தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனது அரசியல் பிரவேசத்தை நடிகர் கமல்ஹாசன் இன்று ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தொடங்கினார்.
அதன்பின்னர் அவர் வருகைக்காக ஏற்பாடாகி இருந்த ‘நம்மவர் சந்திப்பு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது ராமேஸ்வர மீனவர்கள் தங்களின் கோரிக்கையை அவரிடம் தெரிவித்தனர்.
அதனையடுத்து நடிகர் கமல், பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது அவரிடம் ‘அப்துல் கலாம் இறுதி சடங்கில் பங்கேற்காத நீங்கள், அவரது இல்லத்தில் இருந்து கட்சியை தொடங்குவது ஏன்?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு கமல், “நான் இறுதி ஊர்வலங்களில் பங்கேற்பதில்லை. அப்படியொரு பழக்கமில்லை. அது என் நம்பிக்கை” என்று குறிப்பிட்டார்.
தற்போது கமலின் இந்த பேச்சு தமிழக மக்களிடையே பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இதுகுறித்த பல தகவல்கள் தற்போது இணையங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
கமலின் குருநாதர் இயக்குநர் ஆர்.சி. சக்தி மறைந்த போது அவரது வீட்டிற்கு வருகை தந்த கமல் அவரது உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினார்.
கூடவே ‘உடலை எடுக்கும் போது செய்தி சொல்லுங்கள் வருகிறேன்’ என்று கூறிவிட்டு சென்ற அவர் மீண்டும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று மயானம் வரை வந்திருந்தார்.
அதேபோல நடிகை ஆச்சி மனோரமா மரணத்தின் போதும் கலந்து கொண்டார்.
பத்திரிகையாளர் திரு வல்லபன் மறைவுக்கு வந்த அவர் பல மணிநேரம் அமர்ந்திருந்தார்.
இவையெல்லாம் சிலருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்.
ஆனால் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மரணத்தின் போதும் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட போது கமலும் ரஜினியும் அந்த ஊர்வல வண்டியில் பல மணிநேரங்கள் அமர்ந்திருந்தனர்.
அதுபோல் நடிகர் நாகேஷ் மறைவின் போது கமல் கலந்துக் கொண்டார்.
இவ்வாறு பல உண்மைகள் வரலாற்றில் இருக்க இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதில்லை என்ற கொள்கையோடு வாழ்கிறேன் கமல் சொன்னதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தன் அரசியல் பயணத்தை ஆரம்பித்த முதல் நாளில் கமலின் இந்த பேச்சு இப்படி சொதப்பி விட்டதே என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Kamal controversial speech about Abdul Kalam death final event