தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தூத்துக்குடியில் நடைபெற்று வரும் கலவரத்தால் தமிழ்நாடே கொந்தளிப்பில் உள்ளது.
போலீசுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் அப்பாவி மக்கள் 10 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர்.
ரஜினி, கமல் முதல் பல்வேறு தலைவர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தன் படங்களில் மிகப்பெரிய சோஷியல் மெசேஜ் சொல்லும் டைரக்டர் ஷங்கர் அவர்கள் இன்று நடைபெற்ற ஐபிஎல் மேட்ச் & சிஎஸ்கே அணி பற்றி புகழ்ந்துள்ளார்.
இதற்கு பெரும்பாலோனோர் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
ஊருக்கு மட்டும் சினிமாவில் உபதேசம் பண்ற லட்சணம் இதுதானா என கேட்டு வருகின்றனர்.
பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வந்ததால் சில மணி நேரங்களுக்கு பிறகு ஷங்கர் அந்த பதிவை நீக்கி விட்டார்.
அதன்பின்னர் கலவரத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி என பதிவிட்டுள்ளார்.