ஃபேமிலி த்ரில்லர் படமாக உருவாகும் ‘ரீவைண்ட்’ – தேஜ் நடித்து இயக்குகிறார்

ஃபேமிலி த்ரில்லர் படமாக உருவாகும் ‘ரீவைண்ட்’ – தேஜ் நடித்து இயக்குகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் உருவான ‘காதலுக்கு மரணமில்லை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான தேஜ், தொடர்ந்து ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘காந்தம்’ ஆகிய
படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவரது நடிப்பில் ‘மொழிவது யாதெனில்’, ‘விண்ணை தொடு’
ஆகியப் படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

தற்போது நடிப்புடன் இயக்கத்திலும் கவனம் செலுத்தும் தேஜ், குடும்ப த்ரில்லர் ஜானரில் ஒரு படத்தை
இயக்கி ஹீரோவாக நடிக்கிறார்.

‘ரீவைண்ட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் கன்னடம் என இரு மொழிகளில்
உருவாகிறது. பனரோமிக் ஸ்டுடியோ (Panaromic Studios) நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில்
தேஜுக்கு ஜோடியாக சந்தனா ராகவேந்திரா நடிக்கிறார். இவர்களுடன் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக
இருக்கும் நடிகர், நடிகைகள் பலர் நடிப்பதோடு, இயக்குநர் கே.பாலச்சந்தர் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட
பழம்பெரும் நடிகர் சுந்தரராஜன் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். அத்துடன், முக்கிய வேடத்தில்
‘கே.ஜி.எப்’புகழ் சம்பத், கிஷோர் ஆகியோர்ரும் முக்கிய வேடங்களில் நடிக்க, கொரியன் சூப்பர் ஸ்டார்
ஒருவரும் கேமியோ வேடம் ஒன்றில் நடிக்கிறார்.

பிரேம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானிடம் கீ போர்ட் பிளேயராக பணியாற்றிய சபேஷ்
சாலமோன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். வினோத் பசவராஜ் எடிட்டிங் செய்ய, நாகேந்திர பிரசாத்
பாடல்கள் எழுதுகிறார். ஸ்டார் நாகி நடனம் அமைக்க, செல்வம் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, மக்கள்
தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார்.

ஜெர்மனி, சிங்கப்பூர், லூத்தானியா போன்ற வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ள இப்படம் வித்தியாசமான
திரைக்கதை யுக்தியோடு விறுவிறுப்பான த்ரில்லர் படமாகவும் அதே சமயம் குடும்ப உறவுகளை மையமாக
வைத்த ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராகவும் உருவாக உள்ளது.

மே 6 ஆம் தேதி எளிமையான முறையில் படப்பிடிப்பை தொடங்கிய ‘ரீவைண்ட்’ குழுவினர், மே 27 ஆம்
தேதி முதல் ஜெர்மனியில் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.

படம் குறித்து இயக்குநரும், ஹீரோவுமான தேஜிடம் கேட்டதற்கு, “4 வருடங்கள் இடைவெளியாகிவிட்டது.
ஆனால், இந்த நான்கு வருடத்தில் என் படம் வெளியாகவில்லை என்றாலும், நான் சினிமாவில் தான்
இருந்தேன். கதை எழுதுவது, வித்தியாசமான முறையில் திரைக்கதை அமைத்தல் என்று நான்கு வருடங்களாக
இப்படத்தை உருவாக்கியிருக்கிறேன்.

தமிழ் சினிமா தற்போது ஹாலிவுட் சினிமாவுக்கு நிகராக வளர்ந்திருக்கிறது. பல இளைஞர்கள் வித்தியாசமான
கதைக்களத்தோடு வெற்றி பெறுகிறார்கள், அந்த வரிசையில் நானும் ‘ரீவைண்ட்’ மூலம் வெற்றி பெறுவேன்.

த்ரில்லர் படம் என்றாலும் அதை குடும்ப பின்னணியில் சொல்லியிருப்பது என் படத்தின் பெரிய பலமாக
கருதுகிறேன். படத்தை பல வெளிநாடுகளில் படமாக்குவதற்கு காரணம், ஹீரோ ஒரு விஷயம் குறித்து
ஆராயும் போது அதனை கண்டுபிடிக்கும் மெடிக்கல் தொழில்நுட்பம், ஜெர்மனியில் இருப்பதை அறிகிறார்.
அதன்படி ஜெர்மனி உள்ளிட்ட சில வெளிநாடுகளுக்கு செல்பவர், அந்த நாட்டு அறிவியல் தொழில்நுட்பங்களை
இந்தியாவுக்கு கொண்டு வந்து அதன் மூலம், இங்கு நடக்கும் கார்ப்பரேட் க்ரைம் தொடர்பான விஷயங்களை
ஆராய்கிறார்.

படத்தில் ஹீரோவுக்கு பத்திரிகை நிருபர் வேடம். அவர் கண்டுபிடிக்கும் சில கார்ப்பரேட் க்ரைம் மூலம் அவரது
குடும்பத்திற்கு பிர்ச்சினைகள் வர, அதில் இருந்து அவர்களை அவர் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
அதன் பின்னணியில் நடக்கும் சஸ்பென்ஸும், த்ரில்லரும் நிச்சயம் ரசிகர்களை கவரும்.” என்றார்.

‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ பட டப்பிங் துவங்கியது.!

‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ பட டப்பிங் துவங்கியது.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)பெரும் கொண்டாட்டத்தோடு #குண்டு படத்தை ஆரம்பித்து ஒவ்வொரு தருணங்களையும் , நிகழ்வுகளையும் உண்மையின் பக்கம் நின்று ஜனரஞ்சகமாக அனைவரும் ரசித்து கொண்டாடும் வகையில் ஒரு படைப்பை உருவாக்கி இன்று படத்தின் டப்பிங் பணிகளை துவங்குகிறோம்.

தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பின் இரண்டாவது தயாரிப்பு தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தும் ஒரு படைப்பாக இருக்கும் என்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.

இயக்குனர் அதியன் ஆதிரை வட தமிழகத்தின் வாழ்வியலை அனைவரும் குடும்பமாக ரசிக்கும் விதமாக படமாக்கியிருக்கிறார்.

மகிழ்ச்சி….!

“விஜய் சேதுபதி” நடிப்பில் விஜய் சந்தர் இயக்கியுள்ள புதிய படம் ” சங்கத்தமிழன் “

“விஜய் சேதுபதி” நடிப்பில் விஜய் சந்தர் இயக்கியுள்ள புதிய படம் ” சங்கத்தமிழன் “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectபாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், தளபதி விஜயின் பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ்.

பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் தயாரித்துள்ள இந்த சங்கத்தமிழன் டத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ளார் .

பி.பாரதி ரெட்டி அவர்களுக்கு இது 6 வது படமாகும்.

விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷிக்கண்ணா மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர் .இவர்களுடன் இந்த படத்தில் நாசர் , சூரி ,அசுதோஷ் ராணா , ரவி கிஷான் , மொட்டை ராஜேந்திரன் , மாரிமுத்து , ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளார்.

ஒளிப்பதிவு R . வேல்ராஜ் , கலை இயக்கம் M .பிரபாகரன், சண்டை பயிற்சி அனல் அரசு , மற்றும் படத்தொகுப்பினை பிரவீன் K .L மேற்கொள்கிறார்.

இந்த படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தலைப்பு இன்று வெளியாகியுள்ளது .

தொழில்நுட்பக்குழு :

இயக்கம் – விஜய் சந்தர்

தயாரிப்பு – பி.பாரதி ரெட்டி

ஒளிப்பதிவு – R.வேல்ராஜ்

படத்தொகுப்பு – பிரவீன் K.L

சண்டை பயிற்சி – அனல் அரசு

கலை இயக்குனர் – பிரபாகர்

நிர்வாக தயாரிப்பு – ரவிச்சந்திரன் , குமரன் .

மக்கள் தொடர்பு -ரியாஸ் கே அஹமது.

அர்ஜூனுடன் இணைந்து ரம்ஜான் விருந்தளிக்கும் விஜய் ஆண்டனி

அர்ஜூனுடன் இணைந்து ரம்ஜான் விருந்தளிக்கும் விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kolaigaran movie set to release on 5th June as Ramzan specialஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து இசையமைத்து இருக்கும் படம் ‘கொலைகாரன்’.

இதில் மற்றொரு நாயகனாக அர்ஜூன் நடித்திருக்கிறார்.

நாயகியாக ஆஷிமா நர்வால் நடிக்க, நாசர், சீதா, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

தியா மூவிஸ் சார்பில் பிரதீப் தயாரித்துள்ள இப்படத்தை பாப்டா தனஞ்செயன் வெளியிடுகிறார்.

முகேஷ் ஒளிப்பதிவு செய்ய ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பை செய்துள்ளார்.

இப்படத்தை உலகமெங்கும் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் செய்கின்றனர்.

Kolaigaran movie set to release on 5th June as Ramzan special

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்-சூரி-யோகி பாபு

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்-சூரி-யோகி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aishwarya Rajesh Soori and Yogi Babu team up with Sivakarthikeyan in SK16முன்பெல்லாம் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது ஆண்டுக்கு 2 படங்களை கொடுக்கும் முடிவில் மளமளவென படங்களை ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார்.

இவரது கைவசம் 5 படங்கள் உள்ள நிலையில், அதில் ஒன்றான பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

டி.இமான் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் தயாரிக்கிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அனு இம்மானுவேல் நடிக்கவுள்ளனர்.

இவர்களை தொடர்ந்து முன்னணி காமெடியன்கள் யோகி பாபு மற்றும் சூரி ஆகியோரும் இணைந்துள்ளனர்.

இவர்களுடன் பாரதிராஜா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறாராம்.

கனா படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ளார். சூரி மற்றும் யோகி பாபு இருவரும் சிவகார்த்திகேயனுடன் சில படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

Aishwarya Rajesh Soori and Yogi Babu team up with Sivakarthikeyan in SK16

தடகள போட்டியை மையபடுத்தும் படத்தில் நடிகர் ஆதி

தடகள போட்டியை மையபடுத்தும் படத்தில் நடிகர் ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)ஒவ்வொரு படத்திலும் தொடர்ச்சியாக வெற்றியை சுவைத்து வரும் நடிகர் ஆதியின் கதை தேர்வு பாணி அவரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. டிராமா, திரில்லர், ஃபேண்டஸி என அனைத்த் வகை திரைப்படங்களிலும் தனது மகத்தான நடிப்பால் நட்சத்திரமாக பிரகாசித்திருக்கிறார். தற்போது அறிமுக இயக்குனர் பிரித்வி ஆதித்யா இயக்கும் தடகள விளையாட்டு அடிப்படையிலான படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

“நான் ஸ்கிரிப்ட்டை, கதாபாத்திரத்தை எழுதி முடித்த உடனே அந்த கதாபாத்திரத்தில் ஆதி சாரை தான் நினைத்து கற்பனை செய்து பார்த்தேன். தடகள வீரருக்கு தேவையான கட்டுமஸ்தான உடலை அவர் கொண்டிருப்பது தான் முதன்மையான காரணம். ஸ்கிரிப்ட் முடிந்ததும், நான் அவரை சந்தித்து ஸ்கிரிப்டை விவரிக்க முடிவு செய்தேன். அவரது அடுத்தடுத்த படங்கள் பெரிய அளவில் இருந்தன, இது நடக்குமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. இறுதியாக, இந்த படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவது என்னை மேலும் உற்சாகப்படுத்தி இருக்கிறது, மிகச் சிறப்பான படத்தை கொடுக்க முயற்சி செய்வேன். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. பிரவீன்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். அவர் முதன் முதலில் ஒளிப்பதிவு செய்த ஜீவி திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அவர் செய்த ‘மண்ணின் மைந்தர்கள்’ சிறப்பு நிகழ்ச்சி மிகவும் பிரபலம்” என்றார்.

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக விளையாட்டு அடிப்படையிலான திரைப்படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன, ஆனால் இந்த படம் அதில் இருந்து விதிவிலக்கானது என்று உறுதியளிக்கிறார் இயக்குனர் பிரித்வி. “இது ‘தடகள’ விளையாட்டு உலகில் நடக்கும் கதை, தனது கனவுகளை நிறைவேற்ற கதாநாயகன் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி பேசும் ஒரு படம்” என்றார்.

நாயகியாக நடிக்க தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஒளிப்பதிவாளர் பிரவீன்குமார் தவிர்த்து, படத்தொகுப்பாளர் ராகுல் மற்றும் கலை இயக்குனர் வைரபாலன் ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐபி கார்த்திகேயன்.

பிஎம்எம் ஃபிலிம்ஸ் மற்றும் கட்ஸ் & குளோரி ஸ்டுடியோஸ் ஜி மனோஜ், ஜி ஸ்ரீஹர்ஷா ஆகியோருடன் இணைந்து தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகிறது.

More Articles
Follows