தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கமலின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் அண்மையில் காலமானார்.
அவரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டு பேசினார்.
அப்போது, இன்றைய இளம் நடிகர்கள் வைத்திருக்கும் பணம் கூட கமல்ஹாசனிடம் இல்லை என தெரிவித்தார்.
இதுவரை சந்திரஹாசன் கமலின் கணக்கு வழக்குகள் பார்த்துக் கொண்டார்.
இனி அடுத்த அண்ணன் சாருஹாசன்தான் கமலை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
ரஜினியின் இந்த பேச்சு குறித்து கமல் தன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…
‘அந்த அண்ணன் இல்லையென்றாலும், இன்னொரு அண்ணனாக ரஜினி இருக்கிறார். அவர் என்னை பார்த்துக்கொள்வார்’ என்றார்.