தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலகமே கொரோனா வைரசுக்கு பயந்து அதை தடுப்பதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
பல உயிர்களை கொரோனா கொன்று குவித்து வருவதால் அதை தடுக்க இந்திய அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கான கோடிக்கணக்கான ரூபாயை செலவழித்து வருகின்றது.
மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மக்களிடமும் நிவாரண நிதி கேட்டு வருகிறது.
இதற்கு பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற நிதியுதவியை அளித்து வருகின்றனர்.
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்வதாரத்தை இழந்துள்ளனர்.
நிறுவனங்கள் மூடப்பட்டதால் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது அன்றாட வருவாயை இழந்துள்ளனர்.
வேலை காரணமாக தங்கள் குடும்பதை விட்டு வேறு மாநிலங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
போக்குவரத்து இல்லாத காரணத்தாலும் மக்களிடம் பணம் இல்லாத காரணத்தினாலும் நிறைய மக்கள் நடந்தே செல்ல துணிந்துவிட்டனர்.
கொரோனா நிவாரண நிதி மற்றும் நடந்து செல்லும் மக்கள் இந்த இரண்டையும் இணைக்கும் வகையில் நடிகர் பொன்வண்ணன் ஒரு ஓவியத்தை வரைந்துள்ளார்.
நாட்டை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கீழே, ஏராளமான தொழிலாளர்கள் நடந்து செல்வது போன்று ஓவியத்தை வரைந்துள்ளார்.
இதிலிருந்து நாம் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது ரூ. 3000 கோடியில் மக்கள் வரிப்பணத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலையை மோடி நிறுவினார். அப்போது அதற்கு மக்களிடம் அனுமதி கேட்கவில்லை.
தற்போது கொரோனா தடுப்பு நிதிக்காக மக்களிடமே கையேந்தி நிற்கிறார். அந்த பணத்தை வைத்து மக்களுக்கு உதவி இருக்கலாம்.
மக்கள் தங்கள் வாழ்வதாரத்தை இழந்து நிற்கின்றனர். ஆனால் மோடி வைத்த சிலை மட்டும் வானுயர உயர்ந்து நிற்கிறது என்ற பொருளில் எடுத்துக் கொள்ளலாம்.
ஆக மக்களின் அவலத்தை இது உணர்த்துவதாக அமைந்துள்ளது.
Actor Ponvannan indirectly slams Modis Statue of Unity