தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் கமல் மற்றும் ரஜினி ஆகியோர் விரைவில் அரசியலில் ஈடுப்பட உள்ளதாக தெரிகிறது.
இதில் கமல் தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டார். அது தொடர்பாக பாஜக. அல்லாத மாநிலங்களில் உள்ள முதல்வர்களை சந்தித்து வருகிறார்.
விரைவில் கட்சி பற்றிய முழு அறிவிப்பை வெளியிட உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
விரைவில் ரஜினி, தன் அரசியல் பிரவேசத்தை அறிவிப்பார் என நம்பப்படுகிறது.
இந்நிலையில், பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ் இதுகுறித்து பேசும்போது..
ரஜினி கமல் இருவரும் என் நண்பர்கள்தான். ஆனால் அவர்கள் அரசியலுக்கு வருவதை நான் விரும்ப வில்லை.
நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல. நாட்டின் குடிமகனாக கேள்வி எழுப்புவதை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டேன். எந்த விமர்சனத்துக்கும் பயப்பட மாட்டேன்.
அதேபோல், எந்த மிரட்டலுக்கும் பணிய மாட்டேன். என்னிடம் 3 வீடுகள் உள்ளன.
முதலீடுகளும் உள்ளன. நான் ஒருபோதும் அரசியலுக்கு வர மாட்டேன்.
நடிகன் என்ற புகழை மூலதனமாக வைத்து அரசியலுக்கு வருவதை நான் எதிர்க்கிறேன்.
அரசியலுக்கு வரும் நடிகர்கள் சமூக பிரச்னைகளை எந்தளவுக்கு புரிந்து கொள்கிறார்கள், அரசியலுக்கு வந்த பிறகு அவர்கள் அதை தீர்த்து வைப்பார்களா, அதற்கான திட்டங்கள் அவர்களிடம் இருக்கிறதா? என்பதை யோசிக்க வேண்டும்.
ரஜினி, கமல், பவன் கல்யாண் அரசியல் கட்சி தொடங்கினால் அதை ஆதரிக்க மாட்டேன்.
திரைப்பட நடிகர்கள் கட்சித் தலைவர்களாவது நாட்டுக்கு மிகப் பெரிய பேரழிவு ஏற்படும்.
நடிகர்கள் தொடங்கும் அரசியல் கட்சியில் சேருவதையும் நான் விரும்பவில்லை.
இவ்வாறு பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
PrakashRaj opposes Actors Kamal Rajini entry in Politics