நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் தற்சார்பு வேளாண்மையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த பங்களிப்பை அளிப்பவர்களுக்கு உழவர் விருதுகளும் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் தற்சார்பு வேளாண்மையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த பங்களிப்பை அளிப்பவர்களுக்கு உழவர் விருதுகளும் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Karthiநடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் தற்சார்பு வேளாண்மையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த பங்களிப்பை அளிப்பவர்களுக்கு உழவர் விருதுகளும் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

தற்சார்பு வேளாண்மையில் நேரடி விற்பனையில் சிறந்து விளங்கும் விவசாயி திருமூர்த்தி, பாரம்பரிய சிறுதானிய விதைகள் சேமிப்பில் ஜனகன், சிறந்த விவசாயப் பங்களிப்பிற்கு மனோன்மணி ஆகியோருக்கு விருதுகளும் தலா ஒரு லட்சத்திற்கான காசோலையும் பாராட்டு சான்றிதழும் நடிகர் சிவகுமார் வழன்கினார். அதோடு சிறு குறு விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் கருவிகளை வடிவமைப்பவர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக உடுமலைப்பேட்டை சசிகுமார் அவர்களுக்கு 75 ஆயிரமும் இரண்டாம் பரிசாக வேலூர் ராஜா மற்றும் கரூர் துரைசாமி அவர்களுக்கு 25 ஆயிரமும் மூன்றாம் பரிசாக ஈரோடு பொறியியல் கல்லூரி மாணவர்கள் கோகுல் மற்றும் நண்பர்களுக்கு 25 ஆயிரமும் சிறப்பு பரிசாக புதுக்கோட்டை மாவட்டம் பள்ளி மாணவர் சுபாஷ் சந்திர போஸ்க்கிற்கு 25 ஆயிரமும் பரிசுத் தொகை, விருது மற்றும் சான்றிதழ் வழங்கி
கார்த்தி பேசியதாவது: விவசாயிகளை கெளரவப்படுத்தி அங்கீகரிக்க வேண்டும், விவசாயிகள் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது, ஒரு விவசாயி தற்கொலை என்பது அந்த குடும்பத்திற்கு மட்டும் அல்ல அது சமுதாயத்திற்கே பெரும் இழப்பு “என்பதோடு விவசாயிகள் தற்சார்பு வேளாண்மையை நோக்கி நகர வேண்டிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். சிறு குறு விவசாயிகளுக்கு பயன்படும் கருவிகளை வடிவமைக்க பொறியியல் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றார்.

தற்சார்பு வேளாண்மையின் அவசியத்தை எடுத்துரைக்க, சிறு குறு விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் கருவிகள் கண்டுபிடிக்க இளைஞர்கள் முன் வர வேண்டும் உழவன் ஃபவுண்டேஷனாது இளைஞர்களுக்கு என்றும் பக்கபலமாக இருந்து செயல்படும் என்றார்.

நிகழ்ச்சியில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி, பார்வை திறன் சாவல் உள்ள விவசாயி, உற்பத்தி விலை இல்லாமல் நலிவடையும் விவசாயி, மாற்றத்திற்கான பள்ளியில் தற்சார்பு வேளாண்மையை கற்கும் மாணவர்களுக்கு போன்றவர்களுக்கு தலா 50000 ஊக்கத் தொகையும் நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டது.

இயற்கையின் மீது கை வைக்காதீர் : எச்சரிக்கும் படம் ‘இறலி’

இயற்கையின் மீது கை வைக்காதீர் : எச்சரிக்கும் படம் ‘இறலி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

irali title lookஇயற்கையை அது போன போக்கில் விட்டுவிட வேண்டும். இயற்கையின் மீது கை வைத்தால் விளைவு அபாயகரமாக இருக்கும் என்று எச்சரிக்கும் கதையோடு உருவாகும் படம் ‘இறலி’.

கலைமகள் ஆடியன்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் இப்படம் உருவாகிறது .படத்தை இயக்குபவர் ஜெய். விஜயகுமார். இவர் இயக்குநர் எஸ்.பி. ராஜ்குமாரிடம் சினிமா கற்றவர்.

படத்தின் நாயகனாக வெண்ணிஸ் கண்ணா நடித்திருக்கிறார். நாயகியாக சானியா ஐயப்பன் நடித்திருக்கிறார். இவர் ‘குயின்’ படத்தில் நடித்தவர். மலையாளத்தில் மோகன்லாலின் ‘லூசிஃபர் ‘என்ற படத்தில் மஞ்சுவாரியார் மகளாக நடித்தவர்.குயின் படத்திற்காக சைமா விருது, ஆசியா விஷன் விருது ,நானா விருது, வனிதா விருது போன்ற ஏராளமான விருதுகளைக் குவித்தவர்.

படத்தைப் பற்றி இயக்குநர் ஜெய். விஜயகுமார் கூறும்போது ,
“இயற்கையை அதன் போக்கில் விட்டுவிட வேண்டும் . மீறினால் செயற்கை வழிக்கு இழுத்தால்,அதன் விளைவு மோசமாக இருக்கும் என்பதை எச்சரிக்கும் படமாக ‘இறலி’ இருக்கும்.

‘இறலி’ என்ற சொல் திருக்குறளில் பயன்படுத்தப்பட்டுள்ளது . விளைவு என்பதே அதன் பொருள்.

ஒரு பொருளின் மீது ஆசைப் பட்டு அதைத் தவறான வழியில் அடைய ஆசைப்பட்டால் விளைவு மோசமாக இருக்கும் என்பதை சொல்வது தான் இப்படத்தின் கதை” என்கிறார் .

படத்தின் நாயகன் வெண்ணிஸ் கண்ணா பேசும்போது ,

“இறலி’படத்தின் கதையை கேட்ட நான் இதைத் தயாரிப்பதற்கும் நாயகனாக நடிப்பதற்கும் ஒப்புக் கொண்டேன். இந்தச் சவாலான கதையில் புதுமுகம் நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்ற போது நானே அதை ஏற்று நடிக்கச் சம்மதித்தேன். படத்தில் நான் ஒரு விவசாயி மகனாக நடிக்கிறேன்.

ரசாயன உரங்களைப் போட்டு மண் மலடாகிப்போனதால் விளைச்சல் இல்லாமல் போய்விடுகிறது. அதனால் விவசாயத்துக்கு வட்டிக்குக் கடன் வாங்கி கட்ட முடியாமல் போனதால் என் தந்தை தற்கொலை செய்து கொள்கிறார். ஒரு விவசாயியின் தற்கொலைக்குப் பிறகு அந்த குடும்பம் என்னாகும் என்று சொல்கிற படமாகவும் இது இருக்கும். அமுதவாணன், சுரேந்தர் என் நண்பர்களாக வருகிறார்கள்.தந்தையை இழந்த என் குடும்பத்தைக் காப்பாற்ற என் தந்தையின் நண்பர் தலைவாசல் விஜய் எங்களை வளர்க்கிறார் .

தானே கனிந்து போகிற பழத்தை கனிய விடாமல் ரசாயனங்களைப் பயன்படுத்தி பழுக்க வைப்பதால் அந்தப்பழத்தில் ரசாயனத்தின் சாரம் ஏறி விஷத்தன்மை ஆகிவிடுகிறது .இறுதியில் அந்த பழமே விஷமாகி விடுகிறது .பழமே விஷமானால் ? அதன் பாதிப்புகள் எப்படி இருக்கும்? இப்படிப்பட்ட பழங்களை உண்பதால் நம்நாட்டில் எவ்வளவோ குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் .உயிரை விடுகிறார்கள் . இந்தக் கொடுமையை எதிர்த்து மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் படமாக ‘இறலி’ இருக்கும்.

இயற்கை வழியை மாற்ற நினைக்க வேண்டாம் . செயற்கையாக எதையும் நாம் செய்யக்கூடாது என்பதை இந்த படம் சொல்கிறது.படப்பிடிப்பு பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. கிராமத்து மண் சார்ந்த கதையாகவும் கலகலப்பு, நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்த கதையாகவும் இப்படம் இருக்கும். படத்தில் 4 பாடல்கள் அருமையாக வந்துள்ளன.” என்கிறார்.

இப்படத்தின் இயக்குநர் ஜெய்.விஜயகுமார், ஒளிப்பதிவாளர் பிரதீஷ், இசை – M.O.B.ராஜா , எடிட்டர் ஹாசிம் எனப் புதுமையை விரும்பும் திறமைக்கரங்கள் இணைந்துள்ளன.

ஒரு நல்ல கருத்தைக்கூறியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த ‘இறலி’ படம் உருவாகி இருக்கிறது.இதன் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர் சேரன் அவர்கள்’இறலி’டைட்டில் போஸ்டரை வெளியிட்டு உலகிற்கு அறிமுகம் செய்தார்.

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் இணையும் புதிய படம் துவக்கம் !

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் இணையும் புதிய படம் துவக்கம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Devarakondaமிக சமீபகாலத்தில் இளைஞர்களிடம் வெகுவான வரவேற்பை பெற்ற ஹீரோவாக மாறியிருக்கும் நாயகன் விஜய் தேவரகொண்டா, ஆக்‌ஷன் கமர்ஷயலில் அதகளம் செய்யும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஆகிய இருவரும் இணையும் புதிய படம், இன்று மிக எளிதான பூஜையுடன் மும்பையில் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

விஜய் தேவரகொண்ட நடிக்க நடிகை ஷார்மி கவுர் கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

இந்த வருடத்தில், மிக புதுவிதமான ஐடியாவுடன் அதிரிபுதிரி ஹிட்டாக “ஐ ஸ்மார்ட்” படத்தை தந்திருந்தார் பூரி ஜெகன்நாத். இப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்குபிறகு, உடனடியாக எவரும் எதிர்பாராவிதமாக காதல் படங்களில் நடித்து வரும் விஜய் தேவரகொண்டாவுடன் இப்படத்தை துவங்கியுள்ளார். படத்தின் மீது ஈர்க்கப்பட்டு பாலிவுட் பிரபலம் கரண் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா இப்படத்தின் தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளார்கள்.

இது ஒரு முழு இந்திய ரசிகர்களுக்கான படமாக ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் உருவாகிறது.

ஹீரோ யார்..? சிவகார்த்திகேயன்-விஜய் தேவரகொண்டா மோதல்

பூரி ஜெகன்நாத் எப்போதும் ஹீரோவை, அவர்கள் காணாத வேறொரு பரிணாமத்தில் திரையில் காட்டி கலக்குவார். இப்படத்திலும் விஜய் தேவரகொண்டாவை இதுவரை கண்டிராத வேடத்தில் இயக்கவுள்ளார்.

இயக்குநர் பூரி ஜெகன்நாத் முழுமையாக மாறுபட்ட கோணத்தில் விஜய் தேவரகொண்டா பாத்திரத்தை உருவாக்கியுள்ளார். இக்கதாப்பாத்திரத்திற்காக முழு டயட் மேற்கொண்டு உடலை ஆக்‌ஷன் ஹீரோ வடிவத்திற்கு மாற்றி வருகிறார் விஜய் தேவரகொண்டா. மேலும் தாய்லாந்து சென்று அங்குள்ள தற்காப்பு கலைகளில் பயிற்சி பெற்று வந்துள்ளார். அவரது சினிமா வாழ்வில் மிக சவாலான பாத்திரமாக, இக்காதாப்பாத்திரம் அமைந்திருப்பதை ஏற்று வெகு அர்பணிப்புடன் தன் முழு உழைப்பையும் கொடுத்து உழைத்து வருகிறார்.

Puri connects, Touring Talkies சார்பில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் நடிகை ஷார்மி கவுர், கரண் ஜோஹர், ஆபூர்வா மேத்தாவுடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார்.

ரம்யா கிருஷ்ணன் ரோனித் ராய், விஷு ரெட்டி, ஆழி, கெட்டப் ஶ்ரீனு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். Dharma Productions இப்படத்தை வழங்குகிறார்கள்.

தயாரிப்பு நிறுவனம் – Puri Connect

வழங்குபவர் – Dharma Productions

தயாரிப்பாளர்கள் – பூரி ஜெகன்நாத் , ஷார்மி கவுர், கரண் ஜோஹர், அபூர்வா மேத்தா.

பெரியார் பற்றி பேச்சு; ரஜினி மன்னிப்பு கேட்க தபெதிக வலியுறுத்தல்

பெரியார் பற்றி பேச்சு; ரஜினி மன்னிப்பு கேட்க தபெதிக வலியுறுத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini should apologize for his controversial speech about Periyarஓரிரு தினங்களுக்கு முன் சென்னையில் துக்ளக் 50-வது ஆண்டு விழா நடைபெற்றது.

இதில் நடிகர் ரஜினிகாந்த கலந்துக் கொண்டார். அப்போது அவர் முரசொலி வைத்திருத்தால் திமுக காரன் என்றும் துக்ளக் படித்திருந்தால் அவர் அறிவாளி என்றும் பேசியிருந்தார்.

மேலும் பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. செருப்பு மாலை போடப்பட்டது என சிலவற்றை பேசியிருந்தார்.

இத்துடன் பத்திரிகையாளர்கள் பால் என்ற உண்மை செய்தியில் பொய் என்ற தண்ணீரை கலக்க கூடாது என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் பெரியார் குறித்த ரஜினியின் பேச்சுக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியது.

கோவை திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால் வருகின்ற ஜனவரி 23ல் (23.1.2020) காலை 10 மணிக்கு, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் நடிகர் ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Rajini should apologize for his controversial speech about Periyar

எப்போ ரிலீசானாலும் படம் ஓடும் என ஓவரா நம்பாதீங்க. – எஸ்விசேகர்

எப்போ ரிலீசானாலும் படம் ஓடும் என ஓவரா நம்பாதீங்க. – எஸ்விசேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

S Ve Shekar slams Top heroes and their movie release datesஅமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’. ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்க, அருண் கதை எழுதியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர் ஜோன்ஸ், நடிகை அமலாபால், இயக்குனர் கே.ஆர்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினருடன் நடிகர், இயக்குனர், அரசியல் பிரமுகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ், இயக்குனர் திருமலை ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவில் தயாரிப்பாளர் ஜோன்ஸ் பேசும்போது….

பல படங்களை ஜான் மேக்ஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளேன். மைனா படத்தில் இருந்து அமலாபால் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். அதோ அந்த பறவை போல படத்தில் அவரின் அர்ப்பணிப்பு ரொம்ப உணர்வுப்பூர்வமானது.

இந்த விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் மனதார வரவேற்கிறேன். மிக வித்தியாசமான கதை. அமலாபாலிடம் இந்தக்கதையை சொன்னதும் ஓ.கே என்றார். கதைப் பிடித்ததால் இந்தப்படத்தை இயக்குநர் கே.ஆர்.வினோத் சிறப்பாக இயக்கி தந்துள்ளார்’ என்றார்.

எஸ்.வி.சேகர் பேசும்போது…

‘அதோ அந்த பறவை போல பாட்டு வரி தான் இப்படத்தின் தலைப்பு. நம்மிடம் இப்படியான படங்கள் வருவதற்கு இப்போது தான் வாய்ப்பு வந்துள்ளது. சினிமாவில் இரண்டு வகை. ஓடும் படம், ஓடாத படம் அவ்ளோ தான். சினிமாவில் ராமராஜன் பசுமாடு வைத்து பால் கறக்கும் படம் ஓடிவிட்டால் அதேபோல் பத்துப்படம் எடுப்பார்கள். ஏன் என்றால் இது வியாபாரம்.

நாங்கள் படம் எடுத்த காலத்தில் பத்து லட்சத்திலேயே படத்தை எடுத்து விடுவோம். நாம் சரியான பட்ஜெட்டில் படம் எடுக்க வேண்டும்.
இப்போது ஒரு நாளைக்கு நாற்பது லட்சம் ஆகிறது.

சினிமாவில் மட்டும் தான் உள்ளே வந்து நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. முதலில் சினிமாவை தெரிந்துகொண்டு உள்ளே வரவேண்டும். இந்தப்படத்தில் பெரிய பிளஸ் அமலாபால்.

அவருக்கு எல்லா மொழிகளிலும் மார்க்கெட் இருக்கு. இந்த படத்தை ரொம்ப பிரமாதமாக எடுத்திருக்கிறார்கள். அமலாபாலின் தையரித்தை நான் பாராட்டுகிறேன். சினிமாவிற்கு சென்சார் தேவையே இல்லை என்பது என் கருத்து. நம்பிக்கை வேற ஓவர் நம்பிக்கை வேற.

சரியான நேரத்தில் படத்தை வெளியீடுங்கள். என் படம் எப்போது வெளியானாலும் ஓடும் என்று ஓவர் நம்பிக்கை வைக்காதீர்கள். அதனால், இப்படத்தை அப்படி சரியான நேரத்தில் வெளியீட்டு வெற்றி காண வாழ்த்துகிறேன்’ என்றார்.

இயக்குனர் கே.ஆர்.வினோத் பேசும்போது, ‘என்னோட குடும்பத்தினர், நண்பர்கள் இல்லாமல் எனக்கு இந்த மேடை அமைந்திருக்காது. என் உழைப்பை நம்பி வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. மற்றும் என்னுடைய படக்குழுவினருக்கு நன்றி. எங்கள் படத்தில் அமலாபால் ஹீரோயின் இல்லை, ஹீரோ. அவரை அப்படித்தான் அழைத்து வருகிறேன். அமலாபாலுக்கு இந்தபடம் ரொம்ப சிறப்பா இருக்கும் என்று நம்புகிறோம். சண்டைக்காட்சிகள் எல்லாம் நாங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு அமலாபாலிடம் காட்டினோம்.

அதைப் பார்த்து பயிற்சி செய்து படத்திற்கு தயாரானார். அதை அப்படியே படப்பிடிப்பில் மிகச்சிறப்பாக செய்துவிட்டார். 60 அடி உயரமுள்ள மரத்தில் இருந்து இறங்குவது, சண்டை போடுவது என நடிப்பில் அமலாபால் அசத்தியுள்ளார். குறிப்பாக சேற்றுக்குள் இறங்கி மூச்சு விடாமல் நடிக்க வேண்டும் அதை நாங்கள் நினைத்து பார்க்க முடியாதளவிற்கு நடித்து கொடுத்தார். இந்த தைரியம் யாருக்கு வரும். எல்லாருக்கும் பிடிக்கும் வகையில் படம் சிறப்பாக வந்திருக்கிறது’ என்றார்.

S Ve Shekar slams Top heroes and their movie release dates

வினோத் & பிரியங்கா இணையும் ‘தி மாயன்’; ஆங்கிலத்திலும் வெளியாகிறது

வினோத் & பிரியங்கா இணையும் ‘தி மாயன்’; ஆங்கிலத்திலும் வெளியாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash and Adhik Ravichandran launched first look of English film The Mayanஇசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து “தி மாயன்” ஆங்கில படத்தின் 1st லுக் ஐ வெளியிட்டுள்ளனர்.

இப்படம் தமிழிலும் ஆங்கிலத்திலும் நேரடியாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுவே இந்தியாவில் இருந்து எடுக்கப்படும் முதல் கமர்ஷியல் ஆங்கில படம். இதை தயாரித்து இயக்கியுள்ளார் ஜெ.ராஜேஷ் கண்ணா.

இவர் சன் தொலைக்காட்சியில் நடிகர் விஷாலை வைத்து நாம் ஒருவர் என்னும் நிகழ்ச்சியை இயக்கினார்.
வினோத் மோகன் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கேங் லீடர் என்னும் தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாகவும் மற்றும் டாக்டர் என்னும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும் நடித்த பிரியங்கா மோகன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளனர்.

இதுவே அவருக்கு முதல் படமாகும்.

ஜி.வி பிரகாஷ் தமிழில் தயாரிக்கப்பட்ட மாயன் படத்தில் ஒரு பாடலை பாடவிருக்கிறார். சிம்பு மற்றும் அருண்ராஜா காமராஜுரும் ஒரு பாடலை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை பாக்ஸ் அண்ட் க்ரோவ் இந்தியா மற்றும் ஜி. வி.கே. எம் எழிபண்ட் பிட்சர் மலேஷியா இணைந்து தயாரித்துள்ளது. கணேஷ் மோகன சுந்தரம் இப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஆவர்.

GV Prakash and Adhik Ravichandran launched first look of English film The Mayan

தி மாயன்

More Articles
Follows