ஒன் மேன் ஷோ ராக்கி..; KGF2 விமர்சனம் 4.25/5

ஒன் மேன் ஷோ ராக்கி..; KGF2 விமர்சனம் 4.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் – யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய்தத், ரவீணா, சரண், ஈஸ்வரி & அச்யுத்குமார்

இயக்கம் – பிரசாந்த் நீல்

இசை – ரவி பர்ஷுர்

ரிலீஸ் தேதி – இன்று 14 ஏப்ரல் 2022

தயாரிப்பு – ஹம்பலே பிலிம்ஸ்

நேரம் – 2 மணி நேரம் 48 நிமிடம்

ரேட்டிங் – 4.25/5

ஒன்லைன்…

KGF 1 முதல் பாகத்தில் கருடன் இறந்துவிடுவார். அந்த இடத்திலிருந்து பார்ட் 2 கதை தொடங்குகிறது.

ஆனந்த் நாக் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவருக்கு பதிலாக அவரது மகன் பிரகாஷ் ராஜ் மாளவிகாவிடம் கதை சொல்கிறார்.

கதைக்களம்..

முதல் பாகத்தில் கருடனை வெட்டி வீசி ’KGF’ ஐ ஆள்வதற்காக தடம் பதிப்பார் ராக்கி (யஷ்). அந்த சாம்ராஜ்யத்தை எப்படி உருவாக்குகிறார்.?

வில்லன் ஒரு பக்கம், கொல்லப்பட்டதாக சொல்ல அதிரா (சஞ்சய் தத்) மீண்டும் கொலை வெறியோடு வருகிறார்.

இதனிடையில் இந்திய அரசும் யஷ்ஷை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்துகிறது.

இந்திய அரசே தேடும் யஷ்? என்ன செய்தார்.? இறுதியில் என்ன ஆனது.? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

யப்ப்ப்பப்பா…. யஷ்… ஒன் மேன் ஷோ நடத்தியிருக்கிறார். கன்னட சினிமாவில் இந்திய சினிமாவையே மிரட்டும் ஹீரோயிசம் உள்ள படமாக இது அமைந்துள்ளது.

பிரதமர் ரவீணா அலுவலகத்தில் தன் மீதே புகார் கொடுக்கும் காட்சி.. துபாய் தலைவனை சந்திக்கும் காட்சி.. எதிரிகளை வீழ்த்தும் காட்சி என மாஸ் காட்சிகளை வைத்து வெறி ஏத்தியிருக்கிறார் டைரக்டர்.

நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி. தன்னை காதலிக்காத பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கி வருகிறார் யஷ். சில நாட்களில் ‘ஐ லவ் யூ’ சொல்லிவிடுகிறார் நாயகி. இது எப்படி.? கொஞ்ச நேரமே வந்தாலும் காட்சிகளில் ஸ்ரீநிதிக்கு முக்கியத்துவம் உண்டு.

நாயகனுக்கு இணையாக மிரட்டிய இருவர் சஞ்சய் தத் & ரவீனா டாண்டன். அகிரா என மிரட்டல் வில்லனாக சஞ்சய் தத். உடல்மொழியும் மிரட்டல் மொழியும் கூடுதல் ப்ளஸ்.

பிரதம மந்திரியாக ரவீனா டாண்டன். இவரின் நடிப்பும் பாராட்டும் வகையில் உள்ளது.

இவர்களுடன் அச்யுத் குமார், ஈஸ்வரி ராவ், ‘வடசென்னை’ சரண் ஆகியோரும் கச்சிதம். கதை சொல்லும் பிரகாஷ் ராஜ் & மாளவிகாவும் உள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

அன்பறிவின் சண்டை வேற லெவல். பிரம்மாண்டத்திற்கு ஏற்ற மிரட்டலான ஃபைட் மேக்கிங்.

அனைத்து துறைகளிலும் ஒளிப்பதிவு, இசை, பின்னணி இசை, படத்தொகுப்பு, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு என உலகத் தரத்தில் ஒரு கன்னட சினிமா என கண்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

ஆனால் சிறுவர்களுக்கு சொல்லும் உதாரணங்களாக தத்துவம் பேசிக் கொண்டே இருப்பதும் சலிப்பை தருகிறது. ஒருவேளை சிறுவர் சிறுமிகளை கவர காட்சி வைத்திருப்பாரோ.?

அரசியல் அதிகாரத்தால் கிரிமினல்களை ஒடுக்கமுடியாமல் போவது ஏன் என்ற அரசியலையும் அப்பட்டமாக அம்பலப்படுத்தியிருக்கிறார்.

முதல் பாதியில் மெதுவாக நகரும் கதை இடைவேளையில் தொடங்கி க்ளைமாக்ஸ் வரை அரங்கை நிஜமாகவே தீப்பிடிக்க வைத்துள்ளது. கத்திக்குத்து, துப்பாக்கிச்சூடு என ரத்தமும் தெறிக்கிறது.

படம் முடியும் போது என்ட் கார்ட்டில் ‘கேஜிஎப் 3’க்கு ஒரு ட்விஸ்ட் வைத்து அடுத்த ட்ரீட்டுக்கும் அழைக்கிறார் பிரசாந்த் நீல்.

கேஜிஃஎப் 2 – ராக்கியின் ஒன் மே ஷோ

Yash is back as Rocky KGF2 Review rating

விஜய் படம் எப்படி இருக்கு.?… ‘பீஸ்ட்’ விமர்சனம்

விஜய் படம் எப்படி இருக்கு.?… ‘பீஸ்ட்’ விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

கோலமாவு கோகிலா, டாக்டர் என இரு டார்க் காமெடி படங்களை கொடுத்த நெல்சன் ‘பீஸ்ட்’ படத்திலும் டார்க் காமெடியை கொடுத்திருக்கிறார்.

கதைக்களம்…

இந்திய ராணுவத்தின் உளவாளியாக இருக்கிறார் விஜய். ஒரு கட்டத்தில் தீவிரவாதியை பிடிக்கும் பொழுது தவறுதலாக ஒரு குழந்தை இறந்துவிடுகிறது.

இதனால் விரக்தியில் தனது வேலையை விட்டுவிட்டு தமிழ்நாட்டில் இருக்கிறார்.

ஒரு சூழ்நிலையில்… நாம் ஏற்கனவே சொன்னது போல ‘கூர்கா’ படம் போல சிட்டியில் உள்ள ஒரு Complex Mallஐ தீவிரவாதிகள் ஹைஜாக் செய்கின்றனர். அங்கு மக்கள் & முதல்வரின் மனைவி குழந்தைகள் என பெரும்பாலானோர் சிக்கிக் கொள்கின்றனர்.

ஏப்ரல் 13 ‘பீஸ்ட்’ ரிலீசில் சிக்கல்.; அரசு தடையால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

மேலும் ரா ஏஜெண்ட்டாக பணிபுரிந்த வீரராகவன் (விஜய்)யும் இதற்குள் இருக்கிறார்.

அவர் எப்படி மக்களை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றுகிறார் என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

விஜய் தன் பணியை சிறப்பாக செய்துள்ளார். டான்ஸ் கலகலப்பு ரொமான்டிக் என ரசிக்க வைத்துள்ளார். ஆக்சனிலும் அசத்தியுள்ளார்.

டாமினிக் செக்யூரிட்டி சர்வீஸில் பூஜா ஹெக்டே ப்ரீத்தியாக அறிமுகமாகிறார். அழகாக இருக்கிறார் பூஜா.

விவேகம் பட வில்லன் போல விஜய்க்கு பில்டப் கொடுத்துள்ளார் செல்வராகவன். (ஹி..ஹி..) அல்தாஃப் உசைன் என்பவராக இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ளார்.

டாம் ஷைன் சாக்கோ வில்லனாக மிரட்டுவார் என எதிர்பார்த்தால் அதில ஒரு ட்விஸ்ட் வச்சிருக்காரு.

ஆகஸ்ட் டார்கெட்.. தீபாவளி ரிலீஸ்..; விஜய் 66 படக்குழுவின் பக்கா ப்ளான்

விஜய் உடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் ஷைன் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விடிவி கணேஷ் & பூஜா ஹெக்டே காம்போவில் காமெடி நல்லாவே வொர்க்கவுட் ஆகியுள்ளது.

டெக்னீஷியன்கள்…

டாக்டர் பட கடைசி சாங் போல… ஜாலியோ ஜிம்கானா பாடல் படம் முடிந்த பின்பு வருகிறது.

அனிருத்தின் இசை படத்திற்கு பெரும் பலம். ‘அரபிக்குத்து…’ மற்றும் ‘ஜாலியோ ஜிம்க்கானா…’ ஆகிய பாடலுக்கு ஆட்டம் போடாதே ரசிகர்களே இருக்க மாட்டார்கள். அப்படி ஒரு குத்தாட்டத்தை காணலாம்.

மனோஜ் பரமஹம்சரின் ஒளிப்பதிவு சூப்பர். காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார். படத்துடன் ஒன்ற வைக்க உதவியுள்ளது.

எடிட்டிங் கச்சிதமாக அமைந்துள்ளது.

ட்ரைலர் ஒரு மாரி. படம் வேற மாரி.; ‘மணி ஹெய்ஸ்ட்’ & ‘கூர்கா’ மாதிரியா..? – நெல்சன் விளக்கம்

நெல்சன் வழக்கமான டார்க் காமெடியை இதிலும் வழங்கியுள்ளார். விஜய்க்காக எக்ஸ்ட்ரா சீன்களை வைத்துள்ளார். ஆக்ஷன் காட்சிகள் அனல் தெறிக்கின்றன.

ஆனால் டார்க் காமெடி & லாஜிக் ஒர்க் அவுட் ஆகவில்லை. யோகிபாபு கிங்ஸ்லி ஆகியோரின் காமெடி சில இடங்களில் மட்டுமே செட்டாகிறது. விடிவி கணேஷ் காமெடி ரசிக்க வைக்கிறது.

கமர்ஷியல் படங்களில் லாஜிக் தேவையில்லை. அதை மனது வைத்தால் இந்த படத்தை விஜய் ரசிகர்கள் ரசிக்கலாம்.

நெல்சன் படம் என்றால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் இதில் மிஸ்ஸிங். மேலும் விஜய்யே நன்றாக காமெடி செய்ய தெரிந்த மாஸ் ஹீரோ தான். அவரையும் பயன்படுத்தி இருக்கலாம்.

அதிகார வெறி காவலர்கள்…; ‘டாணாக்காரன்’ விமர்சனம் 4/5

அதிகார வெறி காவலர்கள்…; ‘டாணாக்காரன்’ விமர்சனம் 4/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

காவலர் பயிற்சி மையத்தில் நடக்கும் கொடுமைகளை அப்பட்டமாக தோலுத்துரிள்ள படம் ‘டாணாக்காரன்’. சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தில் கொடூர காவலராக நடித்த தமிழ் என்பவர் இந்த டாணாக்காரன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.

கதைக்களம்..

1998 காலக்கட்டத்தில் போலீஸ் பயிற்சி மையத்தில் நடக்கும் கதை இது. அந்த இளைஞர்கள் பட்டாளத்தில் விக்ரம் பிரபு, பாவல் நவநீதன் ஆகியோரும் உண்டு.

இந்த பயிற்சி குழுவுடன் 1982ல் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் இணைத்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

1982 குழுவுக்கு 15 வருடங்களுக்கு பிறகு பயிற்சி அளிக்கப்படுவதால் அவர்களின் தற்போதைய வயது 40 முதல் 50 வயது வரை உள்ளது.

பயிற்சி குழுவின் ஆசிரியர்களாக லால், எம் எஸ் பாஸ்கர் உள்ளனர். இவர்களின் மேல் அதிகாரிகளாக மதுசூதனன் மற்றும் போஸ் வெங்கட் ஆகியோரும் உள்ளனர்.

லால் கொடுக்கும் டார்ச்சரான பயிற்சியினால் பலர் ஓடி விடுகின்றனர். பலர் தற்கொலை செய்துக் கொள்கின்றனர்.

கள்ளக்-காதல் மன்னன்..; மன்மத லீலை விமர்சனம் 3.5/5

லால் மற்றும் மதுசூதனன் தரும் டார்ச்சர்களை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்கிறார் விக்ரம் பிரபு. (உதாரணத்திற்கு 350 பேர் உள்ள விடுதியில் 5 டாய்லெட் மட்டுமே உள்ளது.)

இதனால் பயிற்சியில் இன்னும் பல டார்ச்சர் கொடுக்கிறார் லால்.

இறுதியில் என்ன ஆனது? பயிற்சியை முடித்தாரா? விக்ரம் பிரபு, தற்கொலைக்கு தீர்வு உருவானதா? என்பதே படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்..

கம்பீரம் கலந்த கண்ணியம் மிக்க நடிப்பை கொடுத்துள்ளார் விக்ரம் பிரபு. கும்கி படத்திற்கு பிறகு அவரது சினிமா வாழ்க்கையில் மைல்கல் படமாக டாணாக்காரன் அமையும் எனலாம்.

எங்குமே மிகைப்படுத்தாத நடிப்பை கொடுத்துள்ளார். காட்சிகளில் அளவோடு பேசி தன் நடிப்பை பேச வைத்துவிடுகிறார். தண்டனைக்காக எக்ஸ்ட்ரா டிரில் போடும் காட்சிகளில் கண்களை குளமாக்கிவிடுவார்.

அழகான நாயகியாக அஞ்சலி நாயர். இவர் டேய்.. வாடா போடா என விக்ரம் பிரபுவை அழைக்கும் போது ரசிக்க வைக்கிறார். கட்டிக்கோடா.. கட்டிக்கோடா என்ற பாடலில் உணர்வுப்பூர்வமான காதலை கண்களால் காட்டியுள்ளார்.

தரங்கெட்ட தரகர்களின் குரூப் போட்டோ..; செல்ஃபி விமர்சனம் 3.75/5

சித்தப்பா என்ற கேரக்டரில் நடித்துள்ள நபரின் நடிப்பு அனைவரையும் கவரும். 4 பெண் குழந்தைகளை பெற்ற பின் போலீஸ் பயிற்சி மையத்தில் இணைந்த இவரின் நடிப்பு போற்றும்படி உள்ளது.

இவர்களுடன் பாவல் நவகீதன் மற்றும் லிங்கேஷ் ஆகியோரின் நடிப்பும் கவனிக்கத்தக்க வகையில் உள்ளது. இவர்கள் உயர் அதிகாரிகளை எதிர்க்கும்போது நம்மை அறியாமலே சூப்பர்யா என்ற சொல்லத் தோன்றும்.

கொடூர வில்லனாக லால். யப்ப்ப்பா… என்ன நடிப்புய்யா.. லால் வேற லெவல்.

15 வருடங்களாக புரோமோசன் இல்லாமல் ஏட்டய்யா பதவி வகிக்கும் எம்எஸ் பாஸ்கர் நடிப்பு கச்சிதம். க்ளைமாக்ஸில் அசத்தல்.

அதுபோல் முருகன் கேரக்டரில் வரும் அந்த குண்டர் சூப்பர் நடிப்பு.

டெக்னீஷியன்கள்..

ஜிப்ரானின் பின்னணி இசை மிரட்டல். சென்டிமெண்ட் காட்சிகளில் கதையோடு பயணித்து நம்மையும் இழுத்து செல்கிறது.

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். எல்லா காட்சியிலும் 300 பேர்களை வைத்து படமாக்கியுள்ளது சிறப்பு.

போலீஸ் பயிற்சி மையத்தில் கொடுக்கப்படும் பயிற்சிகளை அவலங்களுடனும், ரணகளத்துடனும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் தமிழ்.

காவலர் ஆவதற்கு இத்தனை கஷ்டங்களா என கண்கலங்க வைத்துள்ளார். காரணம் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு இவரும் போலீஸாக இருந்துள்ளார். அந்த அனுபவத்தை சரியாக கொடுத்துள்ளார் எனலாம்.

டாணாக்காரன் படத்தை காவலர்கள் சல்யூட் அடித்து பார்க்கலாம். அதே சமயம் காவலர்கள் இடையே உள்ள ஈகோ பொறாமைகள் தவிர்த்தல் நலம்.

அப்பாவிகளிடையே காவலர்களின் அதிகாரத்தை காட்டாமல் குற்றவாளிகள் மீது அதிகார வெறியை காட்டினால் இந்த நாடு நாடாக இருக்கும் என்பதை தைரியமாக சொன்ன இயக்குனர் தமிழுக்கு தமிழ் சினிமா தலை வணங்கும்.

இதுவரை எத்தனையோ போலீஸ் படங்களை கமர்ஷியலோடு கண்டு இருக்கிறோம். ஆனால் முழுக்க முழுக்க பயிற்சி மையத்திலேயே நடக்கும் கொடுமைகளை காட்டியிருப்பது சிறப்பு.

ஆனால் கடைசியில் போலீஸ் அதிகாரமே ஜெயிக்கிறது என்பதை காட்டியிருக்கிறார். அப்படி என்றால் நேர்மைக்கும் கண்ணியத்திற்கு காலமே இல்லையா-? என்ற கேள்வியும் எழுகிறது.

ஒருவேளை டாணாக்காரன் 2ஆம் பாகத்தில் சொல்வாரோ? இயக்குனர் தமிழ்.?

Taanakkaran movie review and rating in tamil

கள்ளக்-காதல் மன்னன்..; மன்மத லீலை விமர்சனம் 3.5/5

கள்ளக்-காதல் மன்னன்..; மன்மத லீலை விமர்சனம் 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

காதல் மன்னன் ஆடும் மன்மத லீலைகளே கதை.

கேரக்டர்கள்…

2010 முதல் 2020 வரை உள்ள 10 ஆண்டுகளில் நடக்கும் கதை இது. அதையும் இதையும் மாற்றி மாற்றி காட்டியுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

2010ல் சம்யுக்தாவுடன் உடலுறவு கொள்கிறார் திருமணமாகாத அசோக் செல்வன்.. அப்போது ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறார்.

2020ல் ரியா சுமனுடன் உடலுறவு கொள்கிறார் திருமணமான (அதே) அசோக் செல்வன்.. அப்போதும் ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறார்.

இரண்டு பிரச்சினைகளில் இருந்தும் மீண்டாரா.? என்ன செய்தார்.? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

சத்யா கேரக்டரில் படு ஸ்மார்ட்டாக இருக்கிறார் அசோக் செல்வன். கொஞ்சம் கமல்… கொஞ்சம் சிம்பு என அசத்தியிருக்கிறார் அசோக்செல்வன்.

ரெண்டு ஹீரோயின்களுடன் லிப்லாக்கில் டாப் ஹீரோவாகிவிட்டார். இதான் வெங்கட்பிரபுவின் ஹாலிவுட் ஹாட் டச் போல…(ஹி..ஹி.. செம மூட்)..

2 ஹாட்டான நாயகிகள் சம்யுக்தா ஹெக்டே & ரியா சுமன். போட்டி போட்டு கவர்ச்சி காட்டியுள்ளனர். நல்லாவே மூட் ஏத்துறீங்க.

க்யூட்டான ஹீரோயின் ஸ்மிருதி வெங்கட். இந்த அழகான அன்பான மனைவிக்கு எப்படியா துரோகம் செய்ற.? என கேட்கிற அளவுக்கு சீன் வச்சிருக்காரு… (ஆனா… Boys always Boys.. தானே.)

அப்பாவி கேரக்டரில் நடிகர் ஜெயபிரகாஷ். முதிர்ச்சியான நடிப்பு. கயல் சந்திரன் சிறிய வேடத்தில் கலக்கல்.

பிரேம்ஜி & வைபவ் & கருணாகரன் பெயரளவில் வருகின்றனர்.

டெக்னீஷியன்கள்…

அடல்ட் காமெடி படத்துக்கு ஏற்ற கிளுகிளுப்பை தன் பின்னணி இசையில் கொடுத்துள்ளார் பிரேம்ஜி. 3 ஹீரோயின் இருந்தும் ஒரு கிக்கான சாங் கொடுத்து இருக்கலாமே ப்ரோ. இவரின் இசை கூடுதல் பலம்.

பெரும்பாலும் இரண்டு வீடுகளிலும் ஒரு பண்ணை வீட்டிலும் தான் கதையே நடக்கிறது. இதை போரடிக்காமல் வித்தியாசமான கேமரா ஆங்கிள் வைத்து ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தமிழ் ஏ அழகன்.

முதல்பாதி முழுவதும் அசோக் செல்வன் சம்யுக்தா ரியா சுமன் ஸ்மிருதி வெங்கட் ஆகியோரை மட்டுமே மாறி மாறி காட்டியிருப்பது சலிப்பை தருகிறது. ஆனால் 2ம் பாதியில் தன் லீலையை காட்டியிருக்கிறார் வெங்கட்பிரபு.

கொரோனா காலத்தில் 2 வீட்டில் மட்டும் சூட்டிங்கை முடித்திருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்.

க்ளைமாக்ஸில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுத்து ஸ்கோர் செய்துவிட்டார் வெங்கட் பிரபு. ஆனால் க்ளைமாக்ஸ் சட்டென கன் ஷாட் போல முடிந்துவிடுகிறது.

ஆக இளைஞர்களை ஜாலியா ஒரு படத்தை பார்க்க அழைக்கிறார் டைரக்டர்.

ஆக.. கள்ளக்காதல் மன்னன்.. மன்மத லீலை.

Manmatha Leelai movie review and rating in Tamil

தரங்கெட்ட தரகர்களின் குரூப் போட்டோ..; செல்ஃபி விமர்சனம் 3.75/5

தரங்கெட்ட தரகர்களின் குரூப் போட்டோ..; செல்ஃபி விமர்சனம் 3.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிப்பு – ஜிவி பிரகாஷ்குமார், வர்ஷா பொல்லம்மா, கௌதம் மேனன், வித்யா பிரதீப், சந்திரசேகர், குணாநிதி
இயக்கம் – மதிமாறன்
இசை – ஜிவி பிரகாஷ்குமார்
தயாரிப்பு – டிஜி பிலிம் கம்பெனி

ஒன்லைன்…

தமிழ் சினிமாவில் இதுவரை எவராலும் சொல்லப்படாத கதை. இன்ஜினியரிங் & மருத்துவக் கல்லூரிகளில் ‘மேனேஜ்மென்ட் சீட்’ என்ற காலி இடங்களுக்காக தரகர்கள் முதல் படத்தின் கதை.

கதைக்களம்..

வாகை சந்திரசேகர் கட்டளைப்படி கட்டாயத்தின் பெயரில் ஊரிலிருந்து சென்னைக்கு வந்து இன்ஜினீயரிங் படிக்கிறார் நாயகன் ஜிவி. பிரகாஷ்.

சில நேரம் கல்லூரி கட்டணம் கட்டவே அவஸ்தைப்படுகிறார். எனவே பார்ட் டைம் ஜாப் போக சொல்கிறார் அப்பா சந்திரசேகர்.

எனவே உடனே பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு, கல்லூரியில் மாணவர்களை சேர்த்துவிடும் புரோக்கர் வேலை பார்க்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

ஒரு சீட்டுக்கு இவ்வளவு என நிர்ணயித்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்.

இதே வேலையை தான் முன்னாள் இன்ஜினியரிங் ஸ்டூடண்ட் கௌதம் மேனன் பெரிய கும்பலுடன் செய்து வருகிறார். இதற்கு பின்னால் ஒரு பெரிய யூனிவர்சிட்டியே நிற்கிறது.

ஒரு கட்டத்தில் நண்பர்களால் பெரிய லாபத்திற்கு ஆசைப்பட்டு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

இந்த பிரச்னை கௌதம் மேன்னுக்கு தெரிய வருகிறது.

ஜிவி. பிரகாஷை என்ன செய்தார் கௌதம் மேனன்.? சிக்கலில் இருந்து விடுபட்டாரா நாயகன்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கல்லூரி மாணவனாக கனல் கேரக்டரில் கணமாக வேடத்தை எடுத்து அதை 100% சரியாக செய்துள்ளார் ஜிவி. பிரகாஷ்.

நண்பனுக்காக உருகி, அப்பாவிடம் கோபித்து, காதலியிடம் சண்டையிட்டு என நடிப்பில் பளிச்சிடுகிறார்.

என் அப்பாவ நாட்டின் கோவம் வரது என சொன்னாலும் ஒரு கட்டத்தில் அப்பாவைப் பற்றி தெரிந்தவுடன் வருந்துவது செம.

இறந்து போன நண்பன் நசீருக்காக உருகி நட்புக்காக சம்பாதித்து கைதட்டல் பெற்றிருக்கிறார்.

ஸ்டைலிஷ் வில்லனாக இந்த படத்திலும் ரவிவர்மா கேரக்டரில் அசத்திருக்கிறார் கவுதம் மேனன். அசத்தலான பின்னணி இசையை அவருக்கு போட்டுள்ளார் ஜிவி பிரகாஷ்.

இரண்டு நாயகிகள் வர்ஷா பொல்லம்மா & வித்யா பிரதீப். இருவருக்கும் கண்கள் ப்ளஸ்.. டயலாக்கை கூட கண்களாலே பேசிவிடுகிறார்கள். நடிப்பில் கச்சிதம்.

ஜி.வி.பிரகாஷின் நண்பராக வரும் நசீர் (டி.ஜி.குணாநிதி) சென்டிமெண்ட் நடிப்பில் கவர்கிறார். இவர் எடுக்கும் முடிவு பல இளைஞர்களுக்கு பாடமாக அமையும்.

குணாநிதியின் தாயாக ஸ்ரீஜா நம்மை கவர்கிறார்.

வாகை சந்திரசேகர் அனுபவ நடிப்பை வழங்கியிருக்கிறார்.

தங்கதுரை, சாம் பால் ஆகியோர் கதை ஓட்டத்திற்கு உதவியுள்ளனர். கல்லூரி அதிபராக ஈஸ்வரமூர்த்தி கேரக்டரில் சங்கிலி முருகன் நல்ல தேர்வு. இவரின் மருமகனும் கச்சிதம்.

டெக்னிஷியன்கள்…

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம். படத்துடன் ரசிகனை ஒன்ற வைக்கும். போஸ்மேன் பாடலை தவிர பாடல்கள் பெரிதாக இல்லை.

பின்னணி இசை – ஜி.வி.பிரகாஷ். ஒளிப்பதிவு – விஷ்ணு ரங்கசாமி.

படத்தின் எடிட்டரும் (இளையராஜா) பாராட்டுக்குரியவர்தான். தேவையற்ற காட்சிகள் இல்லை எனலாம்.

தனியார் கல்வி நிறுவன முறைகேடுகளை அப்பட்டமாக வெளிச்சம் போட்ட இயக்குனர் மதி மாறனுக்கு பாராட்டுகள். யூகிக்க முடியாத திரைக்கதை அமைத்திருக்கிறார்.

இன்ஜினியரிங் & மருத்துவக் கல்லூரிகளில் ‘மேனேஜ்மென்ட் சீட்’ எனப்படும் காலி இடங்களுக்காக தரகர்கள் நன்கொடையை எப்படி வசூலிக்கிறார்கள்.

இந்த ஆட்டத்தில் யாரால் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை துணிவோடு ஆணித்தரமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் மதிமாறன். இவர் இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளர்.

பல கல்வி நிறுவனங்கள் மக்களின் பணத்தை சுரண்டும் வேளையில் தைரியமாக படத்தை எடுத்த தயாரிப்பாளர் சபரீஷ்-ஐ வெகுவாக பாராட்டலாம்.

ஆக… இந்த செல்ஃபி… தரங்கெட்ட கல்வி தரகர்களின் குரூப் போட்டோ..

Selfie movie review and rating in tamil

மலைக்க வைத்த மலேசிய நாணயம்..; பூ சாண்டி வரான் விமர்சனம் 3.25/5

மலைக்க வைத்த மலேசிய நாணயம்..; பூ சாண்டி வரான் விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்

நம் அம்மாக்கள் குழந்தைக்கு சோறு ஊட்டும் போது பூச்சாண்டி கிட்ட புடிச்சி கொடுத்துடுவேன் என பயமுறுத்தி உணவளிப்பார்கள்.. ஆனால் பூச்சாண்டி என்றால் யார்? என்றே நமக்கே தெரியாது. ஆனால் நம்முடைய முன்னோர்கள் அதற்கான காரணத்தை வைத்திருப்பார்கள். அது என்ன என பூச்சாண்டிக்கு அழகான விளக்கம் கொடுத்து நம்மை அசர வைத்துள்ளனர்.

மதுரையில் இருந்து மலேசியா நோக்கி கதை நகர்கிறது. படத்தின் கதை முழுவதும் மலேசியாவில் மலேசிய மக்களுடன் படமாக்கப்பட்டுள்ளது.

கதைக்களம்..

சங்க கால வரலாறுகளை தெரிந்துக் கொள்வதிலும் ஆர்வம் உள்ளவர் முருகன். மேலும் அமானுஷ்ய சக்திகளை பற்றி அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் கொண்ட இவர் மலேசியா மக்களை சந்திக்கிறார்.

அங்கு சங்கர் என்பவரை சந்தித்து அவர் சந்தித்த அமானுஷ்யத்தை பற்றி கேட்கிறார். சங்கர் தனது நண்பர்கள் அன்பு மற்றும் குருவுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை விவரிக்கிறார்.

அதில்… நாங்கள் ஆவியுடன் பேச ஒரு முறை முயற்சித்தோம். சங்க கால நாணயத்தை வைத்து எங்கள் விளையாட்டை ஆரம்பித்தோம். ஒரு கட்டத்தில் விளையாட்டு விபரீதமாகி அந்த மல்லிகா ஆவி எங்கள் நண்பன் குருவை கொன்றுவிட்டது.

அந்த நாணயம்தான் எங்கள் வாழ்க்கையில் விளையாடியது. எனவே அந்த நாணயம் ரகசியம் தெரிய வேண்டும். அப்படி என்றால் நாங்கள் மல்லிகாவின் மரணத்திற்கு யார்? காரணம் என்பதை அறிய வேண்டும் என்கின்றனர் மற்ற நண்பர்கள்..

அதன்படி முருகனுடன் இணைந்து சங்கர் அன்பு ஆகிய மூவரும் ஆவியின் உண்மைகளை கண்டறிய முற்படுகின்றனர்.

அதன்பின்னர் என்ன ஆனது? ஆவி யார்? அதை குருவை கொல்ல என்ன காரணம்.? யார் அந்த மல்லிகா? அவரின் மரணம் எப்படி நிகழ்ந்தது.? என்பதே இந்த பூச்சாண்டியின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

முருகனாக மிர்ச்சி ரமணா நடித்துள்ளார். இவர் மட்டும்தான் மதுரையை சேர்ந்தவர். மற்ற நடிகர்கள் அனைவரும் மலேசியாவை சேர்ந்தவர்கள். இவர்கள் நாம் தினம் பார்க்கும் நண்பர்களை போல யதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளனர்.

ஆவியுடன் பேசும்போது கலகலப்பாக தொடங்கி பின்னர் திகிலாக மாறும்போது நம்மையும் சீட் நுனிக்கே கொண்டு வந்துள்ளனர்.

தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், கணேசன் மனோகரன் மூவரும் நண்பர்களாக நடித்துள்ளனர்.

சங்கர் கேரக்டரில் நடித்தவர் (தினேஷ்) சபாஷ் போட வைத்துள்ளார். உயிர் நண்பனை இழந்துவிட்ட சோகத்தை உணர்ந்து நடித்திக்கிறார். அதே சமயம் உயிருடன் இருக்கும்போது அவரை கலாய்ப்பதிலும் குறையில்லை. அதுபோல் மல்லிகாவின் கணவனுடன் நண்பனுக்காக சண்டை போடுவதிலும் கைத்தட்டல் பெறுகிறார்.

மாற்றுத் திறனாளியான லோகன் நாதன். நீங்க எல்லாம் ஒரு நாள் எங்களை போல வாழ முடியுமா?. மலம் கழிக்க கூட அடுத்தவரை நாங்கள் எதிர்பார்க்க வேண்டியுள்ளது. எழுந்து நடந்துவிட மாட்டோமா? என ஏங்குகிறோம் என பேசும்போது நம்மை அறியாமல் கண்கள் குளமாகும். க்ளைமாக்ஸில் இவரது ட்விஸ்ட் ஹைலைட்.

மல்லிகா வேடத்தில் வரும் ஹம்சினி பெருமாள் கொஞ்சம் நேரமே என்றாலும் கேரக்டரின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் ஒரு காட்சியில் சொல்லப்படுவது போலவே சில காட்சிகளில் சமந்தாவின் சாயலில் உள்ளார்.

டெக்னிஷியன்கள்…

பேய் படங்களுக்கு பாடல்கள் தேவையில்லை என்பதை உணர்ந்து இருக்கிறார் டைரக்டர். அதே சமயம் க்ளைமாக்ஸில் புரோமோ சாங் வைத்து படத்தின் உயிரோட்டத்தை சொல்லியிருப்பது சிறப்பு. இசையமைப்பாளர் டஸ்டின் ரிதுவன் ஷா தன் பணியில் பாராட்டைப் பெறுகிறார்.

அசல் இஸம் பின் முகமது அலியின் ஒளிப்பதிவு படத்தின் பலம். மலேசிய அழகையும் இருளையும் காட்டியிருப்பது சிறப்பு. கிளைமாக்ஸ் காட்சியில் இன்னும் கவனம் செலுத்தி படமாக்கியிருக்கலாம்.

சங்க கால நாணயம் முதன்முறையாக மல்லிகாவின் கையில் கிடைக்கும்போது ஏதோ கீழே போட்டு எடுத்தது போல உள்ளது. மண் கிடந்த நாணயம் கரை கூட இல்லாமல் போனது ஏனோ..?

அதே சமயம் ஒரு நாணயத்தில் உள்ள வரைப்படங்கள் குறித்து முருகனின் அப்பா பேசும் வசனங்கள் ஆச்சரியப்பட வைக்கிறது.

வழக்கமான பேய் படமாக இல்லாமல் ராஜேந்திர சோழன் மற்றும் களப்பிரர் ஆட்சிக் காலத்தையும் நமக்கு புரியும் படி சொல்லிருப்பது இயக்குனர் ஜேகே விக்கியின் நல்லதொரு முயற்சி.

ஒரு சின்ன பட்ஜெட்டில் அமானுஷ்ய சக்திகளின் நிராசைகளை சொல்லிய விதம் அருமை.

இந்த படம் மலேசியாவில் ‘பூச்சாண்டி’ என்ற பெயரில் ரிலீசாகிவிட்டது. தமிழகத்தில் பூ சாண்டி வரான் என தலைப்பு வைத்துள்ளனர்.

யோகிபாபு நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ஏற்கெனவே ‘பூச்சாண்டி’ என தலைப்பு வைத்துவிட்டதால் இங்கு இந்த படப்பெயர் மாற்றப்பட்டுள்ளது.

விரைவில் தமிழ்நாட்டிலும் காணலாம்.

ஆக.. இந்த பூ சாண்டி வரான்.. பயத்துடன் பார்க்க தகுந்தவன் தான்…

Poochandi Varaan movie review and rating in tamil

More Articles
Follows