தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூரரைப் போற்று படத்தை முடித்துவிட்டு வாடி வாசல் மற்றும் அருவா ஆகிய இரு படங்களில் நடிக்கவுள்ளார் சூர்யா.
இதில் வாடிவாசலி படத்தை வெற்றிமாறன் இயக்க கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.
ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் இப்படம் வாடிவாசல் என்ற நாவலை தழுவி எடுக்கப்படவுள்ளது.
இப்படம் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் 75வது படமாகும்,
எனவே இந்த படம் தனக்கு மிகவும் ஸ்பெஷல் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஜிவி. பிரகாஷ்.
வாடிவாசல் படத்துக்கான இசை பணிகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டன.
வெற்றி மாறன், சூர்யா, வி கிரியேஷன்ஸ் என எனது சக்திவாய்ந்த கூட்டணியுடன். படத்தின் ஒலி தனித்துவமாக இருக்கும் என ஜி.வி.பிரகாஷ் பதிவிட்டுள்ளார்.