தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விமர்சனம் இதோ…
போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு ஒரு அவசர அழைப்பு வருகிறது. போலீஸ் அலர்ட் ஆகிறது.
காவல் ஆய்வாளர் கயல் (சுபா) சம்பந்தப்பட்ட இடத்துக்கு செல்கிறார்.
விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் லாவண்யா என தெரிகிறது. ஆனால் கண்ட்ரோல் ரூமுக்கு வந்த போன் எண் வர்ஷா என்ற பெண் பெயரில் உள்ளது.
எனவே வர்ஷா என்பவரும் ஆபத்தில் இருப்பது போலீசுக்கு தெரிய வருகிறது.
இந்த வழக்கை, தடவியல் அதிகாரி விஷ்வா மற்றும் கயல் ஆகிய இருவரிடமும் ஒப்படைக்கிறார் உயரதிகாரி (கயலின் அப்பா).
இந்த நிலையில், ஹேமா என்ற இளம் பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்படுகிறாள். அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர். இந்த வழக்கும் இந்த கதையில் தொடர்புடையதாக இருக்கிறது.
பெண்களை படத்தி கொலை செய்தவர் யார்.? விசாரணையில் போலீஸ் என்ன கண்டுபிடித்தார்கள்? என்பதே படத்தின் மீதி கதை.
கலைஞர்கள் பணி…
போலீஸ் வேடத்துக்கு கொஞ்சம் பொருத்தமாக இருக்கிறார் ஹீரோ விஷ்வா. அவர் விசாரணை நடத்தும் விதம் விவேகம்.
சாய் தன்யா, சுபா, காதல் சரவணன், பிர்லா போஸ் ஆகியோரின் பங்களிப்பு ஓகே..
சுகுமாரன் சுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சரண் குமார் இசை அமைத்துள்ளார். இவர்கள் தங்கள் பணிகளில் ஓரளவு தேர்ச்சி பெறுகிறார்கள்.
சந்துரு முருகானந்தம் என்பவர் இயக்கியிருக்கிறார். வழக்கமான பெண் கடத்தல் சம்பவத்தை வைத்து இந்த படத்தை படமாக்கி இருக்கிறார்.
தொலைந்துவிட்ட பெண்களை தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பதே நாட் ரீச்சபிள் என்பதை தலைப்பாக வைத்து பரபரப்பை ஏற்றி இருக்கிறார்.
த்ரில்லர் பாணியில் விறுவிறுப்பாக கதை சொல்ல டைரக்டர் முயற்சித்து இருக்கிறார். ஆனால் திரைக்கதையில் அடுத்தடுத்து சுவாரஸ்யம் குறைவு என்பதால் நம்மாளும் கதையுடன் ரீச் ஆக முடியவில்லை.
தடயவியல் அதிகாரியை ஒரு கொலை வழக்கில் முதன்மை அதிகாரியாக நியமிப்பார்களா?
ஆனால் ‘காவலன்’ மொபைல் செயலி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் காட்சிகளை அமைத்துள்ளார் டைரக்டர்.
Not Reachable movie review rating