விமர்சனம் : ஷாங்க் சி – த லெஜெண்ட் ஆஃப் த டென் ரிங்ஸ் – எப்படி இருக்கிறார்.?

விமர்சனம் : ஷாங்க் சி – த லெஜெண்ட் ஆஃப் த டென் ரிங்ஸ் – எப்படி இருக்கிறார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் (MCU) 25-வது படம்.

ஒரு புதிய சூப்பர் ஹீரோவை மீண்டும் தன் தங்கள் பி்ரம்மாண்ட திரையுலகுக்கு அழைத்து வந்திருக்கிறது மார்வெல்.

சக்தி வாய்ந்த 10 (ரிங்ஸ்) வளையங்களை வைத்துக் கொண்டு சாம்ராஜ்யத்தை வீழ்த்தி சாதனை படைத்த தந்தையை எதிர்க்கிறான் அவரது மகன்.

யார் வெற்றி அடைந்தார்.? என்பதே ஒன்லைன்.

அவெஞ்சர்ஸ் – எண்ட் கேம் என்ற படத்தின் கதையின் தொடர்ச்சியாக இந்தக் கதை தொடங்குகிறது.

டென் ரிங்க்ஸ் அமைப்பின் தலைவனான வென்வூ, தன்னிடம் உள்ள வளையங்களின் சக்தியால் ஆட்சி செய்ய நினைக்கிறான்.

அற்புத சக்திகள் கொண்ட மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சிறிய மர்ம கிராமத்தைக் கைப்பற்றி அதை ஆள நினைக்கிறார்.

ஆனால், அந்த கிராமத்தைச் சேர்ந்த லெய்கோ வு என்ற பெண் மீது காதல் கொண்டு தன் லட்சியத்தை மறந்து அவளை திருமணம் செய்து கொள்கிறார்.

இவர்களுக்கு ஷாங்க் சி என்ற மகனும், மெங்கர் சாங் என்ற மகளும் பிறக்கின்றனர்.

ஒரு கட்டத்தில் மீண்டும் (டோனி லியுங்) அந்த 10 ரிங்ஸ் கொண்டு அந்த மர்ம கிராமத்தைப் பிடிக்க நினைக்கும் போது அவருக்கு எதிராக அவரின் மகன் ஷாங் ச்சி, மகள் மெங்கர் சாங் திடீரென திரும்புகின்றனர்.

இதன்பின்னர் இவர்களுக்குள் நடக்கும் அமிரனியான சாகசங்களே ‘ஷாங் சி’ – தி லெஜெண்ட் ஆப் தி டென் ரிங்ஸ்’ படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஷாங்க் சி யாக வரும் சிமு லியு ஆக்சன் காட்சிகளில் தெறிக்கவிட்டுள்ளார்.

இவரின் தோழியாக நடிகை ஆவ்க்வாஃபினா. காமெடி காட்சிகளில் வேற லெவல்.

டோனி லியுங் மனைவியான ஃபலா சென் ரசிகர்களின் அனுதாபத்தையும் அள்ளிவிடுகிறார்.

மந்திர சக்திகள், காஸ்ட்யூம் என பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தியுள்ளனர்.

இந்த படத்தில் விலங்குகள் பேசுவது குழந்தைகளை வெகுவாக கவரும்.

சீட் நுனியில் உட்கார வைக்கும் திரில்லர் காட்சிகள் உள்ளன. கிராபிக்ஸ் காட்சிகள் பிரம்மிக்கும் வகையில் அமைந்துள்ளன.

மொத்தத்தில் ஷாங் சீ அண்ட் த லெஜெண்ட் ஆஃப் த டென் ரிங்ஸ் படத்தை குடும்பத்துடன் ரசிக்கலாம்.

Shang Chi And The Legend Of The Ten Rings movie Review

சார் அவார்ட் பட்டா போட்டுக்கலாம்..; சார்பட்டா பரம்பரை விமர்சனம் – 4/5

சார் அவார்ட் பட்டா போட்டுக்கலாம்..; சார்பட்டா பரம்பரை விமர்சனம் – 4/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் – ஆர்யா, பசுபதி, கலையரசன், துஷாரா விஜயன், அனுபமா, ஜான்விஜய், காளி வெங்கட், தங்கதுரை

இசை – சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு – முரளி

இயக்கம் – பா.ரஞ்சித்

தயாரிப்பு – கே 9 ஸ்டுடியோஸ், நீலம் புரொடக்ஷன்ஸ்

ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி & காலா’ படங்களுக்கு பிறகு ரஞ்சித் இயக்கியுள்ள படம் சார்பட்டா பரம்பரை. எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகளவில் இருந்தது.

கதைக்களம்..

1950 முதல் 1970களில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

சார்பட்டா பரம்பரை என்ற குத்துச்சண்டை அணிக்கும், இடியப்பா பரம்பரை என்ற குத்துச்சண்டை அணிக்கும் இடையே கிட்டத்தட்ட 30-40 வருடங்களாக பகை இருக்கிறது. சார்பட்டா பரம்பரையின் வாத்தியார் ரங்கன்.

பாக்ஸிங் போட்டியில் இறங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் அம்மாவின் கண்டிப்பால் போட்டியிட முடியாமல் சார்பட்டா பரம்பரை அணி மீது தீவிர ரசிகராகவே இருக்கிறார் ஆர்யா (கபிலன்).

ஒரு கட்டத்தில் வாத்தியார் ரங்கனுக்கு இடியப்ப பரம்பரையால் பெரிய சவால் வருகிறது.

இதனால் தன் ரசிக சிஷ்யன் கபிலனையே இடியப்ப பரம்பரைக்கு எதிராக களமிறக்குகிறார் ரங்கன்.

இடியப்ப பரம்பரையைச் சேர்ந்த ஜாம்பவான் வேம்புலியை வீழ்த்தி காட்டுவேன் என போட்டியே போடாத கபிலன் சவால் விடுகிறார்.

கபிலன் ஜெயித்தாரா.? ரங்கன் என்ன செய்தார்.? வென்றது இடியப்ப பரம்பரை..? சார்பட்டா பரம்பரை.? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்...

ஆர்யா நீ வேற லெவல்ய்யா… நான் கடவுள், மதராசப்பட்டிணம், அவன் இவன், மகாமுனி படங்களுக்கு பிறகு ஆர்யா அசத்திய படம் இது. பாகுபலி பாணியில் இவரது பாடிகட்டு.

ரசிகர்களை ஆக்சனில் மிரள வைத்துள்ளார். தன் தாய் அனுபமாவிடம் அடங்கும் போது நம்மை அழவைக்கிறார். அந்த காலகட்டத்தில் பெற்றோர்கள் எவ்வளவு கண்டிப்பானவர்கள் என்பதும் இதற்கு ஒரு சாட்சி.

வாத்தியார் ரங்கனாக பளிச்சிடுகிறார் பசுபதி. அதே நேரத்தில் திமுகவின் வெறித்தனமான தொண்டராகவும் பலே.

பசுபதியின் மகனாக கலையரசன். இவர் நல்லவரா? கெட்டவரா? என கன்ப்யூசன் செய்கிறார். இரண்டிலும் ஸ்கோர் செய்கிறார்.

வேம்புலி ஆக ஜான் கொக்கேன். டான்சிங் ரோஸ் பாக்சராக ஷபீர் கல்லரக்கல் இருவருமே யார்? என கவனிக்க வைப்பார்கள். பேட்ட படத்தில் நடித்த ஓரிரு கலைஞர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

காளி வெங்கட் & தங்கதுரை இருவரும் ரசிக்க வைக்கின்றனர்.

ஆங்கிலோ இந்தியனாக ஜான் விஜய். தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசும் ஸ்டைல் சூப்பர்.

ஆர்யாவிற்கு மனைவியாக துஷாரா விஜயன். முதலில் கணவருக்கு பணிந்து போவதும் பின்னர் எகிறி வாடா போடா என்பதும் துஷாரா தூள் கிளப்புகிறார்.

இதில் வேம்புலி மற்றும் டான்ஸிங் ரோஸ் ஆகிய கேரக்டர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும்.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

படத்தின் இயக்குனர் ரஞ்சித்துக்கு பிறகு மெயின் பில்லரே ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம். 1970 காலக்கட்டத்தை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து வைத்திருக்கிறார்.

பாக்ஸிங் போட்டி நடக்கும் மைதானம், மணிக்கூண்டு, மைக்கில் பேசுபவர், தெருக்கள், சைக்கிள், உடைகள், வீட்டில் உள்ள பொருட்கள் என அந்தக் காலத்தை கண்முன் கொண்டு வந்துள்ளார்.

படத்தின் சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவு. இந்த படத்தை பார்த்தால் நமக்கும் பாக்ஸிங் பயில ஆர்வம் வரும். அப்படி ஒரு நேர்த்தியான சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையில் ஓரிரு பாடல்கள் தான். தனியாக இல்லாமல் படத்தின் கதையோட்டத்துடன் வருவதால் அதை இண்டர்நெட்டில் ஓட்டிப் பார்க்க தோன்றவில்லை.

பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

ஒளிப்பதிவாளர் முரளி ஜி.. சூப்பர் ஜீ.. சூப்பர் ஜீ… பகல் இரவு காட்சிகளும் சரி.. பாக்ஸிங் காட்சிகளும் சரி அருமையான ஒளிப்பதிவு.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை பாக்ஸிங் தான்.. ஆனாலும் படத்தின் மீதான ஆர்வத்தை ஊட்டியிருக்கிறார் ரஞ்சித்.

தன் சாதீய குறியீடுகளை இனியாவது ரஞ்சித் கொஞ்சம் தவிர்க்கலாம்.. இதில் பெரிதாக சொல்லவில்லை என்றாலும் குறியீடுகளை கவனிக்க வைக்கிறார்.

பாக்ஸிங் விட்டு ஆர்யா வேறு தொழில் செய்வது படத்தை வேறு ட்ராக்கில் எடுத்து செல்வது கொஞ்சம் சோர்வைத் தருகிறது. அதில் சில காட்சிகளை எடிட்டர் வெட்டியிருக்கலாம்.

படத்தின் ஹீரோ, கேரக்டர்கள், திரைக்கதை ஆர்ட் ஒளிப்பதிவு .. இவற்றில் எதற்காவது நிச்சயம் அவார்ட் உறுதி. வாழ்த்துக்கள்.

காங்கிரஸ் திமுக ஆட்சிக் காலத்தில் நடந்தவற்றை அப்படியே காட்டிய ரஞ்சித்தின் தைரியத்தை நிச்சயம் பாராட்டலாம்.

ஆக… சார்பட்டா பரம்பரைக்கு .. சார் அவார்ட் பட்டா போட்டுக்கலாம்.

படத்தில் ‘மிசா’ குறித்து பேசப்பட்டுள்ளது. எனவே அதுபற்றிய ஒரு பார்வை..:

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக இந்திய அரசியலமைப்பின் 352வது விதியின்படி 1975 ஜூன் 25 ஆம் தேதி நெருக்கடி நிலை அறிவித்து அவசரநிலை பிரகடனம் செய்தார். இந்த நெருக்கடி நிலை 1977 மார்ச் 21 ஆம் தேதி வரை 19 மாதங்கள் நீடித்தது.

தமிழகத்தில் அப்போது கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி, சிற்றரசு, சிட்டி பாபு, பாண்டியன் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது மிசா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்டமான (The Maintenance of Internal Security Act) மிசா சட்டம் 1977-இல் ஜனதா கட்சி அரசால் ரத்து செய்யப்பட்டது.

sarpatta parambarai movie review and rating in Tamil

சோழர் பரம்பரையில் ஒரு கிண்டல் சாதா..; ஜகமே தந்திரம் விமர்சனம் 2.25/5

சோழர் பரம்பரையில் ஒரு கிண்டல் சாதா..; ஜகமே தந்திரம் விமர்சனம் 2.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்..

மதுரையில் பரோட்டா கடை நடத்தி வருகிறார் சுருளி (எ) தனுஷ்.

பணம் கொடுத்தால் கொலையும் செய்வார். ஒருமுறை ஒரு கொலை செய்துவிட்டு தலை மறைவாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

அப்போது தனுஷின் நண்பர் ஒருவர் லண்டனில் அடியாள் வேலை இருக்கிறது. இங்கிலாந்து தாதா பீட்டர் (ஜேம்ஸ் காஸ்மோ) க்கு ஆள் தேவைப்படுகிறது என்கிறார்.

அந்த நாட்டில் மற்றொரு தாதா ஜோஜு ஜார்ஜ் என்ற ஒரு இலங்கை தமிழனை எதிர்க்க ஆளில்லை.

அவனை தீர்த்து கட்டினால் லட்சணக்கணக்கில் பணம் கிடைப்பதாக நண்பர் கூற தனுஷும் லண்டன் செல்கிறார்.

அதன் பின்னர் என்ன ஆனது? லண்டனில் தாதாவாக மாறினாரா..? கொலை பழியில் இருந்து தப்பினாரா தனுஷ்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

பெரும்பாலான படங்களில் வேலையில்லாமல் சுற்றும் தனுஷ் இதில் பிசியாகவே இருக்கிறார். டான் கெட்டப்புக்காக முறுக்கு மீசை எல்லாம் வைத்திருக்கிறார்.

தன் கேரக்டர் ஆரம்ப காட்சியிலே (மதுரையில்) கொலை செய்ய ஒரு ரயிலையே நிறுத்துகிறார் தனுஷ்.

ஓடும் ரயிலில் ஏறி கொலை செய்யும் ஹீரோவை பார்த்திருப்போம். டிரெய்ன் டிரைவரும் டிரெயினை நிறுத்தி கொலை செய்ய சொல்வதும் எல்லாம் ரொம்ப ஓவர்.

தனுஷ் லண்டன் புறப்படுவதற்கு முன்னரே “சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா” என்கிறார். (ஒன்னும் சொல்றதுக்கில்ல)

லண்டன் சென்ற சில தினங்களிலேயே எதிரணியின் (ஜோஜு ஜார்ஜ் + கலையரசன்) தொழில் ரகசியங்களை புட்டு புட்டு வைக்கிறார்.

இலங்கைத் தமிழ்ப் பெண்ணாக வரும் நாயகி ஐஸ்வர்யா லட்சுமியுடன் ரொமான்ஸ் செய்ய முயற்சித்துள்ளார்.

எதிரிகளை துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு சரமாரி சுடுகிறார் இந்த சுருளி. அசுரன் நடிகர் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

நாயகி ஐஸ்வர்யா லட்சுமி தான் இலங்கையில் இருந்தபோதும் அகதிகளாக திரிந்த போதும் பட்ட கஷ்டங்களை சொல்லும்போது தமிழர்களின் கண்களில் கண்ணீர் நிச்சயம்.

படத்தில் கிட்டத்தட்ட 2 வில்லன்கள். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ & மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ்.

இருவரும் தங்கள் நடிப்பில் சிறப்பு. அதிலும் ஜோஜு ஜார்ஜ் கேரக்டர் மனதில் நிற்கும்.

இவர்களுடன் கலையசரன், சவுந்தரராஜா, ஷரத் ரவி, வடிவுக்கரசி, கஜராஜ் (இயக்குனரின் தந்தை) ஆகியோரும் உள்ளனர். இவர்களின் பங்களிப்பு நன்று.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

“என்னை மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி” பாடல் படத்தில் மிஸ்ஸிங்.. ரசிகர்களுக்கு வருத்தம்.

ரகிட ரகிட.. பாடல் மட்டும் தாளம் போட வைக்கிறது. தியேட்டர் ரிலீஸ் என்றால் ரசிகர்கள் ஆடியிருப்பார்கள்.

சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை பெரிதாக இல்லை. இவர் இசையமைத்த கபாலி & காலா பட லெவலுக்கு பின்னணி இசையில்லை.

ஒளிப்பதிவாளர் தன் பணிகளில் சிறப்பு. குறையில்லை.

கார்த்திக் சுப்பராஜ் இதற்கு முன்பு இயக்கிய பேட்ட பட சாயல் அதிகளவில் உள்ளது.

க்ளைமாக்ஸ் காட்சியில் பேட்ட நினைவில் வருகிறது. லுங்கி + ஸ்வட்டர் உடையில் தனுஷ் வரும்போது ரஜினியே நினைவுக்கு வருகிறார்.

ஹாலிவுட் நடிகர் வில்லன் ஜேம்ஸ் காஸ்மோ, படம் முழுக்க கெட்ட வார்த்தைகள் பேசிக்கொண்டு இருக்கிறார். FCUK … இதை சொல்லாமல் அவர் ஒரு டயலாக் கூட பேசவில்லை.

படத்தின் ஆரம்ப காட்சியில் வரும் டிரெய்ன் போல படத்தின் நீளம் ஓடிக்கொண்டே இருக்கிறது. எடிட்டர் தூங்கிட்டாரா?

தனுஷ் & ஐஸ்வர்யா சந்தித்து முத்தமிடும் காட்சியில் மரம் வானத்தை காட்டி பொறுமையாக கேமராவை கொண்டு செல்வது ஏனோ..? இதுபோல பல காட்சிகள் நீளம்.

எவராக இருந்தாலும் பிறப்பிடம் மற்றும் வாழ்விடம் மாறலாம். எனவே அவர்கள் வாழும் இடம் தான் அவர்களுடைய சொந்த மண், தாய் நாடு என்ற கருத்தை வலியுறுத்த முயற்சித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

எவ்வளவு காசு கொடுத்து பார்த்தாலும் தேடினாலும் இயக்குனர் கா.சு. வை காணவில்லை..

*ஆக மொத்தம்… சோழர் பரம்பரையில் ஒரு கிண்டல் சாதா.. ஜகமே தந்திரம் 2.25/5*

Dhanushs Jagame Thandhiram review rating

உரிமை மீட்ட உத்தமன்..; கர்ணன் விமர்சனம் – 4/5

உரிமை மீட்ட உத்தமன்..; கர்ணன் விமர்சனம் – 4/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : தனுஷ், ரஜீஷா விஜயன், லால், அழகம் பெருமாள், லட்சுமிப்ரியா சந்திரமெளலி, யோகி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், கெளரி கிஷன்

ஒளிப்பதிவு : தேனி ஈஸ்வர்

இயக்கம் : மாரி செல்வராஜ்

தயாரிப்பு : கலைப்புலி எஸ் தாணு

இசை : சந்தோஷ் நாராயணன்

முன்னோட்டம்

1990கள் இறுதியில் தமிழக அரசுப் பேருந்துகளுக்கு தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டன.

அப்போது தென் மாவட்டங்களில் சில தலைவர்கள் பெயரை வைக்க எதிர்ப்பு உருவானது. ஆங்காங்கே கலவரங்களும் நடந்தன.

இதனால் சில ஊர்களில் பேருந்து வசதிகள் இல்லை. இந்த பின்னணியை வைத்து பொடியன்குளம் கிராமத்தை நம் கண்ணுக்கு விருந்தாக கொடுத்துள்ளனர்

கதைக்களம்..

கர்ணன் (தனுஷ்) கைது செய்து அடித்து துவைத்து ரத்த காயங்களுடன் அழைத்து செல்கின்றனர் போலீசார்.

அத்துடன் ப்ளாஷ்பேக் ஸ்டார்ட்…

பொடியன்குளம் கிராமத்திற்கு பேருந்து வசதியும் பேருந்து நிறுத்தமும் இல்லை.

எனவே அவ்வழி செல்லும் லாரி & இதர வாகனங்களை மக்கள் பயன்படுத்த ஒரு கட்டத்தில் தகராறு வரவே பேருந்து தாக்கப்படுகிறது.

அந்தப் பிரச்சனையைக் கிராம மக்கள் கர்ணன் துணையுடன் எப்படி எதிர்கொண்டனர் என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கீழ் சாதி மக்களின் காவலனாக தனுஷ் வாழ்ந்திருக்கிறார். கெஞ்சி கொண்டிருந்தால் உரிமை கிடைக்காது. தைரியமாக எதையும் எதிர் கொண்டு போராடினால் மட்டுமே வெற்றி என்பதை தன் உடல்மொழியால் உணர்த்திருக்கிறார் தனுஷ்.

உரிமைக்காக போராடிய போராடும் ஒவ்வொரு இளைஞர்களின் உணர்வுகளை கண்முன் பிரதிபலிக்கிறார். இந்த கர்ணன் பல விருதுக்கு தகுதியானவன் தான்.

கர்ணனின் காதலி திரௌபதையாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன். தன் கேரக்டரில் சிறப்பு.

காவல்துறை அதிகாரியாக நட்ராஜ் (நட்டி), கர்ணனின் அக்காவாக லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி, அரசியல்வாதியாக அழகம்பெருமாள் ஆகியோரும் கச்சிதம்.

இவர்களுடன் தாத்தா லால், யோகிபாபு, சண்முகராஜன், கௌரி கிஷன், ஜி.எம்.குமார், ‘பூ’ ராமு எனப் பலரும் சரியான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

இவர்களுக்கு இணையாக ஸ்கோர் செய்திருக்கிறார்கள் அந்த கிராமத்து மனிதர்கள். அந்த ஊர் மக்களையே சிறப்பாக நடிக்க வைத்திருப்பதால் கதையோடு நம்மால் இணைந்து விடமுடிகிறது.

‘கோழிக் குஞ்சு’ பாட்டி, குதிரை சிறுவன், தனுஷுடன் நிற்கும் இளைஞர்கள், பஸ் மேல் கல் எறியும் அந்த பையன் என எல்லா கேரக்டர்களும் மனதை விட்டு நீங்காதவை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் சந்தோஷ் நாராயணின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.

‘கண்டா வரச்சொல்லுங்க’, ‘மஞ்சணத்திப் புராணம்’, ‘தட்டான் தட்டான்’ ஆகிய பாடல்களின் ஒளிப்பதிவில் இத்தனை அழகா? என வியக்கும் வண்ணம் உள்ளது.

இயக்கம் பற்றிய அலசல்…

தலையில்லா புத்தர் & ஓவியம், கழுதை – யானை – குதிரை என பல குறியீடுகளை அடிக்கடி காட்டுகிறார். அது போதும் போதும் என்றளவில் உள்ளது.

இறுதியில் வரும் கலவர காட்சியும் நீளமாக உள்ளது. படத்தின் பெரிய குறை நீளம்.

அந்த கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை நீளமாகப் பதிவு செய்திருப்பதும் பெரும் குறை.

ஆனால் இரண்டாம் பாதியில் அதனை சரி செய்துவிட்டார்.

தனுஷின் நடிப்பு படத்தின் ஒரு பாதி பலம் என்றால் இயக்குனர் ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் படத்தின் மீதி பலம்.

வசனங்கள் நச்…

‘எப்படியாவது பொழச்சுக்கணும்னு நாம நினைக்கறதாலதான், அவன் ஏறி மிதிக்கிறான்”,

“அவன் பஸ்ச அடிச்சதுக்காக அடிக்கல, நிமிந்து பாத்ததுக்காக அடிச்சான்” ஆகிய வசனங்களில் மாரி செல்வராஜ் மாஸ் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

‘பரியேறும் பெருமாள்’ படத்தை போல சமூக பிரச்சனைகளை மையப்படுத்தி நல்ல திரைக்காவியத்தை கொடுத்துள்ளார் மாரி செல்வராஜ்.

ஆக… உரிமை மீட்ட உத்தமன் இந்த ‘கர்ணன்’

Karnan movie review and rating in tamil

வேகம் குறைவு.. பயணம் சிறப்பு..; கால் டாக்ஸி விமர்சனம்

வேகம் குறைவு.. பயணம் சிறப்பு..; கால் டாக்ஸி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் – சந்தோஷ் சரவணன், அஸ்வினி சந்திரசேகர், மொட்ட ராஜேந்திரன், கணேஷ்கர், ஆர்த்தி, மதன்பாப்

இசை – பாணர்

ஒளிப்பதிவு – எம்.ஏ.ராஜதுரை

இயக்குனர் – பா.பாண்டியன்

தயாரிப்பு – கே.டி. கம்பைன்ஸ் சார்பில் ஆர். கபிலா.

கதைக்களம்…

சிட்டியில் பல இடங்களில் கால் டாக்ஸி டிரைவர்கள் கொடூரமாக கொல்லப்படுகின்றனர். மேலும் அந்த கார்களும் திருடு போகிறது.

இதனால் சிட்டியே பரப்பரப்பாக இருக்கிறது.

ஹீரோ சந்தோஷ் சரவணனும் கால் டாக்ஸி டிரைவர் தான்.

ஒரு நாள் இவர் டூட்டி சவாரிக்கு தனது நண்பரான மற்றொரு டிரைவரை அனுப்பி வைக்கிறார்.

அந்தக் காரில் பயணிக்கும் கயவர்கள், டிரைவரைக் கொன்றுவிட்டு காரையும் கடத்திச் சென்று விடுகிறார்கள்.

கொலையாளிகளை கண்டு பிடிக்க டிரைவர்கள் சங்கத்தினர் காவல் துறையிடம் முறையிட்டும் ஒரு நடவடிக்கையும் இல்லை.

எனவே நாயகன் தானே களத்தில் இறங்கி கொலையாளியை கண்டுபிடிக்க முயல்கிறார்.

கொலையாளிகள் சிக்கினார்களா? அவர்கள் யார்.? கொலைக்கான காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஆக்சன் பரபரப்பு என நாயகன் சந்தோஷ் அசத்தல். காதல் காட்சிகளில் மெச்சூரிட்டி வேண்டும். கால் டாக்ஸி டிரைவர்களின் பரிதாப நிலையை எடுத்து சொல்லும்போது நம்மை கவர்கிறார்.

கதாநாயகி அஸ்வினி சந்திரசேகர் கொள்ளை அழகு. அவரது கண்களும் உதடுமே நிறைய பேசுகின்றன.

இவர் வக்கீலாக வருகிறார். இவரையும் விசாரணைக்கு பயன்படுத்தி இருந்தால் இன்னும் நிறைய காட்சிகள் இருந்திருக்கும்.

கடவுள் ராஜேந்திரன், கணேஷ்கர் இருவரும் இந்த டாக்ஸியை கலகலப்பாக்கி ஓட்டிவிட்டுள்ளனர்.

ஈ.ராமதாஸ், பசங்க சிவகுமார், சந்திரமவுலி, திலீபன் ஆகியோரும் தங்கள் கேரக்டர்களில் கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்துக்கு பாடல் எழுதி இசையமைத்திருப்பவர் பாணர். பாடல்கள் ஓகே.

எம்.ஏ. ராஜதுரையின் ஒளிப்பதிவும், டேவிட் அஜய் செய்திருக்கும் படத்தொகுப்பும் படத்திற்கு பலம்.

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார் பா.பாண்டியன்.

படத்தின் முன் பாதியைவிட பின் பாதி செம விறுவிறுப்பு.

டாக்ஸி டிரைவர்களுக்கும் அதில் பயணிப்பவர்களுக்கும் விழிப்புணர்வு தரும் பாடமாக கால் டாக்ஸி வந்துள்ளது.

ஆக… கால் டாக்ஸி… வேகம் குறைவு.. பயணம் சிறப்பு

Call Taxi movie review in Tamil

அதர்மத்தை சுளுக்கு எடுப்பான்..; சுல்தான் விமர்சனம்

அதர்மத்தை சுளுக்கு எடுப்பான்..; சுல்தான் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெமோ படத்திற்கு பிறகு அதாவது 5 ஆண்டுகளுக்கு பிறகு பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் தான் ‘சுல்தான்’.

நடிகர்கள் : கார்த்தி, ராஷ்மிகா, நெப்போலியன், லால் யோகிபாபு, KGF கருடன் புகழ் ராமச்சந்திர ராஜு மற்றும் பலர்.
ஒளிப்பதிவு : சத்யன்
இசை : விவேக் – மெர்லின்
பிண்ணனி இசை : BGM கிங் யுவன்
இயக்கம் : பாக்யராஜ் கண்ணன்
தயாரிப்பு : ட்ரீம் வாரியர்ஸ்

கதைக்களம்…

கார்த்திக்கும் விவசாயத்துக்கும் அப்படியொரு கனெக்சனுக்கு எப்போதுமே உண்டு.. அதை மையப்படுத்தி கொஞ்சம் ரவுடியிசம் கலந்து கொடுத்துள்ளார் பாக்யராஜ் கண்ணன்.

கார்த்தி (சுல்தான்) அப்பா நெப்போலியன். இவர் ஒரு மாபெரும் ரௌடி கூட்டத்தின் தலைவர்.

அம்மாவை இழந்தவர் கார்த்தி. மும்பையில் ரோபோட்டிக்ஸ் என்ஜினியராக இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் போலீஸ் நடத்திய என்கவுன்டரில் நெப்போலியன் மரணிக்கிறார்.

ஒரு கிராமத்தினருக்கு அப்பா கொடுத்த வாக்கை காப்பாற்றவும் அந்த 100 ரவுடிகளின் கேங்கை காப்பாற்றவும் வருகிறார் கார்த்தி.

ஆனால் அடியாட்கள் போல பயன்படுத்தாமல் அவர்களை நல்வழிப்படுத்த நினைக்கிறார் கார்த்தி.

ஆனாலும் அவருக்கு கார்ப்பரேட் கம்பெனிகள் மூலம் விவசாய பிரச்சினை வருகிறது.

மோசமான ரவுடியிடம் (கே.ஜி.எஃப். படம் புகழ் ராம்) இருந்து தங்கள் நிலத்தை காக்குமாறு விவசாயிகள் சுல்தானிடம் கேட்கின்றனர்.

அதன் பின் கார்த்தி என்ன செய்தார்.? என்ன நடந்தது என்பதே மீதிக்கதை கதை.

கேரக்டர்கள்…

கமர்ஷியல் படங்களில் உள்ள மாஸ் ஹீரோக்கள் செய்யும் அனைத்தையும் செய்திருக்கிறார் கார்த்தி.. ஆக்சன் காட்சிகளில் அசத்தல்.

ருக்மணி (ராஷ்மிகா) இடையேயான காதல் காட்சிகள் சிறப்பு. ரஷ்மிகா காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தாலும் நிறைய காட்சிகள் இல்லை. ராஷ்மிகா ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.

யோகி பாபு, சென்ராயன் காமெடி ஆங்காங்கே நம்மை சிரிக்க வைக்கிறது.

நெப்போலியன் & லால், அபிராமி காட்சிகள் கச்சிதம். பொன்வண்ணன், ரமா, சிங்கம்புலி, மயில்சாமி, மாரிமுத்து ஆகியோரும் உண்டு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்தின் பெரிய பலம். சுல்தானுக்கு சரியான பில்டப் கொடுத்து வெறியேத்துகிறார்.

ஒளிப்பதிவில் குறைவில்லை. எடிட்டர் தான் நம்மை சோதிக்கிறார்.

ரவுடியிசம், விவசாயம், ரொமான்ஸ் என அனைத்தும் கலந்து ஒரு பக்கா மசாலா படத்தை கொடுத்திருக்கிறார் டைரக்டர் பாக்யராஜ்.

முதல் பாதியும் இடைவேளையும் ரசிகர்களை வெகுவாக கவரும்.

இரண்டாம் பாதி படம் மிகவும் நீளம். அதை குறைத்திருக்கலாம்.

விவசாயம் என்ற வாழ்வாதாரத்தை இன்றைய இளைஞர்களும் புரியும்படி தந்துள்ளார்.

ஆக…. விவசாயத்தை அழிக்க வரும் கார்ப்பரேட்டுகளை நிச்சயம் சுளுக்கு எடுப்பான் சுல்தான்.

Karthi in Sulthan Movie review in Tamil

More Articles
Follows