WELL DONE VENBA….. பொன்மகள் வந்தாள் விமர்சனம் 3.5/5

WELL DONE VENBA….. பொன்மகள் வந்தாள் விமர்சனம் 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஜோதிகா, பார்த்திபன், தியாகராஜன், பாக்யராஜ், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், வினோதினி, மனோகர், பிரதீபா மற்றும் பலர்.
இசை : கோவிந்த் வசந்தா
ஒளிப்பதிவு : ராம்ஜி
படத்தொகுப்பு : ரூபன்
இயக்கம் : பெட்ரிக்
பிஆர்ஓ: யுவராஜ்
தயாரிப்பாளர் : நடிகர் சூர்யா 2டி எண்டர்டெயின்மெண்ட்

கதைக்களம்…

2004 ஆண்டு ஊட்டியில் 5 சிறுமிகள் கடத்தப்பட்டு கொல்லப்படுகின்றனர்.

இவற்றுக்கெல்லாம் காரணம் ஒரு வட இந்தியாவை சேர்ந்த சைக்கோ பெண் ஜோதி தான் காரணம் என அந்த பகுதி மக்களே சொல்லி வருகின்றனர்.

ஒரு சிறுமியை ஜோதி கடத்தும்போது 2 இளைஞர்கள் அவளை தடுக்க துப்பாக்கியால் அவர்களை சுட்டுக் கொல்கிறார் ஜோதி.

கிட்டதட்ட 15 வருடங்களுக்கு பிறகு பெட்டிசன் பெத்துராஜ் (பாக்யராஜ்) அந்த வழக்கை எடுக்கிறார். ஜோதி குற்றவாளி இல்லை என அவருக்காக வாதாட வருகிறார் வெண்பா (ஜோதிகா)

ஆனால் ஜோதி தற்போது உயிரோடு இல்லை. 15 வருடங்களுக்கு முன்பே ஜோதியை போலீசார் என்கௌண்டர் செய்துவிட்டனர்.

உயிரோடு இல்லாத ஜோதிக்கு நியாயம் கேட்க வரும் பாக்யராஜ் மற்றும் ஜோதிகா யார்? அவர்களுக்கு ஜோதி என்ன உறவு?

சிறுமிகளை கொலை செய்த சைக்கோ பெண்ணை இவர்கள் ஆதரிப்பது ஏன்? ஜோதி குற்றவாளி இல்லை என்றால் உண்மையான குற்றவாளி யார்?

சிறுமிகளை கடத்தியவர்கள் யார்? என்ற பல கேள்விகளுக்கு விடையே இந்த பொன் மகள் வந்தாள்.

கேரக்டர்கள்…

தனது 2வது இன்னிங்சில் சவாலான வேடங்களை ஏற்று வருகிறார் ஜோதிகா. அவருக்கு நிறைய பாராட்டுகளை தெரிவிக்கலாம்.

கோர்ட்டில் பேசும் வசனங்களில் நல்ல உச்சரிப்பை கொடுத்துள்ளார். சென்டிமெண்டில் நம்மை ஈர்க்கிறார். போராடி ஜெயிக்க இது விளையாட்டு அல்ல.. நீதி என ஜோர் பேசும் வசனங்கள் நச்.

வார்த்தை விளையாட்டு வித்தகர் பார்த்திபனுடன் ஜோ மல்லுக்கட்டும் போது எல்லாம் ரசிக்க வைக்கிறார்.

ஜோதிகாவிற்கு அழகு அவரது புன்னகைதான். ஆனால் தற்போது ஏற்கும் நாச்சியார், தம்பி, பொன்மகள் வந்தாள் ஆகிய படங்களில் சீரியஸ் ஜோதிகாவையே காண முடிகிறது. மறந்தும் கூட சிரிக்க மறுக்கிறார். அப்ப்ப்போ கொஞ்சம் சிரிச்சு வைங்க ஜோ.

பார்த்திபனுக்கு இந்த கேரக்டர் நல்ல பெயரை பெற்றுத் தரும். டாக்டர்கிட்ட எய்ட்ஸ் பதிலா பைல்ஸ் சொன்ன அதற்கு ஏத்த வைத்தியம் தான் அவரு பார்ப்பாரு.. அதான் வக்கீல் கிட்ட பொய் சொல்லாம சொல்லனும்.. EVIDENCE illa EVI கூட உங்களால கொண்டு வர முடியாது என பார்த்திபன் நக்கல் அடிக்கும் போது எல்லாம் சபாஷ் போட வைக்கிறார்.

பெட்டிசன் பெத்துராஜாக பாக்யராஜ். வித்தியாசமான வேடத்தில் கவர்கிறார்.

சைல்ண்ட அதே நேரத்தில் வைலண்ட் என தியாகராஜன் திக் திக் நடிப்பை கொடுத்துள்ளார். கோபம் வந்த பின் அவரது முகத்தில் கன்னம் கண்கள் வரை நடித்துள்ளது.

பிரதாப் போத்தன், பாண்டியராஜன், சுபு பஞ்சு, வினோதினி உள்ளிட்டோர் கேரக்டர்களும் ஜோதி மகள் கேரக்டரும் நம் மனதில் நிற்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

96 படத்துக்கு இசையமைத்த இருந்த கோவிந்தா வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்கள் கதையுடன் ஒன்றி போகிறது. ஆனால் மனதில் தான் நிற்கவில்லை. இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
சென்டிமெண்ட் காட்சிகளில் பின்னணி இசை கூடுதல் பலம்.

ஒளிப்பதிவாளர் ராம்ஜி அசத்தியிருக்கிறார். ஊட்டி முதல் நம் உணர்வு வரை படம் பிடித்து காட்டியிருக்கிறார். ஜோ பாக்யராஜ் பேசும் காட்சிகள், ஜோதியின் கல்லறை காட்சிகள், தியாகராஜன் காட்சிகள் என அனைத்து அருமை.

இவரை போல் ரூபனின் எடிட்டிங் கனகச்சிதம். 15 வருடங்களுக்கு முன்பு அந்த சம்பவ இடத்திற்கு பார்த்திபன் செல்வது போல அமைக்கப்பட்ட காட்சிகள் அருமை.

இயக்கம் பற்றிய அலசல்…

அறிமுக இயக்குனர் ஜே ஜே பெட்ரிக் இயக்கியிருக்கிறார். பாலியல் தொல்லையால் அவதிப்படும் சிறுமிகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் ஒரு நல்ல பாடம் சொல்லியிருக்கிறார்.

முக்கியமாக எப்படி உடை உடுத்தனும் நடந்துக்கனும் என பெண்களிடம் சொல்லும் பெற்றோர்கள் தங்கள் வீட்டு ஆண்களிடம் எப்படி பெண்களிடம் நடந்து கொள்வது என சொல்வதில்லை என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்.

Good Touch… Bad Touch என்று பெண் குழந்தைகளுக்கு மட்டுமே சொல்லிக்கொடுக்கிறோம். ஆண் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கனும்.

இடைவேளை மற்றும் க்ளைமேக்ஸ் காட்சிகள் நல்ல ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார்.

என்னதான் நல்ல கருத்துக்கள் இருந்தாலும் படத்தில் ஆங்காங்கே சோர்வை தரும் காட்சிகள் உள்ளது.

கோர்ட்டில் பாய்ண்ட் பை பாய்ண்ட்டாக பேசும் ஜோதிகா திடீரென தன் பெர்சனல் பக்கங்கள் பேசிக் கொண்டிருக்கிறார். அது சீரியல் டைப் போல உள்ளது. அதுபோல் ப்ளாஷ் பேக்கில் காட்சிகள் இன்னும் உணர்வை கொடுத்திருக்கலாம்.

நம் சட்டத்தின் இருக்கும் ஓட்டைகளையும் இங்கே காசு கொடுத்தால் எதை வேண்டுமானாலும் காவல்துறை செய்யும் என்பதை அப்பட்டமாக காட்டியிருக்கிறார்.

ஆதாரம் இல்லாமல் எந்த வழக்கையும் கோர்ட் விசாரிப்பதில்லை. அதை முடிப்பதும் இல்லை. ஆனால் இங்கே உண்மை மட்டுமே ஆதாரமாக உள்ளது என்பதையும் காட்டியிருப்பது சிறப்பு. ஆனால் அது செல்லும்படியாகுமா?

ஆக.. அனைவரும் பார்க்க தகுந்த படத்தை கொடுத்துள்ளனர் தயாரிப்பாளர் சூர்யா மற்றும் படக்குழுவினர்.

WELL DONE VENBA… பொன்மகள் வந்தாள்

Pon Magal Vandhal review rating

விந்தணு வித்தை… தாராள பிரபு விமர்சனம்.. 3.5/5

விந்தணு வித்தை… தாராள பிரபு விமர்சனம்.. 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்..

ஹரீஷ் கல்யாண் ஒரு விளையாட்டு வீரர். ஸ்போர்ட் கோட்டாவில் வேலை கிடைக்க அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இவரும் தன்யாவும் காதலித்து வருகிறார்கள்.

விவேக் ஒரு டாக்டர். குழந்தை வேண்டும் என்று வரும் தம்பதியருக்கு குழந்தையை கொடுக்க ஆரோக்கியமான விந்தணு உள்ள டோனரை தேடுகிறார்.

அப்போது ஹரீஷ் கல்யாண் இவரிடம் சிக்க அவரை சம்மதிக்க வைத்து விந்தணு டோனராக்குகிறார்.

அப்போதுதான் தன்யாவுக்கும் ஹரீஷ் கல்யாணுக்கும் கல்யாணம் ஆகிறது.

ஆனால் தன்யாவிற்கு குழந்தை பெற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

அதன்பின் இவர்கள் வாழ்க்கை என்ன பிரச்சனைகள் நடந்தது? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

தனக்கே உரிய பாணியில் கலகலப்பாக நடித்து ரசிகர்களை தன் வசம் படுத்திவிட்டார் ஹரீஷ் கல்யாண். சின்ன சின்ன பாவனைகளில் கவனம் ஈர்த்துள்ளார்.

நாயகி தன்யா ஹோப் ஆர்ப்பாட்டம் இல்லாமல் தேவையான நடிப்பை கொடுத்துள்ளார்.

படத்தின் மெயின் பில்லர் நடிகர் விவேக் தான். ரசிக்கவும், சிந்திக்கவும் வைத்துள்ளார். மீண்டும் சினிமாவில் விவேக் அலை வீச வாழ்த்துவோம்.

மற்ற கேரக்டர்கள் பெரிதாக கவரவில்லை என்றாலும் படத்தின் கதைக்கு கைகொடுத்துள்ளது எனலாம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

அனிருத், பரத் சங்கர், இன்னோ கெங்கா, கபீர் வாசுகி, மேட்லி புளூஸ், ஓர்கா, சான் ரோல்டன், விவேக் மெர்வின் என பலர் இசையமைத்துள்ளனர்.

பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் ஓகே.

செல்வகுமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல்.

திருமணமான தம்பதியருக்கு குழந்தையின் அவசியத்தை உணர்த்தியிருக்கிறார்.

விந்தணுவின் முக்கியத்துவத்தையும் நம் ஆரோக்கியத்தையும் சிறப்பாக உணர்த்தியிருக்கிறார்.

விந்தணு தானம் செய்பவர் எப்படி ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதையும் [புரிய வைத்துள்ளார் இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து.

விக்கி டோனர் என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் என்றாலும் அதை தமிழ் சினிமாவுக்கு ஏற்றவாறு ஆபாசம் இல்லாமல் கொடுத்துள்ளார்.

மொத்தத்தில் ‘தாராள பிரபு’…. விந்தணு வித்தை

Dharala Prabhu Review rating

First on Net அஜீரணம்… ஜிப்ஸி விமர்சனம்… 2.75/5

First on Net அஜீரணம்… ஜிப்ஸி விமர்சனம்… 2.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜிப்ஸி என்பது ஒரு வகையான ஜீப் என்பது நமக்கு தெரியும்.. இங்கே ஹீரோவின் பெயரே ஜிப்ஸிதான். ஏன் அவர் ஜீப் ஓட்டுவாரா? என நீங்கள் கேட்கலாம்.

அவர் ஜீப் ஓட்டல… குதிரை ஓட்டுறார். அதுவும் டான்ஸ் ஆட கூடிய குதிரை ஓட்டுவது அவரது வேலை.

அது சரிப்பா.. ஜீப் என்றால் என்ன தெரியுமா..? JEEP என்றால் Journey On Every Earth Place எனப்படும். கிட்டதட்ட இந்த ஹீரோ ஜிப்ஸியும் இப்படித்தான். இந்தியா நாடு முழுவதும் சுற்றுகிறார்.

ஆனால் ஜிப்ஸி என்றால் பூமியின் பாடகன் என பொருள் உள்ளதாக படத்தில் ஒரு காட்சி உள்ளது.

அப்பாடா.. இவ்ளோ விளக்கமா? சரி கதைக்கு வருவோம்…

கதைக்களம்…

நாடு முழுவதும் ஹீரோ சுற்றுவதால் அவருக்கு பல பாஷைகள் தெரிகிறது.

அவரிடம் உள்ள ச்சே (அட குதிரை பேரு இதாங்க) குதிரை டான்ஸ் ஆடுவதால் அதற்கு கிராக்கி அதிகம்.

First On Net வௌங்காத கிரகம்… வெல்வெட் நகரம் விமர்சனம் 2.5/5

ஒரு முறை காரைக்கால் அருகேயுள்ள நாகூர் தர்கா திருவிழாவில் குதிரை ஆட்டத்திற்கு ஜீவாவை ஒப்பந்தம் செய்கிறார் நாயகி நடாஷாவின் வாப்பா (முஸ்லிம்).

அப்பா ரொம்ப கண்டிப்பானவர் என்பதால் அவரிடம் பயந்து பயந்து வாழ்கிறார் ஹீரோயின் நடாஷா. அப்போது ஜீவா மீது காதல் வர, ஒரு கட்டத்தில் என்னை உங்களுடன் அழைத்து செல்லுங்கள் என கூறுகிறார்.

ஜீவா நடாஷாவை அழைத்து கொண்டு எஸ்கேப் ஆகிறார். அதன்பின்னர் என்ன ஆனது? எங்கே சென்றார்கள்? ஹீரோயின் அப்பா என்ன செய்தார்? அவர்கள் வாழ்க்கை நல்லபடியாக அமைந்ததா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஜீவா மற்றும் நடாஷா இருவரும் நல்லதொரு நடிப்பை கொடுத்துள்ளனர். இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரியும் உள்ளது.

மனைவியை பிரிந்த பின் ஜீவா காட்டும் பரிதாபம் நமக்கு அனுதாபத்தை கொடுக்கும்.

ஒரு சில இஸ்லாமிய பெண்கள் எத்தகைய கட்டுப்பாட்டுக்குள் வாழ்கிறார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாக காட்டி வாழ்ந்திருக்கிறார் நடாஷா. சுதந்திர பறவையாக இவர் திரியும் போது தன் நடிப்பில் ரசிக்க வைக்கிறார்.

கேரள பாடகரும் ரசிக்க வைக்கிறார். உங்க பொண்டாட்டியை மீட்க என் பொண்டாட்டியை தர்றேன் என இவர் சொல்லும் போது தியேட்டரில் சிரிப்பலை.

நாயகியின் வாப்பா லால் ஜோஸ். இவரின் மலையாளம் கலந்த தமிழ் ரசிக்க வைக்கிறது. அதுபோல் பாலன் கேரக்டரும் படத்திற்கு வலு சேர்த்துள்ளது.

சுசீலா ராமன் பாடலும் அவரின் உடை அலங்காரமும் சொதப்பல்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

யுகபாரதியின் வரிகளுக்கு இசையை கொடுத்துள்ளார் சந்தோஷ் நாராயணன். வா வா வெண்புறா என்ற க்ளைமாக்ஸ் பாடல்… நன்றாக உள்ளது.

மற்ற பாடல்களை என்ன நினைத்து சந்தோஷ் நாராயணன் இசையமைத்தாரோ தெரியல… பரியேறும் பெருமாள் படத்தில் கருப்பி கருப்பி என்ற பாடல் ஒன்றிருக்கும்.. அது பாடல் என்பதை விட வார்த்தை கோர்வை என்பதுதான் சரியாக இருக்கும்.

அதே போல் இதிலும் பல பாடல்கள் உள்ளது. அதுவும் கூவி.. கூவி.. ஜாதி.. ஜாதி.. தீவிரவாதி என காட்டு கத்தி ஒரு பாட்டை வைத்துள்ளனர்.

ராப் பாடல்கள் பாணியில் அனைத்து பாடல்களை அமைத்துள்ளார். பின்னணி இசை போற்றும்படி நன்றாக உள்ளது.

ஒளிப்பதிவை எஸ்கே செல்வகுமார் அமைத்துள்ளார். இவரின் பணிக்காகவே படத்தை பார்க்கலாம். ஒரு மாநிலத்தின் சிறப்பை தன் கேமராவில் படம் பிடித்து விருந்து வைத்துள்ளார்.

இடைவேளை சமயத்தில் வரும் வன்முறை காட்சிகள் மற்றும் க்ளைமாக்ஸ் பாடல்களின் காட்சிகள் அருமையாக படமாக்கப்பட்டுள்ளது. அதுபோல் குதிரை இறக்கும் காட்சியும் அதை படமாக்கிய விதமும் அருமை.

வசனங்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன…

இஸ்லாமிய பெண் இந்தியாவை பற்றி பேசும்போது ரசிக்கலாம்.

ஒருத்தனின் ரத்தம்.. அடுத்தவனின் வெற்றி… மீடியாவை கூட்டி அனுதாபத்தை சொல்லிடுங்க எனும்போது அரசியல்வாதிகளின் அராஜகம் தெரிகிறது.

வட இந்தியா வன்முறை.. கற்பழிப்பு காட்சிகளில் நிறைய அரசியல் பேசப்பட்டுள்ளது.

இறைவனால் அதிகம் வெறுக்கப்படுபவது தலாக்.. அதை நான் என் மனைவிக்கு கொடுக்கிறேன் என ஜீவா பேசும்போதும்…

உங்க துப்பாக்கியால ஒரு மயிரையும் புடுங்க முடியாது…

ஒரு குரலை ஒடுக்க நினைச்சா ஓராயிரம் குரல்கள் ஒலிக்கும் உள்ளிட்ட வசனங்கள் அரசியலை சாடியுள்ளது.

குக்கூ மற்றும் ஜோக்கர் என அனைவரும் பாராட்டும் படங்களை எடுத்தவர் ராஜீ முருகன். ஆனால் இதில் என்ன ஆனதோ? ஒரு காதல் கதையை சொல்ல வந்து, அதில் வட இந்திய வன்முறை, ரத்த வெறி அரசியல்வாதிகள் என தான் சொல்ல வந்த அனைத்தையும் திணித்திருக்கிறார்.

தமிழக கர்நாடக தண்ணீர் பிரச்சினை முதல்.. கேரளாவில் உள்ள கம்யூனிச போராட்டங்கள்.. வட இந்தியாவில் உள்ள சாதி வெறி வன்முறை என அனைத்தையும் சாடியுள்ளார்.

க்ளைமாக்ஸ் காட்சியும் தலாக் முறைகளும் கவனம் பெறும்.

இறுதியாக மனிதம் தாண்டி மதம் இல்லை.. இதயம் தாண்டி இறைவன் இல்லை என்ற கருத்தை வலியுறுத்தி படத்தை நிறைவு செய்கிறார் இயக்குனர் ராஜீ முருகன்.

ஆக… ஜிப்ஸி.. அஜீரணம்

Gypsy review rating

First on Net வௌங்காத கிரகம்… வெல்வெட் நகரம் விமர்சனம் 2.5/5

First on Net வௌங்காத கிரகம்… வெல்வெட் நகரம் விமர்சனம் 2.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

பழங்குடியின மக்களின் நல்வாழ்வுக்காக உதவுகிறார் கஸ்தூரி. இவரின் தோழிதான் வரலட்சுமி. இவர் ஒரு பத்திரிகையாளர்.

ஆனால் பழங்குடியின மக்களின் உரிமையை பறித்து, அங்குள்ள 45 பேர்களை காட்டுத்தீயால் இறந்துவிட்டதாக தவறான செய்தியை பரப்புகின்றனர்.

இதனையறிந்த கஸ்தூரி சில ஆதாரங்களை திரட்டி வரலட்சுமிக்கு போன் செய்து இவர்களின் மற்றொரு தோழியின் (மாளவிகா சுந்தர்) வீட்டிற்கு வர சொல்கிறார்.

வரலட்சுமி அங்கு செல்வதற்குள் கஸ்தூரி கொல்லப்படுகிறார்.

எனவே ஆதாரங்களை தேடி வரலட்சுமியும் அந்த கும்பலும் அங்கே விரைகிறது

அதன்பின்னர் வரலட்சுமி என்ன செய்தார்? கொன்றது யார்? ஆதாரங்கள் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

First On Net அஜீரணம்… ஜிப்ஸி விமர்சனம்… 2.75/5

அட…. கதை சூப்பரா இருக்கே… என நீங்கள் நினைக்கலாம். இது ஒன் லைன் தான். ஆனால் இந்த கதைக்குள் மற்றொரு கதையை திணித்து வைத்துள்ளனர்.

அதுபற்றிய சின்ன பார்வை இதோ….

மாளவிகா சுந்தர் மற்றும் அவரது கணவர் முகிலன் இருவரும் ஒரு பார்ட்டிக்கு செல்கின்றனர். அங்கு செல்வம் என்பவன் ஒரு பெண்ணை கற்பழிக்க முற்படுகிறான். அப்போது முகிலன் அவனை அடித்து விடுகிறார்.

இதனால் டான் அர்ஜய் மற்றும் கண்ணன் ஆகியோருடன் முகிலன் வீட்டை தேடி செல்கிறார் செல்வம். அங்கு பெரிய ரகளையே நடக்கிறது.

சரி ஏதோ சொல்ல வருகிறார்கள் என்றால்… அந்த கதைக்கும் இதுக்கும் ஒன்னுமே சம்பந்தமில்லை. அந்த வீடு மட்டும்தான் சம்பந்தப்பட்டு இருக்கிறது.

சரி.. கேரக்டருக்கு வருவோம்…

படத்தின் நாயகி வரலட்சுமிதான். இடைவேளை வரை கெத்தாக வலம் வரும் இவர் அதன்பின்னர் மற்ற கேரக்டர்களில் ஒன்றாக வருகிறார். தனியாக தெரியவில்லை.

அர்ஜய், கண்ணன், முகிலன், செல்வம், டில்லி (ரமேஷ் திலக்) என மாற்றி மாற்றி அடித்துக் கொள்கின்றனர். அதை எல்லாம் நமக்கே முடியல.

சரி இந்த கதை வேற லெவல்ல இருக்கும் போல. டைரக்டர் ஏதாச்சும் ட்விஸ்ட் வச்சி ரெண்டு கதையை கனெக்ட் பண்ணி இருப்பாரு பார்த்தா? அதுவும் பெருசா இல்லை.

இந்த ரகளை முடியும் போது போலீஸ் வருகிறார். அவர் அந்த ஆதாரங்களை எடுக்க வருகிறார் அவ்வளவுதான். இதுக்கு ஏன்ப்பா இவ்வளவு பில்டப்? என கேட்குறீங்களா? எங்களுக்கும் அதே டவுட் தான் பாஸ்.

இதனிடையில் கஸ்தூரி வேற வருகிறார். ஹைய்யா.. நானும் இந்த படத்துல நடிச்சுருக்கேன் என அவர் சொல்லிக் கொள்ளலாம்.

போலீஸ் கேரக்டரில் வருபவர் கவனம் பெறுகிறார். மாலை போட்டு இருக்கும் மற்றொரு போலீசை பார்த்து… பக்தியை தொழில்ல காட்டுங்க.. சாமி சந்தோஷப்படும் என சொல்லும்போது சிறப்பு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாடல் இல்லை. பின்னணி இசையை சரண் ராகவன் என்பவர் அமைத்துள்ளார். த்ரில்லர் இசை ஒரு சில காட்சியில் தெறிக்கவிட்டுள்ளார். ஆனால் படம் முழுவதும் அதையே ரிப்பீட் செய்திருப்பதால் அதுவும் போரடிக்கிறது.

துப்பறிவாளன் தினேஷ் ஸ்டண்ட் அமைத்துள்ளார். அதிலும் சும்மா போட்டு புரட்டி புரட்டி அடிப்பது, அறைவது என சின்னப்புள்ளதனமாக சண்டையாக உள்ளது.

ஒளிப்பதிவாளர் பகத்குமார் தன் பணியை சிறப்பாக செய்துள்ளார். ஒரு வீட்டுக்குள் ஒரு இரவில் நடக்கும் கதையை அதற்கேற்ப ஆங்கிள்களை வைத்துள்ளார்.

லிப்ட், நீச்சல் குளம், பெரிய ஸ்கீரின் தியேட்டர் என பக்காவான ஒரு வீட்டை தன் கலை பணியால் அலங்கரித்துள்ளார் கலை இயக்குனர் குமார் கங்கப்பன்.

ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா எடிட்டிங் செய்துள்ளார். அவராவது பாத்து செய்திருக்கலாம்.

மனோஜ் குமார் நட்ராஜன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தின் பாடல்கள் எதுவுமில்லை. எடுத்தவுடனே கதைக்குள் சென்றுவிட்டார். அது எல்லாம் சரிதான்.

கதைக்குள் கதை வைத்து சொல்லிவிட்டு அதில் சுவாரஸ்யம் இல்லாமல் செய்துவிட்டார். என்ன சொல்கிறோம்.. ஏன் சொல்கிறோம்.. என்பதற்கான தெளிவே இல்லை.

மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

ஆனால் கடைசி வரைக்கும் வெல்வெட் நகரம்ன்னு ஏன் டைட்டில் வச்சாங்கன்னு தெரியலையே….

ஆக.. இந்த வெல்வெட் நகரம்.. வௌங்காத கிரகம்

Velvet Nagaram review rating

ஹார்ட் பத்திரம் பாஸ்.. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் விமர்சனம் 4.25/5

ஹார்ட் பத்திரம் பாஸ்.. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் விமர்சனம் 4.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

துல்கர் சல்மான் & ரக்‌ஷன் ப்ரெண்ட்ஸ்.. இவர்களுக்கு சொல்லி கொள்கிற மாதிரி குடும்பம் இல்லை.

App Developer & Animator என்று பந்தாவாக சொல்லிக் கொண்டு ஆன்லைன் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆன்லைனில் லேப்டாப் ஆர்டர் செய்து பொருளை வாங்கிவிட்டு அதிலிருந்து பார்ட்ஸை மாற்றி விட்டு கம்ப்ளைன்ட் கொடுத்து ரிட்டன் செய்வது இவர்களின் வழக்கம்.

மேலும் Break fastku Bavana & Lunchku Lavanya என ஜாலியாக செல்கிறது இவர்களது வாழ்க்கை.

ஒரு கட்டத்தில் ரிது வர்மாவை ஹீரோ துல்கர் சந்திக்க காதல் ❤️ கொள்கிறார். அடுத்து என்ன நீங்களே யூகித்து இருப்பீர்கள்.. ரக்‌ஷன் ரிதுவின் தோழி நிரஞ்சனி மீது காதல் கொள்கிறார்.

இவர்களுக்கும் குடும்பம் கிடையாது.

தீப்பொறி…. திரௌபதி விமர்சனம் 3.25/5

நால்வரும் கோவா சென்று செட்டிலாக நினைக்க, அங்கே வருகிறார் போலீஸ் அதிகாரி கெளதம் வாசுதேவ் மேனன்.

அப்போது சூப்பர் ட்விஸ்ட் வைத்து கதையை ஜெட் வேகத்தில் கொண்டு செல்கிறார் டைரக்டர் தேசிங்கு பெரியசாமி.

அடுத்து என்ன நடக்கிறது? என்பது எல்லாம் கற்பனைக்கு எட்டாத கதை.

கேரக்டர்கள்..

துல்கரை கண்டால் இளம் பெண்களின் மனசு துள்ளும்… துறு துறு நடிப்பில் இதயங்களை கொள்ளை கொல்கிறார்.. ஆக்சன் இல்லை. ஆனால் ரொமான்சிலும் ஏமாறும் போதும் ரசிக்க வைக்கிறார்.

ப்ளான் பண்ணி இவர் செய்யும் ஒவ்வொரு திருட்டும் நம்மை ஆச்சரியப்பட வைக்கும்.. ஆன்லைன் விரும்பிகளை அலர்ட்டும் செய்ய வைக்கும்..

டிவி நிகழ்ச்சிகளில் மட்டுமே நாம் பார்த்த ரக்‌ஷன், இதில் ரெண்டாவது ஹீரோ எனலாம். பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

இணையத்தை நெளிய வைத்த விக்ரமின் ‘கோப்ரா’; இதான்டா பெஸ்ட் லுக்

டைமிங் காமெடியில் செம கலக்கல்.. சினிமாவில் பெரிய ரவுண்ட் வருவார் ரக்‌ஷன்.

செம்மொழி பூங்காவில் இவர் பேசும் வசனங்கள் சூப்பரூ…

மச்சி ஒரு குவார்ட்டர் சொல் என்பதுபோல.. எனக்கு கால் பண்ணு மச்சி என சொல்லும்போது நீங்களே கை தட்டுவீங்க..

இந்த பொண்ணுங்களே இப்படித்தான்… சிம்பு சொன்னது சரிதான் என கூறும்போது தியேட்டரில் அப்ளாஸ்.

ரிது வர்மா க்யூட் சில காட்சிகளில்.. இவர் ஆண்களுக்கு பிராகெட் போடுவது ஹைலைட்..

எங்க போனாலும் படுக்க கூப்டுறாங்க.. இப்படிதானடா நீங்க எல்லாம்.. பொண்டாட்டி இருந்தாலும் இவங்களுக்கு இன்னொன்னு வேணும் என ரிது சொல்லும் போது பெண்களே கை தட்டுவாங்க..

இவரின் தோழியாக நிரஞ்சனி.. 2வது ஹீரோயின்.. ரக்‌ஷனை இவர் கலாய்க்கும் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார்.

போலீஸ் அதிகாரியாக கௌதம் மேனன்.. ஸ்டைலிஷ் லுக்கில் மிரட்டல்.. இவரது ப்ளாஷ்பேக் எதிர்பாராத ட்விஸ்ட்.. அதுவும் அப்ளாஸை அள்ளும்..

பெரிய பணக்கார மனிதர்களுக்கே உள்ள சபல புத்தி ஆசாமியாக வரும் மிட்டலும் செம.. போனில் கிஸ் அடிப்பது எல்லாம் அல்டிமேட் ரகம்.. இவரின் ஹை டெக் கார் & வீடு வாவ் ரகம்..

தொழில்நுட்ப கலைஞர்கள்…

எனை விட்டு எங்கும் போகாத… என்றும் போகாத பாடல் அழகான மெலோடி…

மசாலா காஃபி & ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இவர்களது பின்னணி இசை வேற லெவல்… ஒவ்வொரு ட்விஸ்ட் வரும்போதும் ஒலிக்கும் இசை சூப்பர்.

கே எம் பாஸ்கரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம்… ஒரு அழகான சினிமாவை பார்க்க முடிந்தது.

மைனஸ்..

படத்தின் முதல் காட்சியே ஓவர் பில்டப் கொடுத்து பார்ட்டி சாங் வச்சது ஓவர்.. அந்த பாடலும் பெரிதாக கவரவில்லை..

ப்ளஸ்…

ஆன்லைன் திருட்டு விழிப்புணர்வு வரும்..

ஏடிஎம் மெஷின் எண்டர் கீ டெக்னிக்.. விழிப்புணர்வு வரும்.

கார் அன்லாக்.. & சிசிடிவி கேமராவுக்கே Infra red light அடிப்பது.. என நியூ டெக்னிக்கலை சொல்லியிருப்பது..

க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் வசனங்கள் சூப்பர்..

பசங்கள ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்… பொண்ணுங்களுக்கு ஆண்டவன் நிறைய குடுப்பான் ஆனா கைவிட்டுவான்..

ஏன்.. காதல்னா பசங்க தான் எப்பவுமே தோக்கனுமா?

ஹீரோயின் இன்ட்ரோ சாக்லேட் சீன் & சில்லறை காசு சீன் வசனங்கள் என நிறைய அப்ளாஸ் சீன்ஸ்..

இயக்கம்….

ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி வைத்திருக்கிறார் இயக்குனர் தேசிங் பெரியசாமி.

இந்த படத்திற்காக கிட்டதட்ட 5 வருடங்கள் போராடி இருக்கிறார்.. நிறைய போராட்டத்திற்கு பிறகு இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.. முதல் பந்திலே சிக்ஸர் அடித்துள்ளார்.

எல்லாம் தரப்பு மக்களும் படம் பார்த்து என்ஜாய் செய்யனும் என்பதை அறிந்து வெயிட்டான ட்ரீட் கொடுத்துள்ளார்.

சரியான திட்டமிடல், சரியான விளம்பரம் செய்தால் பெரியளவில் இப்படம் பேசப்படும்..

தமிழ் சினிமாவில் இளம் ஹீரோக்களுக்கு சேலன்ஞ்ச் செய்துள்ளார் துல்கர் சல்மான்.

ஆக…..

ஹார்ட் பத்திரம் பாஸ்.. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்..

தீப்பொறி…. திரௌபதி விமர்சனம் 3.25/5

தீப்பொறி…. திரௌபதி விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய மோகன் ஜி என்பவரின் 2வது படம் இது.

இதன் டிரைலர் வெளியான போதே பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய இந்த படம் அதற்கான தகுதியை பெற்றுள்ளதா? என்பதை பார்ப்போம்.

கதைக்களம்…

தனது மனைவி, மனைவியின் தங்கை ஆகியோரை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்படுகிறார் நாயகன் ரிச்சர்ட் (ருத்ர பிரபாகர்),

சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவரும் இவர் யாருக்கும் தெரியாமல் தலைமறைவாக கேன் டீ வித்து சில திட்டங்களை தீட்டுகிறார்.

தன்னை சிறைக்கு அனுப்பியவர்களை பழி தீர்க்க திட்டம் போட்டு ஒவ்வொருவரையும் போட்டுத் தள்ளுகிறார்.

இத்துடன் தன் மனைவி திரௌபதியின் சபதத்தை நிறைவேற்றும் வரை ஓய மாட்டேன் என உறுதியேற்று போராடுகிறார்.

ஹார்ட் பத்திரம் பாஸ்.. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் விமர்சனம் 4.25/5

அதாவது போலி திருமணம் மற்றும் அதற்கான சான்றிதழ் அதன் பின்னணியில் உள்ள சட்ட ஓட்டை உடைசல்களை ஆகியவற்றை எதிர்த்து போராடுகிறார்.

இறுதியில் என்ன ஆனது? பழி வாங்கினாரா,? திரௌபதி சபதம் நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை கதை.

கேரக்டர்கள்..

நீண்ட நாட்களுக்கு பிறகு ரிச்சர்ட் ஹீரோவாக நடித்துள்ளார். ஆக்சன், ஆக்ரோஷம், அமைதி என அனைத்து விதமான வெரைட்டிகளிலும் தன் கேரக்டரை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

கதையின் நாயகியே ஷீலா தான். திரௌபதி கேரக்டரில் தீப்பொறி. இவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் பெண்களுக்கு தனி மரியாதையை உருவாக்கும்.

ஜேஎஸ்கே கோபி மற்றும் போலீஸ் அருண் (நிசாந்த்) ஆகியோரின் கேரக்டர்கள் நாடகத்தனமாக உள்ளது. கேரக்டர்களில் வலுவில்லை. போலீசுக்கு உரிய கம்பீரம் இருவரிடமும் இல்லை.

அம்பானி சங்கர், வக்கீல் கர்ணன் மற்றும் அரசியல்வாதி ஆகியோரின் கேரக்டர்கள் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன.

முக்கியமாக டாக்குமெண்டரி பெண் டைரக்டர், லேடீ டாக்டர் மற்றும் திரௌபதி ஆகியோர் பெண்களுக்கு தனி மரியாதையை கொடுத்துள்ளனர்.

அதிரடி வசனங்கள்…

பெண்களை நிர்வணமாக்கி அல்லது அவர்களது படங்களை மாஃபிங் செய்து விளையாடும் கும்பலுக்கு சாட்டையடி கொடுத்துள்ளார்.

அம்மணம் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும்தான் என பேசி திரௌபதி செய்யும் வீர செயல் மரண மாஸ்.

இணையத்தை நெளிய வைத்த விக்ரமின் ‘கோப்ரா’; இதான்டா பெஸ்ட் லுக்

100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தில் நடக்கும் தில்லு முல்லுகளை திரௌபதி சுட்டிக் காட்டும்போது சூடு பறக்கிறது. பேன் பார்ப்பது, குறட்டை விட்டு உறங்குவது இதெல்லாம் அரசை ஏமாற்றும் வேலை என பேசுவது நச்.

அதுபோல் பெண் டாக்டர் ஒருவர்.. என்றைக்கு பெண்கள் சானிடரி பேட் வைத்துக் கொள்ள ஆரம்பித்தாமே அப்போதே குழந்தை பிறப்பதை கார்ப்பரேட் காரன் முடிவு செய்துவிடுகிறான் என்பதாகட்டும்…

நாய் வளர்க்குறோம்… மீன் வளர்க்க்குறோம்.. ஆனா யாரும் நாளைய சமுதாயத்திற்காக மரம் வளர்க்கல என பேசுவதாகட்டும்…
ஒரு வாட்டர் கேன் 30 ரூபாய் விற்று சம்பாதிக்கும் முதலாளி வர்க்கத்தை சாடுவதாகட்டும்..

நிலத்தடி நீர்க்காக கிராம பஞ்சாயத்தில் வாத்தியார் பேசும் வசனங்களாட்டும்…

போலி திருமண சான்றிதழ் பெறும் முறையாகட்டும் அதில் நடக்கும் ஊழல்கள் ஆகட்டும் என ஒவ்வொன்றையும் பிரித்து மேய்ந்திருக்கிறார் டைரக்டர்.

வெறுமனே ஆணவக்கொலை கௌரவக் கொலைகளை காட்டாமல் அதையும் மீறி பெண் குழந்தைகளை பெற்றவர்களிடம் பணம் பறிக்கும் முறையை போலி திருமண சான்றிதழ் மூலம் சொல்லியிருப்பதும் புதுசு.

ஒரு கோடியில் கிரவுட் ஃபண்டிங் மூலம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

மைனஸ்…

ஒரு சாதியினரை உயர்த்தி காட்டுவதாக சில காட்சிகள் உள்ளது. இதனால் மற்ற சாதியினர் மனம் புண்பட வாய்ப்புள்ளது. அதை தவிர்த்திருக்கலாம்.

காட்டப்பட்டிருக்கும் காட்சிகள் மற்றும் நபர்கள் ஒரு சில அரசியல் தலைவர்களை சித்தரித்தே வைக்கப்பட்டுள்ளது. இதனால் சலசலப்புகள் ஏற்படலாம்.

ஒரு சில நடிகர்கள் தேர்வு சரியில்லை. அதாவது நடிப்பு எடுபடவில்லை.

பெண்களை இழிவுபடுத்தும் சொற்களை தவிர்த்திருக்கலாம்.

அவள அங்க அங்க தடவி… அப்படியே மாசமாக்கு என்ற வசனம் முதல்..….

பணக்கார பெண்ணை மயக்கி அவர்களை திருமணம் செய்தால் லைஃப் செட்டிலாகி விடலாம் என்ற எண்ணத்தையும் இது சிலருக்கு விதைக்கலாம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இரண்டு பாடல்கள் இருந்தாலும் இரண்டும் கவரவில்லை. அதிலும் வேல்முருகன் பாடும் கண்ணாமூச்சி பாடல் ஏன்? பழைய வண்ணாரப்பேட்டை படத்தில் உள்ள அதே ஸ்டைலில் பாட்டை வைத்திருக்கிறார் டைரக்டர். அந்தளவு அவரின் கற்பனை பஞ்சமா..?

ஒளிப்பதிவில் குறையில்லை. காட்சிகளை திறம்பட படமாக்கியுள்ளார்.

ஆனால் எடிட்டர்தான் தன் வேலையை சரியாக செய்யவில்லை. தேவையில்லாத பாடலை கட் செய்திருக்கலாம். படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் மக்களின் கவனத்தை இன்னும் ஈர்த்திருக்கலாம்.

இறுதியாக க்ளைமாக்ஸில் சொல்லப்பட்ட காட்சிகள் செம.

பணத்தை பார்த்தால் அலையும் நாய்கள் போல அரசு அதிகாரிகள் இருப்பதால் ஏற்படும் சமுதாய சீர்கேட்டையும் அரசு வக்கீல் இறுதிவரை பாய்ண்ட் பை பாய்ண்ட்டாக பேசும் வசனங்களும் சிந்திக்க வைக்கின்றன.

மணப்பெண்ணே இல்லாமல், பெற்றோர் இல்லாமல் போலியாக நடத்தப்படும் திருமண சான்றிதழ் பதிவுகளை அப்பட்டமாக காட்டியிருப்பது அரசாங்க அதிகாரிகளின் ஊழலை தோலுரித்துள்ளது.

இனி ரிஜிஸ்டர் மேரேஜ் நடக்கும் போது நிச்சயம் சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவை கோர்ட் போடும்போது சபாஷ் போட வைக்கிறது.

நாடக காதலால் ஏற்படும் விளைவுகளை சொன்ன விதத்தில் இளம் பெண்களுக்கு நல்ல பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது.

ஆங்காங்கே நிறைய சாதி கட்சி சார்ந்த குறியீடல்கள் உள்ளது. அதை தவிர்த்து இருக்கலாம்.

இந்த படத்தை சாதி கண்ணோத்துடன் பார்க்காமல் வெறும் படமாக மட்டுமே பார்த்தால் படத்தை ரசிக்கலாம்.

ஆக.. அரசு அதிகாரிகளின் அலட்சியம், வக்கீல்களின் விதண்டாவாதம், உள்ளிட்ட பல சீர்கேட்டை மோப்பம் முடித்து அதற்கு ஒரு தீர்வையும் சொல்லியிருக்கிறார் மோகன்.

தீப்பொறி.. திரௌபதி

More Articles
Follows