தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சாதாரணமாக சிறு கீறல் நம் உடலில் ஏற்பட்டாலே ஏற்படும் வலியினைத் தாங்குவது மிகச்சிரமம், ஆனால் சடங்கு முறை என்ற பெயரில் நம் இந்தியாவின் தென் மற்றும் பெரும்பாலான வட மாநிலங்களில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் பெண் உறுப்பினை சிதைக்கும் கொடுமையினை குறும்படமாக எடுத்து ஏறத்தாழ இந்தியா மட்டுமல்லாமல் அயல்நாடுகளிலும் இதுவரையிலும் 170க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார் மானா மதுரையைச் சேர்ந்த இளைஞர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோந்த கார்த்திகேயன், நடிப்பதற்காக பனிரெண்டு வருடங்களுக்கு முன்பாக சென்னை வந்தார். வந்த இடத்தில் நண்பர் துணை இயக்குநராக முயற்சிக்கலாம் என்ற யோசனையின் பேரில் டி.என்.பி கதிரவன், சதுரங்கவேட்டை வினோத் சாரிடம் கதை டைப் செய்வது போன்ற பணிகளுக்குப் பின்னர்.கர்நாடகாவில் ஐயப்பா பி ஷர்மா, நடிகர் சாய்குமார் பிரதரிடம் உதவி இயக்குநராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
சாதாரணமான இயக்குநராக மட்டுமல்லாமல், சமூகத்திற்கு பலனளிக்கும் ஏதாவது செய்ய வேண்டுமென்ற நோக்கில் சிதை உருவானது.
சிதை கதையை கூறியவுடன் பிஜு நடிகர் மற்றும் தயாரிப்பாளர் உடனே அந்த கதையை எடுக்கலாம் என்று சொல்லிவிட்டார். படப்பிடிப்பு ஒரே நாளில் முடிவடைந்து, வெளியிட்டாலும் படத்துக்கான வரவேற்பு குறைவாகவே இருந்தது.
அதன் பின்னர் நாளுக்கு நாள் இந்த குறும்படத்திற்கு விருதுகள் வந்துக்கொண்டே இருந்தததைத் தொடர்ந்தே மக்கள் கவனத்தைச் சென்றடைந்தது.
சிதை குறும்படத்தை பார்த்த இயக்குநர் வெங்கட்பிரபு, மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பிக்பாஸ் ஆரி அர்ஜுனன், காமெடி நடிகர் சாம்ஸ் ஆச்சரியப்பட்டு, நன்றாக இருப்பதாகக்கூறியதோடு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு இப்படியெல்லாமா நடந்துக்கிட்டு இருக்கு என்ற அங்கலாய்த்தனர்.
ட்ரெய்லரை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட, பலரும் வாழ்த்தி மகிழ்வித்து வருகின்றனர்.
இந்த சடங்கு முறைய பற்றி மக்களுக்கு புரிய மாதிரி சொல்லுங்க?
இந்த சடங்கு முறை மூவாயிரம் ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நம்ம ஊர்ல பூப்புனித நீராட்டு விழா எப்படி நடக்குதோ உலகத்தில நிறைய இடங்கள்ல இந்த சடங்கு முறை நடந்துக்கிட்டிருக்கு. இத தடுக்கத்தான் எங்கள் குறும்படம் மூலமா உலகத்துக்கு சொல்லியிருக்கிறோம்.
சடங்கு முறையின் பெயர் என்ன?
சடங்கு முறை பெயர் – காஃப்டா, 4 வயது குழந்தையின் பிறப்புறுப்பில் ப்ளேடால் அறுத்து தைத்து 40 நாள் தனி அறைக்குள் அடைத்து விடுவார்கள் இதான் சடங்கு முறை.
இந்த சடங்கு முறை நடத்துவதற்கான காரணம்? அதை பற்றி சொல்லுங்கள்?
அதற்கான காரணத்தை திரைப்படத்தில் சொல்கிறோம். சடங்கு முறை வலியை இக் குறும்படத்தில் சொல்லியிருக்கிறோம்.
சடங்கின் வாழ்க்கை முறையை பற்றி திரைப்படத்தில். எல்லாத்தையும் சொல்லிட்டா மக்களுக்கு சுவாரஸ்யம் போயிரும்ல வெயிட் பண்ணுங்க கண்டிப்பா தரமான விஷயத்தை சொல்கிறேன்.
திரைப்படத்திற்கான திரைக்கதை முடித்து விட்டீர்களா?
கதையையும் முடிந்தது. இந்த படத்தில் கேமராமேன் வெற்றி சார் அசிஸ்டெண்ட் சுபாஷ் நாதன் தான் எங்கள் படத்தின் கேமராமேன்
விரைவில் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் அறிவிப்பு வெளியாகும்.
இந்த குறும்படம் எத்தனை விருதுகள் பெற்றுள்ளது அதைப்பற்றி?
200 விருதுகள் பெற்றுள்ளது. அதிகபட்சமாக விருதினை பெற்ற பெஸ்ட் ஸ்கிரிப்ட் 50 விருது. கடைசியாக இக் குறும்படத்தில் உழைத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
Director Karthikeyan talks about his short film “Sithai”