ரசிகர்களுக்கு பிரியாணி விருந்தளித்த சிம்பு.; இதான் காரணமா? என்ன சொன்னார்.?

ரசிகர்களுக்கு பிரியாணி விருந்தளித்த சிம்பு.; இதான் காரணமா? என்ன சொன்னார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு சினிமாவின் வெற்றிக்கு முக்கிய காரணம் சினிமா ரசிகர்கள் தான். அதிலும் முன்னணி நடிகர்கள் என்றால் இவர்களின் வெற்றிக்கு பெரிய காரணமாக கருதப்படுபவர்கள் ரசிகர்கள் தான்.

தங்களின் அளவற்ற அன்பால் நடிகர்களை தூக்கி பிடித்து கொண்டாடி வருகின்றனர்.

எனவே பல நடிகர்களும் தங்கள் ரசிகர்களை அடிக்கடி சந்திப்பது வழக்கம்.

நடிகர் ரஜினிகாந்த் பலமுறை தன் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

அதுபோல நடிகர் விஜய் அடிக்கடி தன் ரசிகர்களை சந்திப்பார். மேலும் அவர் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கிய பின் அடிக்கடி அதன் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

அதன் பின்னர் தன்னுடைய ரசிகர்களுக்கு அவர் பிரியாணி விருந்து வழங்கியும் வந்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சிம்பு தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து உள்ளார். மேலும் தன்னுடைய ரசிகர்களுக்கு தன் கையாலே பிரியாணி பரிமாறினார். அந்த வீடியோவும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிம்பு நடித்து வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்தை ரசிகர்கள் பெருமளவில் கொண்டாடினர். எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிம்பு அவர்களை சந்தித்ததாக கூறப்படுகிறது.

மேலும் படத்தின் வெளியீட்டின் போது “விழா பணிகளை பாதுகாப்பாக கையாளுங்கள்.. ரசிகர் மன்ற பணிகளை விரிவுப்படுத்துங்கள்.. சமூக பணிகளை செய்து மக்களின் நன்மதிப்பை பெறுங்கள்” என்பது போல ஆலோசனைகளை சிம்பு கூறியதாகவும் தெரியவந்துள்ளது

STR served Briyani to his fans; ரசிகர்களுக்கு பிரியாணி விருந்தளித்த சிம்பு Pathu Thala Silambarasan l filmistreet 👌🏻

https://youtube.com/shorts/e7QFPlKNatg?feature=share

Actor Simbu served Briyani to his fans

JUST IN நயன்தாரா – ஜோதிகா போல நடிப்பீர்களா.? ‘விருமாண்டி 2 எப்போ.? FILMISTREET கேள்விக்கு அபிராமி பதில்கள்

JUST IN நயன்தாரா – ஜோதிகா போல நடிப்பீர்களா.? ‘விருமாண்டி 2 எப்போ.? FILMISTREET கேள்விக்கு அபிராமி பதில்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ‘ஒரு கோடை மர்டர் மிஸ்டரி’.

வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் இந்த வெப் சீரிஸ் வெளியாக உள்ளது.

இந்நிலையில் படக்குழுவினர் இன்று ஏப்ரல் 18 தேதி சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இதில் முக்கிய வேடம் ஏற்று நடித்துள்ள விருமாண்டி புகழ் நடிகை அபிராமி பத்திரிகையாளர்களை தனியாக சந்தித்தார்.

அப்போது.. “விருமாண்டி பார்ட் 2 படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு.. “விருமாண்டி படத்தில் அன்னலட்சுமி கேரக்டர் இறந்து விட்டது அவர் செத்துப் போயிட்ட. பின்பு எப்படி விருமாண்டி 2 வரும் ).

ஒரு வேளை அதற்கான திரைக்கதை அமைத்து கமல் என்னை அழைத்து கண்டிப்பாக நடிப்பேன். மறுக்க மாட்டேன் என்றார். அதன் பிறகு FILMISTREET சார்பில் ஜோதிகா – நயன்தாரா போல FEMALE ORIENTED படங்கள் நடிப்பீர்களா? என கேட்கப்பட்டது.

ஆண்கள் (ஹீரோக்கள்) நடித்தால் அதை யாரும் FEMALE ORIENTED என்று சொல்ல மாட்டார்கள். பிறகு பெண்கள் நடித்தால் மட்டும் FEMALE ORIENTED என்கிறீர்கள்.?

கதை அமைந்தால் நடிப்பேன்” என்றார்.

Abhirami answers FILMISTREET question when ‘Virumandi 2

முதன்முறையாக இணையும் ஜூனியர் என்டிஆர் & சைஃப் அலிகான்.; ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்

முதன்முறையாக இணையும் ஜூனியர் என்டிஆர் & சைஃப் அலிகான்.; ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் அதிகாரப்பூர்வமாக ‘என்டிஆர் 30’ படக்குழுவில் இணைந்துள்ளார்.

மேலும் நாயகன் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். கொரட்டாலா சிவா இயக்கி வரும் இந்தப் படம் மூலம் ஜூனியர் என்டிஆர் மற்றும் சைஃப் அலிகான் இருவரும் முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர்.

’NTR 30’ திரைப்படம் தெலுங்கு மொழியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆக்‌ஷன்- ட்ராமா திரைப்படம். இதில் சைஃப் அலிகான், ஜூனியர் என்டிஆர் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அற்புதமான கதைக்களம் மற்றும் திறமையான நடிகர்களுடன் இந்தப் படம் ரசிகர்களுக்கு ஒரு காட்சி விருந்தைக் கொடுக்கும் என்பது உறுதி.

’என்டிஆர் 30’ படப்பிடிப்புத் தளத்தில் இருந்து படக்குழு சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள புகைப்படம் மூலம் நடிகர் சைஃப் அலிகானை அதிகாரப்பூர்வமாக தங்கள் அணிக்கு வரவேற்று உள்ளனர்.

கடந்த மாதம் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடந்த பூஜைக்குப் பிறகு ’NTR 30’ படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியது. இந்த படம் மூலம் நடிகை ஜான்வி கபூர் தெலுங்கில் அறிமுகமாகிறார்.

யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் இணைந்து ‘என்டிஆர் 30’ படத்தைத் தயாரிக்கிறது மற்றும் நந்தமுரி கல்யாண் ராம் படத்தை வழங்குகிறார்.

மேலும், ஏப்ரல் 5, 2024 அன்று படம் பான் இந்திய அளவில் வெளியாகிறது.

*தொழில்நுட்பக்குழு விவரம்:*

வழங்குபவர்: நந்தமுரி கல்யாண் ராம்,
பேனர்கள்: என்டிஆர் ஆர்ட்ஸ், யுவ சுதா ஆர்ட்ஸ்,
தயாரிப்பாளர்கள்: ஹரிகிருஷ்ணா.கே, மிக்கிலினேனி சுதாகர்,
எழுதி இயக்குபவர்: கொரட்டாலா சிவா,
இசை: அனிருத் ரவிச்சந்திரன்,
ஒளிப்பதிவு: ரத்னவேலு,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: சாபு சிரில்,
VFX: யுகந்தர்

ஜூனியர் என்டிஆர் - சைஃப் அலிகான்

Saif Ali Khan joins cast of Jr NTR’s next movie

38 வருடங்கள்.. 15 மொழிகள்.. 25000+ பாடல்கள்.; பாடகர் மனோ டாக்டரானார்.!

38 வருடங்கள்.. 15 மொழிகள்.. 25000+ பாடல்கள்.; பாடகர் மனோ டாக்டரானார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

80s மற்றும் 90s காலகட்டங்களில் பாடகர், நடிகர், டப்பிங் கலைஞர், தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கியவர் மனோ.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, துலு, அசாமிஸ் என 15 இந்திய மொழிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தியிருக்கிறார்.

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் தெலுங்கு படங்களுக்கு மனோ தான் டப்பிங் செய்வார்.

இளையராஜாவின் மனம் கவர்ந்த பின்னணி பாடகர் ஆகவும் இருந்து வந்தார் மனோ.

இளையராஜா இசையில் மட்டும் 500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

இந்நிலையில், மனோ இசைத்துறையில் 38 ஆண்டுகள் நிறைவு செய்தார் மற்றும் ரிச்மண்ட் கேப்ரியல் பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இந்த செய்தியை பாடகர் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். அவர் எழுதிய படத்தைப் பதிவிட்டு, “ஒரு பாடகர் மற்றும் இசையமைப்பாளராக இந்திய இசைத் துறையில் 38 வருடங்கள் மற்றும் 15 இந்திய மொழிகளில் 25,000 க்கும் மேற்பட்ட பாடல்களை முடித்ததற்காக ரிச்மண்ட் கேப்ரியல் பல்கலைக்கழகத்தால் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. என்னை ஆதரித்த அனைவருக்கும், எப்பொழுதும் பணிவும், மரியாதையும், மிகுந்த அன்பும்.” என்றார்.

மேலும், மனோ முனைவர் பட்டம் பெற்ற பிறகு, நிகழ்ச்சியில் பேசும் போது, ​​தனக்கு இசையில் ஆர்வம் இருப்பதாகவும், 14 வயதில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாத்துக்கு உதவி செய்ததாகவும் மனோ தெரிவித்தார். மனோ டப்பிங் கலைஞராகவும் இருந்து வருகிறார்.

மனோ

Singer Mano honoured with a doctorate

மார்க் பண்ணி வச்சிக்கோங்க.; ‘மார்க் ஆண்டனி’-யின் சூட்டிங் அப்டேட்

மார்க் பண்ணி வச்சிக்கோங்க.; ‘மார்க் ஆண்டனி’-யின் சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ‘மார்க் ஆண்டனி’.

இப்படத்தில் நாயகியாக ரித்து வர்மா நடிக்க, வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க, தெலுங்கு நடிகர் சுனில் வர்மா மற்றும் நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், எஸ்.ஜே.சூர்யா இப்படத்தின் தனது பகுதி படப்பிடிப்புகளை முடித்துள்ளார்.

மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்தப் படம், பான் இந்தியா படமாக வெளியிட திட்டமாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

SJ Suryah’s portions in ‘Mark Antony’ wrapped up

ரஜினி ரசிகர்கள் டென்ஷன்.; எனர்ஜி அப்டேட் கொடுத்த நெல்சன்

ரஜினி ரசிகர்கள் டென்ஷன்.; எனர்ஜி அப்டேட் கொடுத்த நெல்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சுனில், தமன்னா, விநாயகன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் ரஜினி ஜெயில் வார்டனாக நடிக்கிறார்.

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை நடிகர் ரஜினிகாந்த் நிறைவு செய்து விட்டதாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தெரிவித்து உள்ளார்.

சமீபத்தில், நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இதனை தெரிவித்துள்ளார்.

‘ஜெயிலர்’ படத்தின் அப்டேட் நீண்ட நாட்களாக வெளியாகவில்லை. இதனால் ரஜினி ரசிகர்கள் அப்செட்டில் இருந்தனர்.

மேலும், தற்போது இயக்குநர் நெல்சனின் அப்டேட்டால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Rajinikanth completes shooting for ‘Jailer’Confirms Nelson

More Articles
Follows