ரஜினியை அடுத்து ‘தாதா சாஹேப் பால்கே’ விருதுக்கு தேர்வான ‘பத்மஸ்ரீ’ ஆஷா பரேக்

ரஜினியை அடுத்து ‘தாதா சாஹேப் பால்கே’ விருதுக்கு தேர்வான ‘பத்மஸ்ரீ’ ஆஷா பரேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2020-ம் ஆண்டுக்கான தாதா சாஹேப் பால்கே விருது பிரபல திரைப்பட நடிகை ஆஷா பரேக் பெறுவதாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

புதுதில்லியில் நடைபெறும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்படும்.

இந்த முடிவு குறித்து அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்…

“இந்திய சினிமாவிற்கு திருமதி ஆஷா பரேக் வாழ்நாள் முழுவதும் மிகச்சிறந்த பங்களிப்பு செய்ததை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு தாதா சாஹேப் விருதுக்கான அறிவிப்பை வெளியிடுவதில் நான் பெருமை அடைகிறேன்” என்றார்.

2022 செப்டம்பர் 30 அன்று 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெறும் என்பதை அறிவித்த அமைச்சர், குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு இந்த விழாவிற்கு தலைமை தாங்குவார் என்றும் கூறினார்.

ஆஷா பரேக்

ஆஷா பரேக் புகழ்பெற்ற திரைப்பட நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் இவற்றுடன் இந்திய செவ்வியல் நடனக் கலைஞருமாவார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர், தில் தேக்கே தேக்கோ என்ற திரைப்படத்தின் மூலம் முன்னணி கதாநாயகியாக விளங்கினார். 95-க்கும் அதிகமான திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

1992-ல் ஆஷா பரேக் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

1998- முதல் 2001 வரை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் தலைவராக அவர் பணியாற்றியுள்ளார்.

ஐந்து உறுப்பினர் நடுவர் குழு திருமதி ஆஷாவுக்கு இந்த விருதினை வழங்கும் முடிவை மேற்கொண்டதாக அனுராக் தாக்கூர் கூறினார்.

நடுவர் குழு விவரம் 1) திருமதி ஆஷா போஸ்லே 2) திருமதி ஹேமமாலினி, 3) திருமதி பூனம் தில்லான், 4) திரு டி எஸ் நாகாபரணா, 5) திரு உதித் நாராயண்.

கூடுதல் தகவல்கள்…

இந்த விருது இதற்கு முன்பு ராஜ் கபூர், யாஷ் சோப்ரா, லதா மங்கேஷ்கர், மிருணாள் சென்,தேவிகா ராணி , அமிதாப் பச்சன் மற்றும் வினோத் கன்னா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது

கடந்தாண்டு இந்த உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது.

1960 முதல் 1980 கள் வரை கதாநாயகியாக நடித்த ஆஷா பரேக் பிரபல நடிகர் பரேக்கின் மகள் ஆவார்.

1960களில் முன்னணி நடிகர்களான ராஜ்கபூர், ஷம்மி கபூர், தேவ் ஆனந்த், தர்மேந்திரா என பலருடன் நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக 10 வயதாக இருந்தபோது மா (1952) படத்தில் நடித்தார்.

ஜப் பியார் கிசி சே ஹோதா ஹை (1961), ஃபிர் வோஹி தில் லயா ஹூன் (1963), தீஸ்ரி மன்சில் (1966) , பஹரோன் கே சப்னே (1967), பியார் கா மௌசம் (1969), மற்றும் கேரவன் (1971) இவரது புகழ்பெற்ற சூப்பர் ஹிட் படங்கள் ஆகும்.

சென்சார் போர்டின் தலைவராக பதவி வகித்துள்ளார். சென்சார் போர்ட் தலைவர் பதவியில் அமர்ந்த முதல் பெண் இவர்தான்.

சொந்தமாக நடனப்பள்ளியும், தனது பெயரில் ஒரு மருத்துவமனையையும் மும்பையில் நடத்தி வருகிறார் இவர்.

ஆஷா பரேக்

Actress Asha Parekh to be bestowed with Dadasaheb Phalke Award

டாக்டராகிறார் சுந்தர் .சி.; ‘காபி வித் காதல்’ குழுவினரின் குடும்பத்துக்கு ஆப்ரேசன் ப்ரீ – ஏ.சி.சண்முகம்

டாக்டராகிறார் சுந்தர் .சி.; ‘காபி வித் காதல்’ குழுவினரின் குடும்பத்துக்கு ஆப்ரேசன் ப்ரீ – ஏ.சி.சண்முகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காபி வித் காதல். இயக்குனர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

காபி வித் காதல்

மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தமிழகமெங்கும் இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.. வரும் அக்-7ஆம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று காலை சென்னையில் லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது..

படக்குழுவினருடன் புதிய நீதிக்கட்சி தலைவரும் இந்தப்படத்தின் தயாரிப்பாளருமான ஏ,சி.சண்முகம், ரெட் ஜெயண்ட் மூவிஸ் செண்பகமூர்த்தி, இயக்குனர் பேரரசு, கவிஞர் சினேகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.

இந்த படத்தின் தயாரிப்பாளரும் புதிய நீதிக்கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகம் பேசும்போது…

“நானும் சுந்தர் சியும் ரிஷி பட சமயத்தில் முதன்முதலாக விமானத்தில் தான் சந்தித்தோம். அப்போது இருந்து நல்ல நட்பு தொடர்ந்து வருகிறது. அரண்மனை-3 படத்தை அவரை நம்பி ஒப்படைத்தேன். நல்ல லாபம் கிடைத்தது.

ஏ.சி.சண்முகம்

இப்போது இரண்டாவது முறையாக காபி வித் காதல் படத்தையும் சிறப்பாகவே எடுத்துக் கொடுத்திருக்கிறார். அடுத்து நாங்கள் இருவரும் மூன்றாவதாக இணையும் படம் மிகப்பெரிய படமாக இருக்கும். இந்த படத்தில் ரம்பம்பம் பாடலில் குஷ்புவும் ஆடியிருக்கலாம் என்பது என்னுடைய எண்ணம்.

இந்த இடத்தில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறேன். இந்த படத்தில் பணியாற்றியுள்ள 200 ஒரு தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை தரும் விதமாக அனைவருக்குமே இலவச சிகிச்சை கார்டு வழங்க இருக்கிறேன்.

சாதாரண சிகிச்சை முதல், அறுவை சிகிச்சை வரை இந்த 200 பேரின் குடும்பத்துக்குமே இலவசம்தான்.

அதேபோல என்னுடைய கல்லூரியில் படித்துள்ள 4000 மாணவர்களுக்கு அடுத்த மாதம் பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது. அந்த நிகழ்வின்போது இயக்குனர் சுந்தர்.சி யின் பன்முகத்தன்மை கொண்ட உழைப்பையும் பணியையும் பாராட்டி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க இருக்கிறோம்” என்று கூறினார்.

காபி வித் காதல்

*நடிகர்கள்*

ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி

*தொழில்நுட்பக்குழு*

எழுத்து, இயக்கம் – சுந்தர் சி
தயாரிப்பு – அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட்
மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் குஷ்பு சுந்தர்.C , ACS அருண் குமார்
இசை – யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு – E.கிருஷ்ணசாமி
படத்தொகுப்பு – ஃபென்னி ஆலிவர்
கலை – குருராஜ். B
நடனம் – ராஜு சுந்தரம், ராபர்ட், சாண்டி,தீனா
சண்டை பயிற்சி – தளபதி தினேஷ்
நிர்வாக தயாரிப்பு – பாலா கோபி
மக்கள் தொடர்பு – ரியாஸ் K அஹ்மத்

காபி வித் காதல்

Coffee withs kadhal Producer A. C. Shanmugam speech

லேட்டா தொடங்கினாலும் லேட்டஸ்ட் ட்ரெண்டிங்.; அதிகாலை காட்சிகள் தேவையில்லை.. தாணு அதிரடி விளக்கம்

லேட்டா தொடங்கினாலும் லேட்டஸ்ட் ட்ரெண்டிங்.; அதிகாலை காட்சிகள் தேவையில்லை.. தாணு அதிரடி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹீரோ மற்றும் வில்லன் என தனுஷ் இரு வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘நானே வருவேன்’.

இந்த படத்தை செல்வராகவன் இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை தாணு தயாரித்துள்ளார்.

செப்டம்பர் 29ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்திற்கு போதுமான புரமோஷன் இல்லை என தனுஷ் ரசிகர்கள் கூறி வந்தனர்.

ஆனால் திடீரென லேட்டாக தொடங்கினாலும் லேட்டஸ்டாக தொடங்கி அதிரடி ப்ரோமோஷன் செய்து வருகிறார் தாணு.

‘நானே வருவேன்’ பட தொடர்பான செய்திகள் வெளியாகி ட்ரெண்டிங்கில் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இந்த படத்திற்கு அதிகாலை காட்சிகள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் அதிகாலை காட்சிகள் தேவையில்லை என தாணு ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதில்… “நான் தயாரித்த அசுரன் & கர்ணன்.. இரண்டையுமே நான் காலை 8 மணி காட்சிக்குத்தான் வெளியிட்டேன்.

தமிழகத்தில் சில ஊர்களில் மட்டும்தான் அதிகாலை 4 & 5 மணிக்கு காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.

மற்ற ஊர்களில் பொதுவாக 8 மணிக்கு தான் காட்சிகள் தொடங்குகின்றன.

அப்போதுதான், உலகம் முழுக்க அனைவராலும் ஒரே நேரத்தில் படத்தை பார்க்க முடியும்.

மற்றொரு காரணம்.. அதிகாலை 4 மணி காட்சிக்கு நள்ளிரவே திரையரங்குக்கு ரசிகர்கள் வந்துவிடுகின்றனர். அது தேவையில்லை என நினைக்கிறேன்.

எனவே தான் அதிகாலை 4 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது” என நியாயமான காரணத்தை கலைப்புலி எஸ் தாணு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Why early morning shows cancelled for Dhanush mivies

செல்வராகவன் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின்

செல்வராகவன் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு பக்கம் நடிப்பு..ஒரு பக்கம் இயக்கம் என பிசியாக இருந்து வருகிறார் செல்வராகவன்.

இவர் தனது தம்பி தனுஷை வைத்து தற்போது இயக்கியுள்ள படம் ‘நானே வருவேன்’. மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் செல்வராகவன்.

தனுஷ் இரு வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இந்துஜா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்

செப்டம்பர் 29ல் வரும் வியாழன் அன்று உலகம் முழுவதும் இப்படம்வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் செல்வராகவன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இது நட்பு ரீதியான சந்திப்பு தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எங்கள் வீட்டிற்கு வருகை தந்தது மகிழ்ச்சியான தருணம் ” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Tamilnadu CM Stalin surprise visit to Selvaraghavan home

படைப்பு சுதந்திரம் இல்லாமல் ஓடிடி பக்கம் சாயும் டைரக்டர் மாரி செல்வராஜ்.?!

படைப்பு சுதந்திரம் இல்லாமல் ஓடிடி பக்கம் சாயும் டைரக்டர் மாரி செல்வராஜ்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் படைப்பாளிகளுக்கு சுதந்திரம் இல்லை என பல ஆண்டுகாலமாகவே இயக்குனர்கள் சொல்லி வருகின்றனர்.

ஆனால் இதற்கு தீர்வு அளிக்கும் விதமாக சமீப காலமாக வெப் சீரிஸ் மூலமாக ஓடிடி தளங்கள் இவர்களுக்கு உதவியாக உள்ளன.

இந்த தளங்களில் தான் சொல்ல வரும் கருத்தை மிகவும் விளக்கமாகவும் தெளிவாகவும் சென்சார் போன்ற எந்த கட்-களும் இல்லாமல் எந்த காட்சிகளையும் நீக்காமல் இவர்களால் சொல்ல முடிகிறது.

இந்த நிலையில் மாரி செல்வராஜ் தற்போது புதிதாக வெப்சீரிஸ் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அதை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தன் கருத்தை முழுமையாக இந்த தளத்தில் சொல்ல முடியும் என நம்புகிறாராம் இயக்குனர்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமன்னன்’ இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்தில் உதயநிதி, பகத்பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்டோர் நடிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்.

மாமன்னன்

உதயநிதி தன் சொந்த பேனரில் இந்த படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mari Selvaraj will direct Web series for OTT

சிம்புவுக்கு கார்.. கௌதம் மேனனுக்கு பைக்.; கூல் சுரேஷுக்கு ஐசரி கணேஷ் கொடுத்த கிஃப்ட் இதோ..

சிம்புவுக்கு கார்.. கௌதம் மேனனுக்கு பைக்.; கூல் சுரேஷுக்கு ஐசரி கணேஷ் கொடுத்த கிஃப்ட் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார்.

இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான நிலையில் இந்தப் படத்தின் வெற்றிக்காக பத்திரிகையாளர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர் படக்குழுவினர்.

செப்டம்பர் 24ல் சென்னை லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் படக்குழுவினர் வெ. த. கா. பட வெற்றி விழாவை கொண்டாடினர்.

கூல் சுரேஷ்

இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் சுந்தர் சி நடிகர் வைபவ், மகத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனை கொண்டாடும் விதமாக இயக்குனர் கௌதம் மேனனுக்கு புல்லட் பைக் ஒன்றை பரிசாக கொடுத்தார் ஐசரி கணேஷ். இந்த பைக்கின் மதிப்பு இரண்டு லட்சம் இருக்கும் என்கிறார்கள்.

நடிகர் சிம்புவுக்கு 1 கோடி மதிப்பிலான சொகுசு கார் ஒன்றையும் ஐசரி கணேஷ் பரிசாக வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் பிரமோஷனுக்கு தீவிரமாக கடந்த 1 வருடமாக பணியாற்றிய கூல் சுரேஷிற்கு ஒன்றுமே கொடுக்கவில்லை என நெட்டிசன்கள் மற்றும் சிம்பு ரசிகர்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர்.

சிம்புவுக்கு கார்.. கௌதமுக்கு பைக் என்று கொடுத்தது போல அட்லீஸ்ட் கூல் சுரேஷ் அவர்களுக்கு ஒரு சைக்கிள் ஆவது கொடுத்திருக்கலாம் என நெட்டிசன்கள் மீம்ஸ் போட தொடங்கினர்.

கூல் சுரேஷ்

இந்த நிலையில் நடிகர் கூல் சுரேஷிற்கு ஐபோன் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

மேலும் கூல் சுரேஷ் குழந்தைகளின் கல்விச் செலவையும் ஏற்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.

இது தொடர்பான படங்கள் & வீடியோக்களை கூல் சுரேஷ் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூல் சுரேஷ்

Ishari Ganesh gifted IPhone to Cool Suresh for VTK success

கூல் சுரேஷுக்கு காஸ்ட்லி கிஃப்ட் தந்த ஐசரி கணேஷ் l VTK Success: Ishari Ganesh gifted Cool Suresh STR
❤‍? filmistreet??

https://youtube.com/shorts/hVEia-6MCUU?feature=share

சிம்பு பட தயாரிப்பாளரை பூஜை அறையில் வைத்து வணங்கும் கூல் சுரேஷ் VTK Simbu Cool Suresh Ishari Ganesh ? filmistreet??

https://youtube.com/shorts/96rP7BLuBhM?feature=share

More Articles
Follows