தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் அஜித் மீது நன்மதிப்பு வைத்திருந்தாலும் அவரின் ரசிகர்களை அடிக்கடி கலாய்ப்பது கஸ்தூரியின் வேலை.
இவருக்கும் அஜித் ரசிகர்களுக்கும் அடிக்கடி ட்விட்டரில் சண்டை வருவது சகஜம்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நடிகர் அஜித் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும் நிதியுதவியாக அளித்துள்ளார்.
மேலும் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் வழங்கியிருந்தார் அஜித்.
இந்த நிலையில் அஜித்தை பாராட்டியுள்ளார் கஸ்தூரி.
“தல அஜித் அவர்களின் நல்ல மனசுக்கு 1.25 கோடி நன்றி. நீடூழி வாழ்க. அஜித்துக்கு தாராள மனசு. 1.25 கோடி ரூபாய் தான் கொரோனா நிவாரண நிதிக்காக தமிழ் சினிமா துறையில் இருந்து ஒருவர் வழங்கும் அதிக நிதி என நான் நினைக்கிறேன்.
பெப்சிக்காக 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கியதற்காக ஸ்பெஷல் நன்றி”, என கஸ்தூரி அஜித் பாராட்டியுள்ளார்.