தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கோவை வடக்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.தங்கவேலு தேர்தலில் போட்டியிடுகிறார்.
எனவே தேர்தல் நடத்தும் அலுவலரான உ.முருகேசனிடம் இன்று (மார்ச் 18) வேட்பு மனுத் தாக்கல் செய்தார் தங்கவேலு.
அப்போது கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உடனிருந்தார்.
பின்னர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“40 ஆண்டுகள் தொடர்ந்து நற்பணி செய்து வருபவர் தங்கவேலு.
அவரின் குரல் சட்டப்பேரவையில் ஒலிக்க வேண்டும்.
திருப்பூரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலப் பொருளாளர் சந்திரசேகர் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளது அரசியல் காரணமாக இருக்கலாம்
பேருந்தில் சென்று கொண்டிருந்தவன் நான். என்னை ஹெலிகாப்டரில் செல்ல வைத்ததே இந்த மக்கள்தான்.
நான் அரசுப் பணத்தில் செல்லவில்லை. சொந்தச் செலவில் பயணிக்கிறேன்.
இதற்காகதான் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன்.
தேர்தல் பரப்புரைக்குச் செல்ல எனக்கு ஹெலிகாப்டர் தேவையில்லை.
ஆனால் நான் சென்றடைய வேண்டிய இடங்களுக்கு குறுகிய நேரத்தில் செல்ல ஹெலிகாப்டரைப் பயன்படுத்துகிறேன்.
எங்களின் கட்சிக் கூட்டங்களுக்கு எளிதாக அனுமதி கிடைப்பதில்லை.
நான் மாணவர்களுடன் பேசிவிடக்கூடாது என்பதற்காக மறைமுகச் செய்தியை கல்லூரிகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
எனக்குப் பல இடங்களில் இடையூறு செய்கின்ளனர்.
மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியாகும்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிகூட இல்லத்தரசிகளுக்கு ஊதியம் திட்டத்தை அறிவித்துள்ளார்.”
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
Kamal Haasan about helicopter journey