தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் சங்கமே ஒன்று திரண்டு நட்சத்திர விழா நடத்தினால் கூட அதில் கலந்துக் கொள்ளாதவர் அஜித்.
ரசிகர்களிடம் நான் சினிமா பார்ப்பதற்கு பணம் வாங்கி விடுகிறோம். பின்பு எதற்கு இந்த கலை நிகழ்ச்சி வசூல் என்பார்.
தற்போது அவரது விசுவாசத்திற்கு சான்றாக இன்னொரு நிகழ்வு நடந்துள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாக குழு அறிவித்தபடி மார்ச் 1ஆம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் ஆகவில்லை.
மேலும் இன்று மார்ச் 16 முதல் திரைப்பட துறை சார்ந்த அனைத்து படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சினிமா தியேட்டர் சங்கங்களும் தாங்களும் தியேட்டர்களை மூடி விடுகிறோம் என்று அறிவித்து அதன்படி செயல்பட்டு வருகின்றனர்.
ஆனால் சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகளில் மட்டும் பழைய படங்கள் திரையிடப்படும் என அறிவித்துள்ளார் அபிராமி ராமநாதன்.
இதனிடையில் அஜித் நடிக்கவுள்ள விஸ்வாசம் படத்திற்கான அரங்குகள் அமைக்கப்பட்டு விட்டன.
படப்பிடிப்பு தொடங்கவில்லை என்றால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும் என அப்படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் முறையிட்டதுடன் படப்பிடிப்பு நடத்த சிறப்பு அனுமதி கேட்டுள்ளாராம்.
இதனையறிந்த அஜித், “அனைவரது நலனுக்கான போராட்டத்தில் நமது நலன் மட்டும் பார்ப்பது நியாயம் அல்ல.
சங்கத்தின் முன்னாள் தலைவரான நீங்கள் முடிவை அமுல்படுத்த தீவிரமாக உழைக்க வேண்டும். அதைவிடுத்து விஸ்வாசம் படத்திற்கு மட்டும் படப்பிடிப்பு நடத்த சிறப்பு அனுமதி கேட்டது தவறானது” என்று சத்யஜோதி தியாகராஜனுக்கு அட்வைஸ் செய்தாராம்.
Ajith advice his Viswasam producer to co operate in Film Industry Strike