தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நீட் தேர்வு முறையால் தன் மருத்துவ கனவை பறிக்கொடுத்த மாணவி அனிதா தற்கொலை செய்துக் கொண்டார்.
இது தொடர்பாக பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்கள் இன்றுவரை தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கல்விக்காக பல உதவிகளை செய்துவரும் நடிகர் சூர்யா இதுகுறித்து பிரபல நாளிதழ் ஒன்றுக்கு தன் கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில்… ‘ஏழைகளுக்கு ஒரு கல்வி, பணம் படைத்தவர்களுக்கு ஒரு கல்வி. பிறகு, இருவருக்கும் ஒரே முறையான தேர்வு என்பதை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தரமான கல்வியை அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும்.
வசதியில்லாத மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில்தான் கல்வியை கற்கிறார்கள்.
ஆங்கிலம், இந்தி தவிர அந்தந்த மாநில மொழிகளிலும் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்’ எனவும் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
Actor Suriya talks about Educational system in India