தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் அதன் தடுப்பு பணிகளுக்காக கோடிக்கணக்கான தொகையை மத்திய மாநில அரசுகள் செலவிட்டு வருகின்றன.
இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவரின் நிவாரண நிதி மற்றும் உதவி குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு நிதி உதவி அளிக்கப்படும்.
நானும், எனது மனைவி கவுரிகான் உரிமையாளர்களாக இருக்கும் ரெட் சில்லிஸ் நிறுவனம் சார்பில் மராட்டிய மாநில முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு நிதி உதவி அளிக்கப்படும்.
மேற்கு வங்கம் மற்றும் மராட்டிய மாநிலத்துக்கு 50 ஆயிரம் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்படும்.
மும்பையில் உள்ள 5 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும்.
2 ஆயிரம் பேருக்கு உணவு சமைத்து வீட்டு வேலை செய்பவர்கள், ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கப்படும்.
மேலும் மும்பையில் உள்ள ஏழைகளுக்கு உணவு வழங்கப்படும்.
இவ்வாறு ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.