தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
போத்தனூர் தபால் நிலையம் விமர்சனம் : பிரவீன் , அஞ்சலி ராவ், வெங்கட் சுந்தர், ஜெகன் கிரிஷ் (ஜே.கே), சீதாராமன், தீனா அங்கமுத்து மற்றும் சம்பத் குமார் நடிப்பில் வெளியான போத்தனூர் தபால் நிலையம் விமர்சனம் இதோ
இயக்குனர்-நடிகர் பிரவீன் இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் சார்ந்த திரைப்படமான ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்தில் தொழில்நுட்ப இயக்குநராக பணிபுரிந்தவர்.
ஒன்லைன்..
போத்தனூர் தபால் நிலையம் – இந்தியாவின் முதல் தபால் அலுவலகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். ‘தபால் நிலைய கொள்ளை’ என்பது தான் படத்தின் கதைக்கரு.
ஏற்கனவே மூன்று பாகங்களாக உருவாகும் என அறிவிக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் மட்டும் தற்போது ரிலீசாகிறது.
படத்தின் நாயகன் பிரவீன் படத்தை இயக்கியிருக்கிறார். இவரின் தந்தை அஞ்சலகத்தில் காசாளராக இருந்தவர். அப்பாவின் அனுபவத்தை வைத்து போத்தனூர் தபால் நிலையம் உருவானது.
Passion Studios தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இந்தியாவின் பர்ஸ்ட் போஸ்ட் ஆபிஸை வைத்து உருவான ‘போத்தனூர் தபால் நிலையம்’
பிரவீன் மற்றும் அஞ்சலி ராவ் முக்கிய கேரக்டர்களில் நடிக்க, வெங்கட் சுந்தர், ஜெகன் கிரிஷ் (ஜே.கே), சீதாராமன், தீனா அங்கமுத்து மற்றும் சம்பத் குமார் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
மே 27, 2022 முதல் ஆஹா தமிழ் செயலியில் திரையிடப்படுகிறது போத்தனூர் தபால் நிலையம்.
கதைக்களம்…
1970-1980-1990 களில் நடக்கிறது கதை.
பிரவீன் & அஞ்சலி ராவ் & வெங்கட் சுந்தர் ஆகிய மூவரும் சிறுவயது முதலே ஸ்கூல் ப்ரெண்ட்ஸ். அங்கு படிக்கும் ஒரு பணக்கார மாணவனை பார்த்து நாமும் வளர்ந்து பெரியவனாகி பெரிய பணக்காரன் ஆக ஆசைப்படுகின்றனர்.
எனவே இளைஞனாகி கம்ப்யூட்டர் பிசினஸ் செய்ய ஆசைப்படுகிறார் பிரவீன். ஆனால் பேங்க் லோன் கிடைக்காமல் செய்கிறார் கை சூப்பும் மேனேஜர்.
பிரவீன் அப்பா போத்தனூர் தபால் நிலையத்தில் ஒரு நேர்மையான போஸ்ட் மாஸ்டர். ஒரு நாள் சனிக்கிழமையன்று… போஸ்ட் ஆபீசில் மக்களின் சேமிப்பு பணத்தை (ரூ. 7 லட்சத்து 40 ஆயிரம்) பேங்கில் டெபாசிட் செய்ய தாமதம் ஆகிவிட்டதால் வீட்டுற்கு கொண்டு வருகிறார்.
வரும் வழியில் அந்த பணத்தை ஒருவன் திட்டமிட்டு கொள்ளையடிக்கிறான். இது வெளி உலகுக்கு தெரிந்தால் அப்பா ஜெயிலுக்கு போக நேரிடும்.
எனவே ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை-க்குள் கொள்ளையனை தேடி அலைகின்றனர் பிரவின் டீம். இறுதியில் என்னாச்சு? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்…
படத்தின் இயக்குனர் பிரவீனே நாயகன் என்பதாலும் இவரே கலை இயக்குனர் என்பதாலும் படத்தை செதுக்கியிருக்கிறார். யதார்த்த நடிகராய் பளிச்சிடுகிறார்.
அஞ்சலி குண்டு கண்களாலே பேசி அசத்திவிட்டார்.
நாயகி அஞ்சலி ராவ் தவிர அனைவரும் புதுமுகங்களே. படத்தின் அனைத்து கேரக்டர்களும் மனதில் நிற்கும். அப்படி வேலை வாங்கியிருக்கிறார். இவர்கள் கோவையை சேர்ந்த தியேட்டர் ஆர்டிஸ்ட்ஸ்.
டெக்னீஷியன்ஸ்…
படத்தின் சவுண்ட் இன்ஜினியர் பற்றி சொல்லியாக வேண்டும். 1980-90 களுக்கு ஏற்ப அழகாக காட்சிகளை உணர்ந்து ரசித்து சவுண்ட் கொடுத்துள்ளார் அருண்காந்த்.
தென்மா இசையமைக்க சுகுமாரன் சுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இருவரும் (இரண்டுமே) படத்திற்கு உயிரூட்டி உள்ளன. காட்சிகளை அழகாக்கி ரசிக்க வைக்கின்றன.
அந்த காலத்தில் ரேடியோ வைத்துக் கொள்ள கூட லைசென்ஸ் தேவை என்பதையும் சொல்லி உள்ளனர். அதேபோல் Post office saving scheme பற்றி விளக்கியுள்ளனர்.
படத்தின் முதல் பாதி மெதுவாக நார்மல் போஸ்ட் போல நகர்ந்தாலும் இடைவேளைக்கு பிறகு TELEGRAM SPEEDல் படம் செல்கிறது. பின்னிட்டீங்க பிரவீன்.
படத்தில் ஏகப்பட்ட ட்விஸ்ட் இருப்பதால் ரசிகர்கள் படத்தை பார்த்து ரசித்துக் கொள்ளவும்.
ஆக போத்தனூர் தபால் நிலையம்…. சார்.. நல்ல படம் பார்க்க சொல்லி போஸ்ட் வந்திருக்கு.!
Pothanur Thabal Nilayam movie review
போத்தனூர் தபால் நிலையம் போல் சமீபத்தில் வெளியான படங்களின் விமர்சனங்களை நம் தளத்தில் கீழே பாருங்கள்