தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நட்டி நடித்த ‘சதுரங்கவேட்டை’ படத்தில் ரைஸ் புல்லிங் இரிடியம் மோசடி பற்றிய காட்சிகள் இருக்கும். இந்த படம் வெளியானபோது இந்த மோசடி பரபரப்பாக பேசப்பட்டது.
தற்போது இந்த மோசடி ஒரு சினிமா நடிகரிடமே நடந்துள்ளது.
கிழக்கு சீமையிலே, பசும்பொன், மண்ணுக்கு மரியாதை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் விக்னேஷ்.
தற்போது டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
அண்மையில் நந்தா பெரியசாமி இயக்கிய ‘ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் நடித்து இருந்தார்.
இந்த நிலையில் இரிடியம் மோசடி கும்பலிடம் 2 கோடி ரூபாய் வரை விக்னேஷ் ஏமாந்துள்ளதாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: …
“நான் 30 வருடங்கள் சினிமாவில் நடிக்கிறேன். இத்துடன் சொந்தமாகவும் தொழில் செய்து வருகிறேன்.
எனது கடையில் வாடகைதாரராக இருந்த ராம்பிரபு என்பவர் என்னிடம் பழகினார்.
அவர் இரிடியம் விற்கும் தொழிலை சட்டபூர்வமாக செய்வதாக சொல்லி அதில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும்” என்றார்.
என்னிடம் ரூ.5 லட்சம் கொடுத்தால், ரூ.500 கோடியாக திருப்பி தருகிறேன் என நம்பிக்கை ஊட்டும் வகையில் பேசினார்.
அவரின் பேச்சை நம்பி நான் எனது வங்கி கணக்கு மூலமாகவும், மேலும் கடனாக பெற்றும் ரூ.1.81 கோடி கொடுத்தேன்.
ஆனால் அதன் பிறகு அவர் என்னிடம் பேசுவதை தவிர்த்தார்.
என்னைப்போல நிறைய பேர்களிடம் அவர் இதுபோல் பணம் வசூலித்திருப்பது தெரிய வந்தது. அவர் மோசடி பேர்வழி என்றும் தகவல் வந்தது.
யாருக்கும் சொன்னபடி பணம் கொடுக்கவில்லை.
என்னைப்போல 500 பேரிடம் ராம்பிரபு பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவர் மீதும், அவருடன் இருப்பவர்கள் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் நடிகர் விக்னேஷ் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையில் மோசடி வழக்கில் விருதுநகர் போலீசார் ராம்பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Actor Vignesh loses crores to Iridium scam gang