தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் மக்களும் தெலுங்கு மக்களும் சினிமாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களில் முக்கியமானவர்கள்.
எனவே தான் தமிழ் & தெலுங்கில் தலா வருடத்திற்கு 200+ படங்கள் வரை தயாராகி வருகின்றன.
அந்த அளவிற்கு நடிகர்கள் மீது ரசிகர்களின் மோகம் இருக்கிறது. மேலும் ரசிகர்கள் அடிக்கடி தங்கள் நடிகர்களுக்காக சமூக வலைத்தளங்களில் சண்டை போட்டுக் கொள்வது வழக்கம்.
விஜய்யை அஜித் ரசிகர்கள் திட்டுவதும் அஜித்தை விஜய் ரசிகர்கள் திட்டுவதும் அடிக்கடி ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்வதை நாம் பார்த்திருக்கிறோம்.
இதே நிலைதான் தெலுங்கு சினிமாவிலும் நீடிக்கிறது.
இந்த நிலையில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் நடிகர் பிரபாஸை அவதூறு செய்துஉள்ளூர் பவன் கல்யான் ரசிகர்.
ஒரு கட்டத்தில் இருவரும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறியுள்ளது.
இதனையடுத்து கோபத்தில் பவன் கல்யாண் ரசிகரை கொலை செய்த பிரபாஸ் ரசிகர். இந்த சம்பவம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நடந்தேறியுள்ளது
இந்த அதிர்ச்சி சம்பவம் தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்ற சண்டைகளை தடுக்க சம்பந்தப்பட்ட நடிகர்கள் இனியாவது குரல் கொடுத்தால் தான் ரசிகர்கள் அமைதி காப்பார்கள்.
தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க தல – தளபதி குரல் கொடுப்பார்களா என்பதை காத்திருந்து பார்ப்போம்.?!
Prabhas fan kills Powerstar Pawan Kalyan fan