தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : வீரபாரதி, சமீரா, எலிசபத், காதல் சுகுமார் மற்றும் பலர்.
இசை : முரளி கிருஷ்ணன்
ஒளிப்பதிவு : ஜெயச்சந்திரன்
படத்தொகுப்பு : ஆர் எஸ் சதீஷ்குமார்
இயக்கம் : கே. விஜேந்திரன்
பிஆர்ஓ : சக்தி சரவணன்
தயாரிப்பாளர் : சந்திரகாசன், வெங்கடேஷ், விஜேந்திரன்
கதைக்களம்…
தமிழகத்தில் உள்ள பெரம்பலூர் மாவட்டம் திருவளக்குறிச்சி என்ற கிராமத்தில் வாழும் ஒரு பார்வையற்ற தாய் மற்றும் மகன் பற்றிய கதை.
படத்தின் முதல் காட்சியே விறுவிறுப்பாக செல்கிறது. எட்டு கொலைகளை செய்த வீரபாரதிக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என அந்த கிராமமே சொல்கிறது.
ஆனால், அவன் செய்திருக்க மாட்டான் என அவனின் தாயும் காதலியும் நம்புகின்றனர்.
இதனிடையில் இந்த கொலைகளின் பின்னணி என்ன? நிஜமான கொலைக்காரன் யார்? என்ற உண்மைகளை ஒரு பத்திரிகையாளர் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதே மீதிக்கதை.
நாயகன் வீரபாரதி. தாடியும் சோகமும் உள்ளவராக படம் முழுக்க வருகிறார். இவர்தான் கொலை செய்திருப்பார் என்பது போலவே இவரது தோற்றம் அமைந்துள்ளது ப்ளஸ் பாயிண்ட்.
நாயகி சமீரா கிராமத்து பெண்ணாகவும் குளிர்ச்சியாகவும் வருகிறார். காதலனையும் வருங்கால மாமியாரையும் பார்த்துக் கொள்ளும் பரிவு ரசிக்க வைக்கிறது.
கண் தெரியாத விதவைத் தாயாக எலிசபத். அவர் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். மகனுக்காக உருகும் காட்சிகளிலும் பாட்டு பாடும் காட்சிகளிலும் கவர்கிறார்.
காமெடி நடிகர்கள் வையாபுரி, கிரேன் மனோகர், நெல்லை ஆகியோர் இருந்தும் காமெடி கடுப்பை ஏற்றுகிறது.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
பாடல்களும் கிராமத்து காட்சிகளும் படத்தின் போக்கை கொஞ்சம் ரசிக்க வைக்கிறது.
தாய் மகன் உறவு, காதல், தூக்குத் தண்டனை சட்ட விதிமுறைகள், தாலாட்டு இசை அனைத்தையும் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
க்ளைமாக்ஸிஸ் இருந்தும் உயிர் கொடுப்பாள். இறந்தாலும் உயிர் கொடுப்பாள் தாய் என்பதோடு நிறைவு செய்து மனங்களை ஈரமாக்குகிறர்.
மொத்தத்தில் வென்று வருவான்… அனைத்தையும் தாய் வென்று விடுவாள்