தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சாத்தான்குளத்தில் ஊரடங்கை மீறி அதிக நேரம் கடை திறந்து வைத்திருந்ததாக ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் சிறைக்கு அழைத்து சென்று கொடூரமாக போலீசார் தாக்கினர்.
இந்த தாக்குதலால் இருவரும் உயிரிழந்தனர்.
மதுரை ஐகோர்ட் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று ரஜினிகாந்த்..
“தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது” என்று கூறி #சத்தியமா_விடவே_கூடாது என்ற ஹேஷ்டேக்கையும் ட்விட்டரில் பதிவிட்டார்.
இதனையடுத்து ரஜினியின் ட்வீட்டை குறிப்பிட்டு நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…
“தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என நீதிமன்றம் ‘பல’ நாட்களுக்கு முன்பே குறிப்பிட்டுள்ளது. அக்குடும்பத்துக்கு நீதிகிடைக்க தமிழக முதல்வரை எழுப்பும் தலைவர் மு.க.ஸ்டாலினின் தொடர் முயற்சியில் இணைந்துகொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.
ரஜினியின் கருத்தை போல பலர் இதுவரை சொல்லி வந்துள்ளனர். ஆனால் அவர்களை பற்றி உதயநிதி எதையும் சொல்லவில்லை.
ஆனால் ஸ்டாலினுடன் தன்னை இணைத்துக் கொண்டதாக ரஜினியை கிண்டல் செய்யும் உதயநிதி இப்படி ட்வீட் செய்துள்ளதாக ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.