தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நேற்று செப்டம்பர் 26.. இரவு 10 மணியளவில் ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என அந்தப் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விஜய் பேசும் குட்டிக்கதை அவரின் அரசியல் நகர்வு அனைத்தையும் கேட்க ஆவலாக இருந்த ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
திரையுலகினர் மத்தியிலும் இதற்கு கண்டனங்கள் இருந்தாலும் ஒரு சில நடிகர்கள் மௌனம் கலைத்து வருகின்றனர்.
டிவி நடிகர் ராஜ்கமல் பேசுகையில்… சமீபத்தில் ஏ ஆர் ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சியில் அதிகப்படியான டிக்கெட்டுகள் விற்கப்பட்டதால் குளறுபடியானது. எனவே இது போன்ற சர்ச்சையை தடுக்க விஜய் எடுத்துள்ள முடிவு சரியானது என பேசியிருந்தார்.
மேலும் உங்களின் குட்டி கதையை கேட்க நாங்கள் ஆவலோடு இருக்கிறோம்.. எனவே நீங்கள் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து பேசி வீடியோ வெளியிட்டால் அது எங்களுக்கு புத்துணர்ச்சியை தரும் என பேசி இருந்தார்.
‘லியோ’ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கு ஆளுங்கட்சியின் அழுத்தம்.. விஜய்யின் அரசியல் நகர்வு.. போலியான டிக்கெட் விற்பனை.. ரெட் ஜெயன்டின் வெளியீட்டு உரிமை என பல்வேறு காரணங்கள் பேசப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் விஜய்யின் ரசிகர் மன்ற தலைவர் புஸ்ஸி ஆனந்த் இடம் செய்தியாளர்கள் இது குறித்து கேட்டபோது.. “அதற்கு தயாரிப்பாளரை கேட்க வேண்டும். அவர் என்ன சொன்னாரோ அதான் காரணம்” என ஒரே வரியில் பதில் சொல்லிவிட்டு சென்றார்.
Bussy Anand reply for Leo Audio Launch cancelled