தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்தியாவில் நடிகர் ரஜினிகாந்தை தெரியாவதவர்களே இல்லை எனலாம். ஏன் உலகளவிலும் கூட சொல்லலாம்.
அப்படியிருக்கையில் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்ற போது அவரை பார்த்து ஒரு வாலிபர் நீங்க யார்? என கேட்டிருந்தார்.
அப்போது நான்தான்ப்பா ரஜினிகாந்த் என ரஜினி சொன்னார்.
இதுபற்றிய ஒரு சின்ன ப்ளாஷ்பேக்..
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது 13 பேர் கொல்லப்பட்டனர்.
எனவே படுகாயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடி சென்றார்.
அப்போது, துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ்ராஜ் என்பவர் “நீங்கள் யார்? இப்போது எதற்காக இங்கு வந்தீர்கள்?” என ரஜினியைப் பார்த்துக் கேட்டார்.
அப்போது இதனை ரஜினி ஹேட்டர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
இந்த நிலையில் இன்று அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு…
துாத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சாம்குமார் என்ற இளைஞரின் வீட்டின் முன்பு இருந்த பைக் திருடி போயுள்ளது. இதுகுறித்து வடபாகம் போலீசார் விசாரணையில், சந்தோஷ்ராஜ் கைதாகியுள்ளார். அவருடன் மணி, சரவணன் என இருவர் பைக்கை திருடியது தெரியவந்துள்ளது.
அவர்களையும் கைது செய்த போலீசார் பைக்கை பறிமுதல் செய்தனர்.
இப்போது நான்தான்ப்பா பைக் திருடன் என ரஜினி ரசிகர்கள் டிரெண்ட்டிங் செய்து வருகின்றனர்.
மேலும் இவர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வாலிபர் என கூறப்படுகிறது.
Nanthanpa bike thirudan Santhosh arrested in bike theft case