தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தூத்துக்குடி, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு தொடர்ந்து கண்டனங்களை பதிவு செய்து வருகிறார் கமல்ஹாசன்.
பாதிக்கப்பட்டவர்களை தூத்துக்குடி மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்..
தூத்துக்குடியில் பதற்றம் ஓயவில்லை. மக்களை மிரட்டுவது அரசுக்கு அழகல்ல.
இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று ஆட்சியில் இருப்பவர்கள் பதவி விலக வேண்டும். அதுவே அவர்களுக்கான குறைந்தபட்ச தண்டனையாகவே இருக்கும்.
விரைவில் இதை விட பெரிய தண்டனையை மக்களுக்கு அவர்களுக்கு கொடுப்பார்கள்.” என்றார்.
இதனிடையே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை கமல் சந்தித்து பேசியுள்ளதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
144 தடை இருக்கும் போது 5 பேருக்கு மேல் மருத்துவமனைக்கு செல்ல கூடாது என்ற நிலையில் கமல் 20 பேருடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.