தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஹிப் ஹாப் ஆதி & விவேக் நடிப்பில் உருவான ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ஆத்மிகா.
தற்போது கோடியில் ஒருவன், கண்ணை நம்பாதே ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.
இவருக்கு இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர்.
இவர் இன்று தனது ட்விட்டரில்…
“நடிகர் விவேக் அவர்களின் நினைவாக இன்று எனது வீட்டில் சில மரக்கன்றுகளை நட்டுள்ளேன்.
என்னால் இயன்ற இடங்களில் எல்லாம் இந்த பணியைச் செய்ய முடிவு செய்துள்ளேன்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீரின் தேவை இதையெல்லாம் முன்கூட்டியே உணர்ந்து அன்றே மக்களுக்கு நன்மை சேர்க்கும் பணியைத் துவங்கியுள்ளார்.
அவர் விட்டுச்சென்ற ஒரு கோடி மரங்கள் நடுவது என்ற அவரின் மகத்தானக் கனவை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம்.
– நடிகை ஆத்மிகா”
இவ்வாறு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஆத்மிகா.
நடிகர் திரு.விவேக் அவர்களின் நினைவாக இன்று எனது வீட்டில் சில மரக்கன்றுகளை நட்டுள்ளேன்.என்னால் இயன்ற இடங்களில் எல்லாம் இந்த பணியைச் செய்ய முடிவு செய்துள்ளேன்.
அவர் விட்டுச்சென்ற ஒரு கோடி மரங்கள் நடுவது என்ற அவரின் மகத்தானக் கனவை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம்.#GreenKalam pic.twitter.com/mnLBDtCCwe— Aathmika (@im_aathmika) April 20, 2021
Actress Aathmika plants saplings in rememberance of actor Vivek