தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் மீனா.
வளர்ந்து குமரி ஆனபிறகு தென்னிந்தியாவின் அனைத்து சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போட்டவர் மீனா.
அழகும் திறமையும் நிறைந்த மீனாவிற்கு கண்ணழகி என்ற பட்டப்பெயரும் உண்டு.
தமிழ் சினிமாவில் ரஜினி கமல்.. மலையாள சினிமாவில் மோகன்லால் மம்மூட்டி.. தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி வெங்கடேஷ்.. உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மீனா.
மேலும் அஜித் விஜய் பிரசாந்த் ஆகியோருடனும் நடித்துள்ளார் மீனா.
‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் ரஜினியுடன் குழந்தையாக நடித்தவர் மீனா.
பின்னர் எஜமான் முத்து வீரா படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்த மீனா 2009 ஆம் ஆண்டு தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.
அட்லி இயக்கிய ‘தெறி’ படத்தில் விஜய்யின் மகளாக நடித்தவர் நைனிகா.
மேலும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படத்தில் அரவிந்தசாமியின் மகளாகவும் நடித்தார் நைனிகா.
மீனா தன்னுடைய கணவருடன் பெங்களூருவில் வசித்து வந்தார்.
கடந்த ஆண்டு மீனா மற்றும் அவரது கணவர் வித்யாசாகர் கொரோனாவில் பாதிப்படைந்தனர்.
இவர்கள் கொரொனாவிலிருந்து மீண்டாலும் அதன் பக்கவிளைவுகளால் அதிகம் பாதிக்கப்பட்டவர் வித்யாசாகர்
நுரையீரலில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்துள்ளார் வித்யாசாகர்.
நுரையீரல் பாதிப்படையவே அதை மாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் வித்யாசாகர்.
நுரையீரல் டோனருக்காக (அதாவது நுரையீரல் தானமாக வழங்குபவர் எவரேனும் இருந்தால்) அவர்களுக்காகக் காத்திருந்த சூழ்நிலையில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால் நுரையீரல் முற்றிலும் செயலிழந்து உள்ளது. இதனால் எக்மோ சிகிச்சையில் இருந்துள்ளார்.
பின்னர் எம்ஜிஎம் மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்தார்.
மேலும் அவரது உடல் நிலைமை மோசம் அடைந்துள்ளது. எனவே சிகிச்சை பலன் இன்றி இன்று ஜூன் 28ஆம் தேதி இரவு காலமானார் வித்யாசாகர்.
தன் இளம் வயதிலேயே தன் கணவரை இழந்துள்ளார் நடிகை மீனா.
மேலும் நைனிகா தன் குழந்தை பருவத்தில் தன் தந்தையை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Actress Meenas husband Vidyasagar passes away.
கூடுதல் தகவல்..
அதாவது புறாக்களின் எச்சம் கலந்த காற்றைச் சுவாசிக்கிற போது உண்டாகக் கூடிய நோய். பெங்களூருவில் அவருடைய வீட்டுக்கு அருகே நிறைய புறாக்கள் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. அதனால் அலர்ஜி ஏற்பட்டு அவருக்கு சுவாசப் பிரச்னை ஏற்பட்டது. ஏற்கெனவே இந்தப் பாதிப்பு இருந்த நிலையில் கொரோனா வைரஸாலும் அவர் பாதிக்கப்பட்டார்