அகரம் மாணவியின் பேச்சை கேட்டு தேம்பி அழுத நடிகர் சூர்யா

அகரம் மாணவியின் பேச்சை கேட்டு தேம்பி அழுத நடிகர் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Suriya burst into tears at Agaram event video goes viralதமிழ் சினிமாவில் சிலர் ரீல் ஹீரோக்களாக மட்டுமே இருக்கும் நிலையில் சினிமாவையும் தாண்டி ரியல் ஹீரோவாக திகழ்கிறார் நடிகர் சூர்யா.

இவர் கடந்த ஆண்டு கல்வி குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரஜினி பேசினால் மட்டுமல்ல சூர்யா பேசினாலும் மோடிக்கு கேட்கும். அவரின் கல்வி குறித்த பார்வை சரியானதே, அவர் அகரம் பவுண்டேசன் மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார் என ரஜினி பேசியிருந்தார்.

இந்த நிலையில், அகரம் அறக்கட்டளை சார்பில் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் அகரம் அறக்கட்டளை நிறுவனரும் நடிகருமான சூர்யா, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அகரம் மாணவி காயத்ரி பேசும்போது தான் இப்போது ஒர நல்ல ஆசிரியராக இருக்கிறேன். அதற்கு முக்கிய காரணம் அகரம் தான் என்று பேசி தன் குடும்ப கஷ்டங்களை உருக்கமாக கூறினார்.

இவரின் பேச்சை 10 நிமிடம் கேட்ட சூர்யா கன்ட்ரோல் செய்ய முடீயாமல் கண் கலங்கிய படி உட்கார்த்திருந்தார்.

இறுதியாக மாணவியை தட்டி கொடுத்து ஆறுதல் கூறினார் அவரும் அழுதார்.

இந்த சம்பவத்தை பார்த்தவர்கள் அனைவரும் கண் கலங்கினர்.

Actor Suriya burst into tears at Agaram event video goes viral

ரஜினியின் ‘தர்பார்’ படத்திற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு

ரஜினியின் ‘தர்பார்’ படத்திற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karnataka team oppose Darbar release in tamil versionமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த படம் ரிலீசாகிறது.

ரஜினி படங்களுக்கு எப்போதும் பெரிய எதிர்பார்ப்பு நிலவுவதால் கர்நாடகாவிலும் நிறைய தியேட்டர்களில் படத்தை வெளியிடுகின்றனர்.

இந்த நிலையில் தர்பார் படத்தை ரிலீஸ் செய்ய கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கர்நாடகாவில் நேரடி தமிழ் படமாக தர்பாரை வெளியிட உள்ளனர்.

ஆனால் கன்னட மொழியில் மாற்றினால் மட்டுமே கர்நாடகாவில் வெளியிட வேண்டும். இல்லையேல் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட அமைப்பு கூறியுள்ளது.

இதனால் கர்நாடக விநியோகஸ்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதற்கு முன்பு ரஜினியின் காலா படத்துக்கும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆனால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் படம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Karnataka team oppose Darbar release in tamil version

தனுஷின் ‘கர்ணன்’ படத்தலைப்பை மாற்ற தாணுக்கு கோரிக்கை

தனுஷின் ‘கர்ணன்’ படத்தலைப்பை மாற்ற தாணுக்கு கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivaji fans request to Thanu to change title of Dhanushs Karnanபரியேறும் பெருமாள் படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து அந்த பட இயக்குனர் மாரி செல்வராஜிடன் கை கோர்த்தார் நடிகர் தனுஷ்.

இவர்கள் இணையும் படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரித்து வருகிறார்.

இதில் நாயகியாக மலையாள நடிகை ரெஜிஷ் விஜயன் நடிக்க முக்கிய வேடத்தில் யோகிபாபு நடித்து வருகிறார்.

இந்த படத்தின் தலைப்பு கர்ணன் எனவும் பட சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தலைப்பை மாற்ற வேண்டும் என சிவாஜி ரசிகர் சந்திரசேகரன் மற்றும் சிவாஜி சமூக நலப்பேரவை தயாரிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற கர்ணன் திரைப்படம். மகாபாரத கர்ணன் கேரக்டருக்கு இந்த பட தலைப்பு களங்கும் விளைக்கும் வகையில் இந்த படத்தலைப்பு உள்ளதாக அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் கர்ணன் படத்தலைப்புடன் ஏதேனும் வார்த்தைகளை சேர்த்து தலைப்பை மாற்ற கோரியுள்ளனர்.

Sivaji fans request to Thanu to change title of Dhanushs Karnan

சர்ச்சைகளை உண்டாக்கிய ‘திரெளபதி’ படத்திற்கு தடை கோரி மனு

சர்ச்சைகளை உண்டாக்கிய ‘திரெளபதி’ படத்திற்கு தடை கோரி மனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Draupathi Trailer Called Out For Misogyny And Casteismநடிகர் அஜித்தின் மச்சானும் ஷாலினியின் சகோதரனுமான ரிச்சர்ட் நடித்துள்ள படம் திரௌபதி.

நாயகியாக ஷீலா நடிக்க, முக்கிய வேடத்தில் கருணாஸ் நடித்துள்ளார்.

மோகன் ஜி என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடகக் காதல் குறித்து பட மையக்கதை உருவாக்கப்பட்டுள்ளதால் டிரெய்லரில் உள்ள சாதி சார்ந்த பல வசனங்கள் சமூகவலைத்தளங்களில் விவாதங்களை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் திரௌபதி படத்தைத் தடைசெய்ய வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Draupathi Trailer Called Out For Misogyny And Casteism

 

தர்பார் ரிலீசுக்கு ஹெலிகாப்டர்: உலக சினிமாவை மிரள வைக்க ரசிகர்கள் ஏற்பாடு

தர்பார் ரிலீசுக்கு ஹெலிகாப்டர்: உலக சினிமாவை மிரள வைக்க ரசிகர்கள் ஏற்பாடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini fans arranged Helicopter for Darbar releaseலைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார்.

ஒளிப்பதிவுவை சந்தோஷ் சிவன் செய்ய இசையமைத்துள்ளார் அனிருத்.

தர்பார் படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. 2.39 மணி நேரம் படத்தின் கால அளவு என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தின் மெய்யனூர் கிராமத்தில் உள்ள ARRS தியேட்டரில் தர்பார் படம் வெளியாகும் தினத்தன்று,

ஹெலிகாப்டர் மூலம் தியேட்டர் முன்பு மலர் தூவ கனகராஜ் என்ற ரஜினி ரசிகர் அனுமதி கோரியுள்ளார்.

பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனம் மூலம் இந்த ஹெலிகாப்டரை அவர் ஏற்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பாக, குறிப்பிட்ட இடத்தை மேற்பார்வை செய்து விரிவான அறிக்கையினை அனுப்புமாறு சேலம் வருவாய் கோட்டாட்சியர், சேலம் மேற்கு வட்டாட்சியருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

தங்கள் அபிமான நடிகர் படங்களின் ரிலீசின் போது விதவிதமான ஏற்பாடுகளை ரசிகர்கள் செய்வார்கள்.

200அடி கட்அவுட் முதல் இலவச தலை கவசம் வரை வழங்கியுள்ளனர்.

ஆனால் இதுவரை இப்படியான ஹெலிகாப்டர் ஏற்பாட்டை ரஜினி ரசிகர்கள் செய்யவிருப்பது உலக சினிமா வரலாற்றில் இதுதான் முதன்முறை என கூறப்படுகிறது.

Rajini fans arranged Helicopter for Darbar release

கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா நடிக்கும் புதிய படம் துவக்கம் !

கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா நடிக்கும் புதிய படம் துவக்கம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Regina cassandraதிருடன் போலீஸ், உள்குத்து படங்கள் மூலம் விமர்சக ரீதியிலும் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்த இயக்குநர் கார்த்திக் ராஜு தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். Apple Tree studios தங்களது முதல் திரைப்படமாக தயாரிக்க உள்ள இப்படம் மர்மங்கள் நிறைந்த திரில்லர் திரைப்படமாக தயாராகிறது. ரெஜினா கஸண்ட்ரா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 2020 ஜனவரி 13 முதல் துவங்கவுள்ளது.

Apple Tree studios ராஜ் சேகர் வர்மா கூறியதாவது..

ஒரு தயாரிப்பாளராக இல்லாமல் பார்வையாளனாகவே இயக்குநர் கார்த்திக் ராஜு சொன்ன கதை, என்னை மிகவும் ஈர்த்தது. எவரும் கேள்விப்பட்டிராத தளத்தில் வித்தியாசமான பாணியில் பல இடங்களில் ஆச்சர்யப்படுத்தும் விதமாக அவரது கதை இருந்தது. சமீப காலமாக பெண் பாத்திரங்களை மையமாக கொண்டு, நல்ல அழுத்தமாக கதையம்சம் கொண்ட படங்கள் தமிழ் திரையில் ஜெயித்து வருகிறது. அந்த வகையில் Apple Tree studios முதல் தயாரிப்பாக பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்ட திரில்லர் படத்தை தயாரிப்பது பெரும் மகிழ்ச்சி. கார்த்திக் ராஜு கதை சொன்ன போதே இந்த கதாப்பாத்திரத்திற்கு ரெஜினா கஸண்ட்ரா சரியாக இருப்பார் என நினைத்தேன் அவரும் கதை பிடித்து ஆவலுடன் நடிக்க ஒப்புக்கொண்டார். இந்த கதாப்பாத்திரத்தில் ரசிகர்கள் அவரை பெரிதும் ரசிப்பார்கள். தொடர்ந்து வித்தியாசமான கதாப்பத்திரங்களாக தேர்ந்தெடுத்து, ரசிகர்களை கவர்ந்து வரும் அவர் இப்படத்திலும் தன் திறமையை நிரூபிப்பார். கதாப்பாத்திரத்தின் மீது அவர் காட்டும் ஈடுபாடும் அதற்கு அவர் செய்துகொள்ளும் முன் தயாரிப்புகளும் திரைப்படத்தின் மீதான அவரது காதலை, அர்ப்பணிப்பை காட்டுகிறது. இப்படத்தை திரையில் பார்க்கும் போது நீங்களும் அதை காணலாம். இத்திரைப்படம் திரில்லர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்றார்.

Production no 1 என தற்போதைக்கு தலைப்பிடபட்டிருக்கும் இத்திரைப்படத்தில் ரெஜினா கஸண்ட்ரா தொல்பொருள் ஆய்வாளராக நடிக்கவுள்ளார். தற்போது அவர் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இல்லாமல் தானே நடிக்க பயிற்சி எடுத்து வருகிறார். படப்பிடிப்பு 2020 ஜனவரி 13 முதல் குற்றாலத்தில் துவங்கவுள்ளது. படத்தின் பெரும்பான்மை காட்சிகள் நேரடி லொகேஷன்களில் படம்பிடிக்கப்படவுள்ளது. படத்தின் நடிக்கவுள்ள மற்ற நடிகர் நடிகையர் விவரம் ஃபர்ஸ்ட் லுக்குடன் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவுக்கப்படும் என்றார் தயாரிப்பாளர் ராஜ் சேகர் வர்மா.

More Articles
Follows