தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
கபாலி படத்தில் சென்னையில் ரஜினிக்கு உதவும் இளைஞராக நடித்த விஸ்வந்த் இதில் நாயகனாக நடித்திருக்கிறார். டைட்டில் கார்டில் அவரது பெயரே கபாலி விஸ்வந்த் என்றுதான் இடம் பெறுகிறது.
விஸ்வந்த் மற்றும் இவரது 2 நண்பர்கள் சீக்கிரமாக பணம் சம்பாதித்து செட்டில் ஆக ஆசைப்படுகிறார்கள். இவர்களுடன் இயக்குனர் வெங்கடேசனும் இணைகிறார்.
தன் அக்கா கணவர் பெரிய தொழிலதிபர் என்பதால் அவரின் மகளை (5 வயது) கடத்தி பணம் பறிக்க திட்டமிடுகிறார் விஸ்வந்த்.
எனவே இவரின் ஆலோசனைப்படி அந்த மூவரும் கடத்துகின்றனர்.
முதலில் ஒரு கோடி மட்டுமே கேட்க நினைகின்றனர். அப்போதுதான் தன் மாமாவிடம் கோடிக்கணக்கான பணம் வீட்டிலேயே இருப்பது தெரிய வருகிறது.
பின்னர் பணத்தாசை பிடித்து அதிகம் கேட்கின்றனர்.
அந்த இரண்டு நாட்களில் அந்த குழந்தை தன் தாய் மாமா அஸ்வந்தை மற்ற கடத்தல் நண்பர்களுடன் பார்த்து விடுகிறது.
இதனால் மாட்டிக் கொள்வோமே எனப் பயப்படுகிறார். இதனால் தன் அக்காவிடம் உண்மையை சொல்லிவிட நினைக்கிறார்.
ஆனால் மற்றவர்களோ இதற்கு முன் ஒரு பெண்ணை கடத்தி கொலை செய்தோமே அதேபோல் இந்த குழந்தையை கொன்றுவிடலாம் என்கிறார்கள்.
எங்களுக்கு பணம்தான் வேண்டும் என திட்டமிடுகின்றனர்.
இதன்பின்னர் அவர்களுக்குள் என்ன நடந்தது? குழந்தையை கொன்றார்களா? அஸ்வந்த் என்ன செய்தார்? பணம் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்…
விஸ்வந்த ஹீரோ என்றாலும் அவரே வில்லனாகவும் மிரட்டியிருக்கிறார். படத்தில் ரொமான்ஸ் இல்லை. எனவே இந்த த்ரில்லர் ஆட்டத்தில் ஸ்கோர் செய்ய முயற்சிக்கிறார்.
இவருடன் ஆடம்ஸ், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், கேஸியான் என 3 பேர் நடித்துள்ளனர். இன்னும் நடிப்பை மெருக்கேற்றியிருக்கலாம்.
டிவி தொகுப்பாளர் ஆடம்ஸ் கத்தி பேசும்போது என்ன பேசுகிறார்? என்றே தெரியவில்லை. உச்சரிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.
கடத்தப்படும் குழந்தையின் பெற்றோர்களான நித்யா ரவீந்தரும், விஜய் கிருஷ்ணராஜும் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். குழந்தையை பறிக்கொடுத்த பெற்றோர்களின் மன வேதனையை நடிப்பில் உரக்க சொல்லியுள்ளனர்.
குழந்தை நட்சத்திரம் பேபி அம்ருதா அழகு குட்டி. மாமாவின் மீது இவ்வளவு அன்பு காட்டும்போது இப்படி செய்வார்களா? என தவிக்க வைக்கிறார்.
ரித்விகாவுக்கு சின்ன வேடம்தான். பேயாகவும் வருகிறார். ஆனால் நமக்கு பயம்தான் வரவில்லை. மேக்அப் மேன் பேக்அப் ஆகிவிட்டாரா?
தொழில்நுட்ப கலைஞர்கள்..
மகேஷ், கே.தேவின் ஒளிப்பதிவும் ஆதிஷ் உத்ரியனின் இசையும் ஜஸ்ட் ஓகே.
குழந்தை கடத்தல் படமாகவே சொல்லியிருக்கலாம்.
அதில் தேவையில்லாமல் பேய் கதையை கொண்டு வந்து ஏதோ சொல்ல நினைத்து தோற்று விடுகிறார்கள்.
நம் குடும்பத்தில் இருக்கும் ஒருவரே இதுபோன்ற குழந்தை கடத்தலை செய்யலாம். எனவே எச்சரிக்கையாக இருங்கள் என அருமையாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஜே.பி.ஆர்.
ஆனால் பேயை கொண்டு வந்து நம்மை சிரிக்க வைத்துவிட்டார்.
க்ளைமாக்ஸ் காட்சியில் அந்த பெற்றோர் படும் அவஸ்தை வலியை உணர வைக்கிறது.
ஓநாய்கள் ஜாக்கிரதை… பெற்றோருக்கு எச்சரிக்கை