தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் சிலர் ரீல் ஹீரோக்களாக மட்டுமே இருக்கும் நிலையில் சினிமாவையும் தாண்டி ரியல் ஹீரோவாக திகழ்கிறார் நடிகர் சூர்யா.
இவர் கடந்த ஆண்டு கல்வி குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரஜினி பேசினால் மட்டுமல்ல சூர்யா பேசினாலும் மோடிக்கு கேட்கும். அவரின் கல்வி குறித்த பார்வை சரியானதே, அவர் அகரம் பவுண்டேசன் மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார் என ரஜினி பேசியிருந்தார்.
இந்த நிலையில், அகரம் அறக்கட்டளை சார்பில் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் அகரம் அறக்கட்டளை நிறுவனரும் நடிகருமான சூர்யா, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அகரம் மாணவி காயத்ரி பேசும்போது தான் இப்போது ஒர நல்ல ஆசிரியராக இருக்கிறேன். அதற்கு முக்கிய காரணம் அகரம் தான் என்று பேசி தன் குடும்ப கஷ்டங்களை உருக்கமாக கூறினார்.
இவரின் பேச்சை 10 நிமிடம் கேட்ட சூர்யா கன்ட்ரோல் செய்ய முடீயாமல் கண் கலங்கிய படி உட்கார்த்திருந்தார்.
இறுதியாக மாணவியை தட்டி கொடுத்து ஆறுதல் கூறினார் அவரும் அழுதார்.
இந்த சம்பவத்தை பார்த்தவர்கள் அனைவரும் கண் கலங்கினர்.
Actor Suriya burst into tears at Agaram event video goes viral