தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், ஆட்டோகிராஃப், வெற்றிக் கொடி கட்டு, தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல தரமான படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்தவர் சேரன்.
அதன்பின்னர் இவரே படங்களில் நடிக்கவும் செய்தார்.
அண்மையில் வெளியான திருமணம் என்ற படத்தை இயக்கி அதிலும் நடித்திருந்தார்.
இதனிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் சேரன்.
அந்நிகழ்ச்சியில் விஜய்சேதுபதியை வைத்து விரைவில் படம் இயக்க இருப்பதாக தெரிவித்திருந்தார் சேரன்.
இந்நிலையில் விஜய் சேதுபதிக்காக தான் எழுதிய கதை எவ்வாறு இருக்கும் என்பதை தெரிவித்துள்ளார்.
அப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “தவமாய் தவமிருந்து போன்ற ஒரு படைப்பாகத்தான் விஜய்சேதுபதி
அவர்களோடு இணையும் படத்துக்காக முடித்து வைத்திருக்கும் திரைக்கதை. ஏனோ செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போகிறது.. அண்ணன்களும் தங்கைகளும் கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கப்போகும் படம். வழி விடுமா காலம்.”
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார் சேரன்.
இந்த பதிவால் இது தவமாய் தவமிருந்து படத்தின் 2ஆம் பாகமாக இருக்குமோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
Cherans movie with Vijay Sethupathi will be about siblings