தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கமல்ஹாசனின் 60 ஆண்டுகால சினிமா பயணத்தை கௌரவிக்கும் வகையில் கமல் 60 விழா சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் இந்நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடலை முதல்பாடலாக பாடி அசத்தினார்.
நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினி, விஜய்சேதுபதி, கார்த்தி, விக்ரம் பிரபு, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி மற்றும் அவரது தாயார் ஷோபா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் தன் நண்பர் கமலை பாராட்டி ரஜினிகாந்த பேசினார். அப்போது அரசியல் குறித்தும் பேசினார்.
ரஜினிகாந்த் பேசியதாவது…
நான் ஏழையாக இருந்தேன். கண்டக்டராக கஷ்டப்பட்டேன்.
ஆனால் கமல் வசதியாக இருந்தாலும் சினிமாவின் பல்வேறு துறைகளில் கஷ்டப்பட்டு இருக்கிறார்.
சினிமாதுறையில் ஒருவரே நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர், டான்சர் என அத்தனையும் செய்யவில்லை.
உலகில் எந்த ஒரு நடிகரும் 10 வேடங்களில் நடிக்கவில்லை. அதுபோல் தொடர்ந்து 60 வருடங்கள் யாரும் நடிக்கவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி அவர்கள் முதல்வராக ஆவார் என கனவில் கூட நினைத்து இருக்க மாட்டார். 4 மாசத்துல ஆட்சி கவுந்துடும் நினைச்சாங்க. ஆனால் அதிசயம் நடந்துச்சு. அற்புதம் நடந்துச்சு. அதுபோல அதிசயம் எதிர்காலத்திலயும் நடக்கும்.
இவ்வாறு கமல் 60 நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
Rajini talks about TN CM Edappadi Palanisamy at Kamal 60 event