தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
பஞ்சராக்ஷரம் என்றால் நமசிவாய என்று பொருள். எனவே சிவனை சுற்றி ஒரு கதைக்களத்தை அமைத்துள்ளார் டைரக்டர்.
அதாவது நிலம், நீர், காற்று, தீ, வானம் ஆகிய இயற்கையின் 5 வகையானவைகளை வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் பாலாஜி வைரமுத்து.
சந்தோஷ் பிரதாப், கோகுல், அஸ்வின் ஜெரோமி, மதுஷாலினி, சனா அல்டாப் ஆகிய 5 பேர் ஒரு பார்ட்டியில் சந்திக்கின்றனர். அதுவரை இவர்களுக்கு யாரையும் தெரியாது.
இவர்கள் ஐவரும் வெவ்வேறு துறையை சேர்ந்தவர்கள்.
அன்று தொடங்கும் நட்பை கொண்டாட எங்கேயாவது சுற்றுலா செல்லலாம் என தீர்மானித்து செல்கின்றனர்.
ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்கும்போது இவர்களுக்கு பஞ்சராக்ஷரம் என்ற புத்தகம் கிடைக்கிறது. அந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தில் உள்ள சில வாசங்களை தனித்தனியாக படிக்கின்றனர்.
அதன்பின் அவர்கள் வாழ்வில் அதுவே பல பிரச்சினைகளை கொண்டு வருகிறது. இறுதியாக ஐந்து பேரும் சேர்ந்து அதை எப்படி சமாளித்தார்கள்? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்…
சந்தோஷ் பிரதாப் (வானம்) ஆராய்ச்சியாளராகவும், கோகுல் (தீ) இசைக்கலைஞராகவும், அஸ்வின் ஜெரோமி (பூமி) பந்தய வீரராகவும் நடித்துள்ளனர். தங்கள் கேரக்டர்களை உணர்ந்து நடித்திருக்கலாம்.
நாயகியாக வரும் மதுஷாலினி (காற்று) எழுத்தாளராக நடித்துள்ளார்.
சனா அல்டாப் (நீர்) மனிதநேயமிக்க பெண்ணாக நடித்துள்ளார். இவர் பாசிட்டிவ்வாக நினைக்கிறார். ஆனால் இவர்தான் படத்தில் அதிக பிரச்சினைகளை சந்திக்கிறார்.
சாலையில் சென்றால் விபத்து வரும் என நினைக்காமல் நம் பயணத்தை தொடங்க வேண்டும். அதை விட்டு விபத்து நடந்துடுமோ என்று பயணித்தால் அது நடக்கும் என்ற கருத்தை வலியுறுத்தியிருக்கிறார் டைரக்டர்.
சுந்தர மூர்த்தியின் இசை ஓகே. யுவாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் கச்சிதம்.
திரில்லிங்கான உணர்வை கொடுக்க நினைத்துள்ளார் இயக்குனர். ஆனால் அதற்கு பொருத்தமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்திருக்கலாம்.
படத்தின் ஆரம்ப கட்டத்தில் இதிகாச கதைகளை சொல்கிறார்கள். அதன் பின்னர் நவீன காலத்தில் கதையை சொல்லியிருக்கிறார்.
இதிகாச கதையை இதில் கொஞ்சம் காட்டியிருந்தால் அதற்கான உயிரோட்டம் கிடைத்திருக்கும்.
பாசிட்டிவ் எண்ணங்களே நம்மை நன்றாக வாழவைக்கும் என சொல்லியிருந்தாலும் அனைவருக்குமே அவர்களின் எண்ணங்கள் படி நெகட்டிவ்வாகவே நடக்கிறது.
மனிதநேய மிக்க அந்த ஒரு கேரக்டருக்காவது பாசிட்டிவ் பாதையை காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
ஆக மொத்தத்தில் ‘பஞ்சராக்ஷரம்’ பாசிட்டிவ் பாதை
Pancharaaksharam review