தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் தென்னிந்திய அளவில் உள்ளனர்.
திரையுலகைத் தாண்டியும் இவர் சமூக பணிகளில் ஈடுப்பட்டு வருவதால், இவரின் மீதான நன்மதிப்பு பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சூர்யாவை பார்க்க வேண்டும் என ஒரு சிறுவன் ஆசைப்பட்டுள்ளான்.
அந்த சிறுவனம் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தான்.
சிறுவனின் ஆசையை அறிந்த சூர்யா அவனை தன் வீட்டிற்கு அழைத்து அவனிடம் சிறிது நேரம் செலவிட்டுள்ளார்.
சிறுவனுக்காக சிவகுமார் தான் வரைந்த ஓவியம் ஒன்றை பரிசளித்துள்ளார்.
அப்போது சூர்யாவுடன் அவரது தம்பி நடிகர் கார்த்திய்யும் இருந்துள்ளார்.
மேலும் அந்த சிறுவனின் மருத்துவச் செலவு முழுவதையும் தான் ஏற்கவுள்ளதாக சூர்யா தெரிவித்துள்ளார்.