தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடித்த ‘லியோ’ வெளியாகி 12 நாட்களைக் கடந்துள்ள நிலையில் வெற்றி விழா மிகப்பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் பேசியதாவது
“என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா.. நண்பிகள்.. உண்மைய சொல்லணும்னா நீங்க தான் என்னை உங்க நெஞ்சுல குடி வச்சிருக்கீங்க.. நான் குடியிருக்கும் கோயில்..
இது கொஞ்சம் சினிமா டயலாக் மாறி தெரியலாம்… நீங்க காட்டுற அன்புக்கு, என் உடம்ப செருப்பா தச்சு உங்களுக்கு போட்டாக் கூட பத்தாது.. நீங்க எல்லாம் பிளடி ஸ்வீட்” என பேச ஆரம்பித்தார் விஜய்.
பின்னர் வழக்கம்போல குட்டி கதை சொன்னார்.
ஒரு காட்டுக்கு 2 பேர் வில், அம்பு வச்சிக்கிட்டு வேட்டைக்குச் போனாங்க… அந்தக் காட்டில் சிங்கம், புலி போன்ற மிருகங்களுடன் காக்கா, கழுகு போன்றவை இருந்தன.
ஒரு வேடன் தனது வில்லால் முயல் ஒன்றை அம்பெய்தி கொன்றான். மற்றொரு வேடனோ யானைக்கு குறி வைத்தான். ஆனாலும் அவனால் யானையை வீழ்த்த முடியவில்லை.
இப்போது சொல்லுங்கள் இதில் யார் ஜெயித்தவர்.? என்னை பொருத்தவரை யானையைக் கூறி வைத்தவனே வெற்றி பெற்றவன். அவனது நோக்கம் பெரியதாக உள்ளது இப்போது வெற்றி இல்லை என்றாலும் பின்னர் வெற்றி வரும்.
Small aim is crime என அப்துல் கலாம் சொல்லியிருக்கிறார். பாரதியார், பெரிதினும் பெரிது கேள் என சொல்லியுள்ளார். ஆகவே, பெரிய விஷயத்தையே குறிக்கோளாக கொள்ள வேண்டும்” என்று விஜய் குட்டிக்கதை கூறினார்.
சோஷியல் மீடியாவில் சமீப காலமாக ரசிகர்கள் கோபப்படுவதை கண்டித்தார் விஜய்.
“நமக்கு நிறைய பெரிய வேலைகள் இருக்கு, தேவையில்லாமல் சோஷியல் மீடியாவில் கோபப்பட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம்” என பேசினார்.
Actor Vijay kutty story at Leo success event