தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திமுக சார்பில் சென்னையில் முரசொலி நாளிதழின் பவளவிழா நடைபெற்றது.
அதில் அரசியல் பிரபலங்களும் திரையுலக பிரபலங்களும் கலந்துக் கொண்டனர்.
அப்போது கமல் பேசியதாவது…
திராவிடம் என்பது தமிழக, தென்னிந்தியா மட்டுமல்ல. ஜனகனமன… உள்ளவரை திராவிடம் இருக்கும்.
இந்த விழாவுக்கு வரும்போது பலரும் என்னைக் கேட்டார்கள். அந்த கழகத்தில் சேரப் போகிறீர்களா என்று?
சேர வேண்டும் என்று முடிவெடுத்திருந்தால் 1983 ஆம் ஆண்டே சேர்ந்திருப்பேன்.
அப்போது கருணாநிதி எனக்கு ஒரு தந்தி அனுப்பினார், “நீங்கள் ஏன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேரக்கூடாது?” என்று.
அந்த தந்தியை வெளியே காட்ட தைரியமில்லை; அதற்கு பதில் அனுப்பவும் தைரியம் இல்லை.
இன்றுவரை அதற்கு பதில் சொல்லவில்லை. கலைஞரும் இன்றுவரை அதற்கான பதிலை கேட்கவில்லை.
அந்த மரியாதை இந்த மேடையிலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் வந்துள்ளேன்.
ஒருவரை ஒருவர் விமர்சித்து கொண்டவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து ஒரே மேடையில் இருக்கும் ஒரு புதிய கலாச்சாரத்தை நானும் பயில இங்கு வந்திருக்கிறேன்” என்று பேசினார் கமல்ஹாசன்.