தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலகத்திற்கே எமனாக உருவெடுத்துள்ளது கரோனா வைரஸ்.
இந்த கொடிய நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்தியாவில் இதுபோன்ற எண்ணிக்கை அதிரித்த வண்ணம் உள்ளது.
இதனையடுத்து 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார் பிரதமர் மோடி.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்துஈடுபட்டு வருகின்றன.
பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கும் மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் பிரபலங்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவர் ஸ்டார் பவன் கல்யாண், கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடி அளித்துள்ளார்.
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு தலா ரூபாய் 50 லட்சம் நிதியுதவியை அளித்திருக்கிறார்.
ஆக.. மொத்தம் ரூ. 2 கோடி நிதியுதவி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Corona Pandemic Pawan Kalyan donates Crores to Central and State Govts