்களுடன் பழக சுதந்திரப் பறவையாக சுற்றும் இளம்பெண் திவ்யா

சந்திக்காத மனிதர்களுடன் பழக சுதந்திரப் பறவையாக சுற்றும் இளம்பெண் திவ்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நியான் ஸீ ஃபிலிம்ஸ் ஸ்ரீஜேஷ் வல்சன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சனீஷ் சுகுமாரன் இயக்கத்தில் இன்வெஷ்டிகேட்டிவ் த்ரில்லராக உருவாகி வருகிறது, “திவ்யா”.

தமிழில் இன்வெஷ்டிகேஷன் த்ரில்லர் படங்கள் நிறைய எண்ணிக்கையில் வருவதில்லை.

இன்வெஷ்டிகேட்டிவ் த்ரில்லர் வகைப்படங்கள், தொடக்கம் முதல் இறுதி வரை நம்மை பரபரப்பாகவே வைத்திருக்கும்.

அப்படி ஆரம்பம் முதல் கடைசி வரை படம் பார்ப்பவர்களை பரபரப்பாக வைத்திருக்கும் இன்வெஷ்டிகேட்டிவ் த்ரில்லர் தான் திவ்யா.

புதுப்புது இடங்களுக்குப் போகவேண்டும், இதுவரை சந்திக்காத மனிதர்களுடன் பழக வேண்டும்… என்று தன்னந்தனியாகவே சுதந்திரப் பறவையாக சுற்றித்திரியும் இளம்பெண் திவ்யா.

திவ்யாவும் அவளது நண்பனும் இதுவரை பார்க்காத ஒரு இடத்திற்கு பயணம் செய்கிறார்கள். அறிமுகமில்லாத இடம், அறிமுகமில்லாத மனிதர்கள்… எதிர்பாராத ஒரு சம்பவம்…

அது எந்த இடம்.. அது என்ன சம்பவம்… அந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது தான், “திவ்யா”வின் கதை.

சாஸ்வி பாலா, மிதுன், சம்பத் ராம், மேத்யூ வர்க்கீஸ், பிரவின், அகில் கிருஷ்ணஜித், முருகன் ஆகியோர் நடிப்பில், விபின் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ரெஜிமோன் இசையமைப்பில் பாடல்கள், மற்றும் வசனத்தை முருகன் மந்திரம் எழுதி இருக்கிறார்.

வழக்கமான பாணியில் இல்லாது, மிக வித்தியாசமான திரைக்கதையுடன் உருவாகியுள்ள திவ்யா திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் “திவ்யா” படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெயிலர் வெளியாக இருக்கிறது.

divya

‘Divya’ could be the next captivating Investigative drama

‘வள்ளி மயில்’ படம் இந்திய சினிமாவில் முக்கியமானதாக இருக்கும்.; சுசீந்திரன் – விஜய்ஆண்டனி நம்பிக்கை

‘வள்ளி மயில்’ படம் இந்திய சினிமாவில் முக்கியமானதாக இருக்கும்.; சுசீந்திரன் – விஜய்ஆண்டனி நம்பிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பாரதிராஜா, சத்யராஜ் நடிக்கும் புதிய திரைப்படம் “வள்ளிமயில்”.

80களின் நாடகக்கலை பின்னணியில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில்…

வசனகர்த்தா பாஸ்கர் சக்தி கூறியதாவது..,
குறுகிய காலத்தில் கணிசமான படங்களை கொடுத்து, வெற்றியை கண்டவர் சுசீந்திரன்.

எனது நாவலை படித்துவிட்டு, அதை அழகர்சாமியின் குதிரை என்ற படமாக மாற்றினார். வள்ளி மயில் திரைக்கதையை வெகுநாட்களாக பேசிகொண்டிருந்தோம். கடுமையான உழைப்பில் உருவான கதை ‘ வள்ளி மயில்’.

இந்த திரைப்படம் திரைத்துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இது உங்களுக்கு நிச்சயம் பிடித்தபடமாக இருக்கும்.

விஜய்ஆண்டனி-யின் ‘வள்ளி மயிலை’ திண்டுக்கல்லில் தொடங்கிய சுசீந்திரன்

ஆடை வடிவமைப்பாளர் ராதிகா கூறியதாவது..

இந்த படம் 80 காலகட்டத்தில் இருப்பதால் எனக்கு அதிக வேலை இருந்தது. ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளோம், பெரும் உழைப்பை கொடுத்துள்ளோம். இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை. நன்றி

கலை இயக்குனர் உதயகுமார் கூறியதாவது..

பீரியட் படம் பண்ணுவது சவாலான விஷயமாக இருக்கும். ஒவ்வொரு கலை இயக்குனருக்கும் பீரியட் படம் பண்ண வேண்டுமென்பது கனவு. எனக்கு இந்த படத்தில் அது நிறைவேறியுள்ளது. இந்த படத்தில் குழுவாக சேர்ந்து பெரும் உழைப்பை கொடுத்துள்ளோம். படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.

பாடலாசிரியர் விவேகா கூறியதாவது..

இந்த படத்தில் இரண்டு பாடல்களை எழுதியுள்ளேன். விஜய் ஆண்டனி சார் கதாநாயகன் ஆன பிறகு, நான் அவருக்கு எழுதும் முதல் பாடல். இந்த படத்தின் பாடல்கள் பிரமாதமாக வரும். இந்த படத்தில் பணியாற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகள்.

நடிகை கனி கூறியதாவது..

நிறைய நுணுக்கமான விஷயங்களை திரையில் கூறுபவர் சுசீந்திரன். எனக்கு பீரியட் திரைப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் தான் இந்த படத்தில் நடிக்க ஒத்துகொண்டேன். எனக்கு வாய்ப்பளித்த படக்குழுவிற்கு நன்றி.

நடிகர் தயாளன் கூறியதாவது..

இயக்குனர் உடன் பணிபுரிந்த அனுபவம், எங்களுக்கு பெரிய பொறுப்புணர்வை கொடுத்தது. அவருடைய அர்பணிப்பு எங்களையும் ஊக்கபடுத்தியது. படம் கண்டிப்பாக பிடித்தமான ஒன்றாக இருக்கும். படத்திற்கு உங்கள் ஆதரவை தர வேண்டும்.

நடிகை அறந்தாங்கி நிஷா கூறியதாவது..

சில படங்கள் பண்ணி இருந்தாலும், காமெடி கதாபாத்திரத்தில் என்னை வெளிப்படுத்திக்கொள்ள, எனக்கு பெரிய வாய்ப்பாக இந்த படம் அமைந்துள்ளது. கலைஞர்களின் பரிந்துரைகளுக்கு மரியாதை கொடுப்பவர் இயக்குநர். எனக்கு அனைவரையும் ஈர்க்கும் ஒரு கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார்.

இந்த படம் பெரிய வெற்றியை கொடுக்கும். விஜய் ஆண்டனி சார் மற்ற கலைஞர்களை பாராட்டும் குணம் கொண்டவர். தமிழ் சினிமாவிற்கு ஃபரியா எனும் சிறந்த நடிகை இந்த படத்தின் மூலம் கிடைத்துள்ளார்.

வள்ளி மயில் திரைப்படம் நாடக கலைஞர்களை போற்றும் ஒரு படமாக இருக்கும். இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நாங்கள் நம்புகிறோம்.

நடிகை ஃபரியா அப்துல்லா கூறியதாவது..

நான் தியேட்டர் கலைஞராக தான் என் பயணத்தை தொடங்கினேன். சுசீந்திரன் உடைய பொறுமை தான், இந்த கதை சிறப்பாக உருவாக காரணம். அவர் என்னிடம் கதை சொல்லும்போதே மியூசிக் எல்லாம் போட்டுக்காட்டினார், நான் இயக்குநரின் பார்வையை முழுமையாக நம்பி தான் இந்த படத்தில் நடிக்க ஒத்துகொண்டுள்ளேன். இந்த கதை நிச்சயம் எல்லோருக்கும் பிடித்தமான படமாக இருக்கும். உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை

இயக்குநர் சுசீந்திரன் கூறியதாவது..,

இந்த படத்தின் கதையை நான்கு வருடமாக நான் எழுதி வருகிறேன். இந்த படம் நிச்சயமாக இந்திய சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும். இது எல்லோரும் எளிதில் ரிலேட் செய்துகொள்ளும் படமாக இருக்கும். இந்த படம் நிறைய உழைப்பை வாங்கியுள்ளது. வள்ளி மயில் கதாபாத்திரத்தில் ஃபரியா நடிக்கிறார். அவர் தான் இந்த படத்தின் உயிர். இது எல்லா மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

நடிகை கல்பனா உடைய மகள் இந்த படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார், கனி அகத்தியன் இந்த படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார். எனக்கு இந்த திரைப்படம் முக்கியமான திரைப்படம்.

இமான் கடினமான உழைப்பாளி, அவருடன் நான் 9 படங்கள் பணியாற்றியுள்ளேன். இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் முழு அர்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். ஆக்‌ஷன், காமெடி, எமோஷன் என அனைத்தும் கலந்த ஒரு நல்ல படைப்பாக இது இருக்கும். “

நடிகர் விஜய் ஆண்டனி கூறியதாவது..

இந்த படத்தில் சுசீந்திரன் அவர்களிடம் இருந்து நான் இயக்கத்தை கற்றுக்கொண்டேன்.

இயக்கத்தில் நானும் இறங்கியதால் நான் ஒவ்வொன்றையும் கவனிக்கிறேன், படத்தை தரமாக உருவாக்குகிறார் இயக்குநர் சுசீந்திரன்.

இந்த படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளம் நடிக்கின்றனர். அவர்களுடைய நடிப்பு திறமை அபாரமானது. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், நன்றியையும் கூறிகொள்கிறேன்.

இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். பாஸ்கர் சக்தி வசனம் எழுதுகிறார். ஒளிப்பதிவு – விஜய் சக்ரவர்த்தி, எடிட்டர் – ஆண்டனி, ஆர்ட் டைரக்டர் – உதயகுமார், மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM), பப்ளிசிட்டி டிசைன்ஸ் – ட்யூனி ஜான் ஆகியோர் குழுவில் பணியாற்றுகின்றனர்.

இவர்களுடன் அறந்தாங்கி நிஷா, கனி அகத்தியன், புஷ்பா புகழ் சுனில், ரெடின் கிங்ஸ்லி, ஜி பி முத்து, தயாளன் உட்பட பல நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

‘Vallimayil’ will be important in Indian cinema; Suchindran

விஜயகாந்த் பாக்யராஜ் விஜய் அஜித் ஆகியோருடன் பணிபுரிந்த சின்னா மரணம்

விஜயகாந்த் பாக்யராஜ் விஜய் அஜித் ஆகியோருடன் பணிபுரிந்த சின்னா மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு சினிமா பாடலை நாம் ரசிக்க முக்கிய காரணம் அதன் இசையும் அந்த பாடல் வரிகளும் தான்.

அதன் பின்னரே பாடகர் யார் என்பதை நாம் அறிந்து கொள்ள முயல்வோம்.

ஆனால் பலருக்கும் அறியாத ஒரு விஷயம் என்னவென்றால் அந்த பாடலுக்கு நடனம் அமைத்தவர் யார்.?

ஒரு பாடலைக் கேட்க பாடல் வரிகள் மிக முக்கிய காரணமாக இருக்கலாம். ஆனால் ஒரு பாடலைப் பார்த்து ரசிக்க காரணமாக அமைவது நிச்சயமாக நடனம்தான்.

ஒரு பாடலைப் பார்த்த உடனே நாமும் ஆட தோன்றினால் அது தான் நடன இயக்குனரின் வெற்றி ஆகும்.

இந்த வரிசையில் பல படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்த சின்னா என்பவர் இன்று மரணமடைந்தார்

பாக்யராஜ் நடித்த முந்தானை முடிச்சு, தூரல் நின்னு போச்சு, தாவணி கனவுகள், அஜித் நடித்த அமராவதி, விஜயகாந்த் நடித்த வைதேகி காத்திருந்தாள், வானத்தை போல, விஜய் நடித்த செந்தூர பாண்டி, நேசம் உட்பட 200 க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய சின்னா வயது 69 இன்று மரணமடைந்தார்.

Dance master Chinna passed away

More Articles
Follows