தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : ராஜன் தேஜேஸ்வர் (கார்த்திக்), தருஷி (ஆர்த்தி), ரேணுகா (லக்ஷ்மி), முனீஸ்காந்த் (சிங்கம்), சூப்பர்குட் சுப்பிரமணியம் (புலி), வினோதினி (சாந்தி), தீப்பெட்டி கணேசன் (அறடம்ளர்), ஆடுகளம்ஜெயபாலன் (திமிங்கலம்), வில்லனாக சமக் சந்திரா (தண்டபாணி) மற்றும் பலர்
ஒளிப்பதிவு – V.இளையராஜா
இசை – சித்தார்த்விபின்
எடிட்டிங் – R.நிர்மல்
பாடல்கள் – லலிதானந்த், ஜீவன் மயில்
ஸ்டன்ட் – கன்னல் கண்ணன்
நடனம் – பாபா பாஸ்கர், ஜானி
கலை – ஜான் பிரிட்டோ
தயாரிப்பு நிர்வாகம் – A.P.ரவி
தயாரிப்பு – C.R.ராஜன்
பி.ஆர்.ஓ. : மௌனம் ரவி
கதைக்களம்…
தந்தை இல்லாத நாயகன் ராஜன் தேஜஸ்வர் அம்மா கண்காணிப்பில் வளர்கிறார்.
பொறுப்பான இளைஞராக வளரும் இவர் மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர்.
யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்கும் குணம் கொண்டவர் இவர். ஒரு முறை மிகப்பெரிய மார்கெட் ஒன்றின் இலவச கழிப்பிடத்தில் சிறுநீர் கழிக்கிறார்.
அங்கும் கட்டணம் கேட்கும் வில்லனை அடித்து நொறுக்குகிறார்.
அவர்தான் அந்த ஏரியாவின் பெரிய தாதா என்பது அவருக்கு அப்போது தெரியாது.
தாதா ஏரியாவில் அடி வாங்கியதால் அவரை அங்கு மாமூல் கொடுப்பவர்கள் கூட மதிப்பதில்லை.
இதனால் கடுப்பாகும் வில்லன், ஹீரோவை அந்த மக்கள் முன்னிலையில் அடிக்க நினைக்கிறார்.
ஆனால் ஹீரோவோ கேரளாவுக்கு வேலைக்கு சென்றுவிடுகிறார். மேலும் வில்லன் மனைவி மற்றும் பிள்ளையின் படிப்புக்கும் உதவுகிறார்.
இந்நிலையில் தன் பிள்ளையின் படிப்பை வைத்தே ஹீரோவை அந்த இடத்திற்கு வர வைக்கிறார் வில்லன்.
அதன்பின்னர் என்ன வில்லன் – ஹீரோ மோதல் என்ன ஆனது? வில்லன் மகனின் படிப்பு என்ன ஆனது? யார் ஜெயித்தார்கள்? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்…
அறிமுக நாயகன் ராஜன் தேஜேஸ்வர். இவரின் அப்பாதான் இந்த படத்தின் புரொடியூசர் என்பது கூடுதல் தகவல்.
நாயகனும் கிடைத்த கேப்பில் ரொமான்ஸ், ஆக்சன் என மிரட்டியிருக்கிறார்.
ஆனால் இவர் டப்பிங் பேசாமல் வேறு யாரையாவது வைத்து பேசியிருக்கலாம். சில நேரங்களில் வார்த்தைகள் வட சென்னை பாஷையில் வர மறுக்கிறது.
மற்றபடி முதல் படம் என்பதால் குறைகளை மறக்கலாம். நாயகி தருஷி சில காட்சிகளில் நடிக்க முயற்சித்திருக்கிறார்.
படத்தின் ப்ளஸ் பாய்ண்டே அந்த வில்லனும் தன் கெத்தை விட்ட பின் வரும் காட்சிகள்தான். வீட்டிற்கு கரண்ட் பில் கட்டாதது முதல் மனைவியின் தாலியை அடமானம் வைப்பது முதல் ரசிக்க வைக்கிறார்.
இவரின் அடியாட்கள்… அண்ணே அண்ணிக்கு ஒரு தாலிதான் கட்டுனீங்களா? என கேட்பது நச். இவரின் மனைவியாக வரும் வினோதினியும் நடிப்பில் கச்சிதம்.
இவர்களுடன் முனீஸ்காந்த் (சிங்கம்), சூப்பர்குட் சுப்பிரமணியம் (புலி), தீப்பெட்டி கணேசன் (அரை டம்ளர்), ஆடுகளம்ஜெயபாலன் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
சித்தார்த் விபியின் இசையில் நீயா உயிரே பாடல் ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் குத்து ரகம்தான்.
வி. இளையராஜாவின் ஒளிப்பதிவில் ஆக்சன் மற்றும் பாடல் காட்சிகள் அருமை.
விஜய்யின் ஷாஜகான் படத்தை இயக்கி ரவி தான் இப்படத்தின் டைரக்டர். ஒரு அறிமுக நாயகன் என்றாலும் டாப் ஹீரோக்களுக்கு கொடுக்கும் அளவுக்கு அதிரடி ஆக்சனை தெறிக்கவிட்டுள்ளார்.
பெரிய தாதா வில்லன் ஹீரோவிடம் கெஞ்சிக் கொண்டிருப்பதே ரொம்ப ஓவர். அதை குறைத்திருக்கலாம்.
மொத்தத்தில் செயல்… குறைவில்லை.