தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் தனுஷ் தங்கள் மகன் என மதுரையை சேர்ந்த கதிரேசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் ஒரு பிரபல இதழுக்கு இவர்கள் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது…
ஐஞ்சு வயசு வரைக்கும் கலைச்செல்வனுக்கு (தனுஷ்) பேச்சுவராம இருந்துச்சு.
மேலூர் உள்ள அரசுப்பள்ளில் பத்தாவது வரை படிச்சான்.
மேற்படிப்புக்காக திருப்பத்தூர்ல படிக்க வச்சோம். ஆனால் கொஞ்சநாள்லவ காணாம போய்ட்டான்.
தேடி தேடி பார்த்து பின்பு அமைதியாகிட்டோம்.
பொல்லாதவன் பட விளம்பரத்த டிவி பேட்டி பாத்தோம்.
‘ஏய் நம்ம கலைச்செல்வன் மாதிரியே இருக்கான்லனு அப்போ பேசிட்டு இருந்தோம்.
நான் மதுரைக்காரன். பிளஸ் ஒன் பாதி வரைக்கும்தான் படிச்சிருக்கேனு அந்த பேட்டியில சொன்னார்.
அதுவரைக்கும் சந்தேகத்தோட இருந்தோம். ஆனா அவரோட நடை, உடை, பாவனை எல்லாம் எங்க மகன் செய்வதை போல இருந்துச்சு.
அதன்பின்னர் அவர்கிட்ட பலமுறை பேச முயற்சி செய்தோம். ஒரு முறை நேரிலும் பார்த்தோம். ஆனா எங்களை தவிர்த்துட்டார்.
நாங்க நிறைய பேருகிட்ட சொல்லி பாத்தோம். ஆனா யாரும் நம்பல. அதான் வழக்கு போட்டோம்.
இப்ப வரைக்கு அவர் எங்ககிட்ட வந்து பேசலையே அது ஏன்.?
உங்க மகன் நான் இல்ல. ஏன் தொல்லை பண்றீங்கனு ஒரு வார்த்தை கூட கேட்கலை.
நான் உங்க மகன் இல்ல. நீங்க என்னோட அப்பா அம்மா இல்லைனு சொல்லச் சொல்லுங்க பார்ப்போம்.
அவரால முடியாது. அவருக்கு மனசாட்சினு ஒண்ணு இருக்குது.
என்று அப்பேட்டியில் தெரிவித்துள்ளனர் அந்த தம்பதியினர்.
Actor Dhanush sudden Madurai parents interview