தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக வட சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், கொடுங்கையூரில் உள்ள ஆர்.ஆர்.நகர் பகுதியில் தேங்கி நின்ற மழை நீரில் குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தன.
அந்த தண்ணீரில் மின்சார கம்பி அறுந்து கிடந்ததை அறியாத இரு சிறுமிகள் அந்த கம்பியை தெரியாமல் மிதித்ததில், 2 சிறுமிகள் இறந்துள்ளனர்.
சிறுமிகள் மகா (9) மற்றும் பாவனா (8) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கும் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது,
`கொடுங்கையூரில் குழந்தைகளின் கொடுஞ்சாவிற்கு அனுதாபமும் நிதியுதவியும் அரசு செய்தால் போதாது. இனியும் நிகழாதிருக்க ஆவணவெல்லாம் செய்ய வேண்டும்’
இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.