தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்.. முதலிரவில் உடலுறவு இன்று மட்டும் வேண்டாம் என்கிறார் மாப்பிள்ளை. இன்று எப்படியாவது உடலுறவு வேண்டும் என்கிறார் அதுல்யா.. முதலிரவு நடந்ததா? என்பதே கதை.
கதைக்களம்..
ஷாந்தனுவுக்கும் அதுல்யாவுக்கும் திருமணம் நடக்கிறது. அந்த திருமண காட்சிகளை கூட பெரிதாக காட்டவில்லை. அன்று இரவு முதலிரவு நடக்கவுள்ளது.
ஷாந்தனுவிடம் அவரது தாத்தா பாக்யராஜ் ஒரு நிபந்தனை விதிக்கிறார் உங்களிருவருக்கும் முதலிரவில் உடலுறவு நடந்தால் பரம்பரைச் சொத்து ரூ 300 கோடியை அனாதை ஆசிரமத்திற்கு எழுதி வைத்துவிடுவேன் என்கிறார்.
அதற்கு ஒரு காரணம் சொல்கிறார். பக்கத்தில் பொண்டாட்டி இருந்து இன்று மட்டும் நீ அவளுடன் உடலுறவு கொள்ளாமல் இருந்தால் நாளை எந்த பெண் உன் வாழ்வில் வந்தாலும் நீ சலனப்படமாட்டாய் என்கிறார்.
மற்றொருபுறம் அதுல்யாவிடம் அவரது அத்தை ஊர்வசி ஒரு நிபந்தனை விதிக்கிறார். இன்று முதலிரவில் உடலுறவு நடைபெறவில்லையென்றால் குழந்தை பிறக்காது என்ற தோஷம் இருப்பதாக சொல்கிறார்.
முதலிரவில் செக்ஸ் வைத்துக் கொண்டார்களா.? என்பதை முழுப்படம்.
சொத்தை அபகரிக்க மனோபாலா, மதுமிதா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் திட்டம் போடுவது அறைக்கு வெளியே நடக்கும் கதை.
கேரக்டர்கள்…
துறுதுறு இளைஞனாக ஷாந்தனு.. இளமை துள்ளலான நடிப்பில் அதுல்யா.. இருவருக்கும் ஜோடி பொருத்தம் நன்றாகவே உள்ளது.
நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பில்லை எனலாம். ஒருவேளை…ஒரு இரவில் ஒரு அறையில் இவர்களுக்கு நடிக்க தெரியலையோ என்னவோ..? சின்ன சின்ன முகபாவனைகள் மட்டுமே எடுபடுகின்றன.
பாக்யராஜ் ஊர்வசி உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் இருந்தும் படத்தில் அவர்களுக்கான வாய்ப்புகள் இல்லை எனலாம்.
என்னடி எத்தனையாவது ரவுண்ட் டீ என அதுல்யா தோழிகள் கேட்கிறார்கள்.. இதுபோல ஷாந்தனு நண்பர்களும்.. பின்னர் அறைக்குள்ளே கபாடி விளையாடுகிறார்கள்… ஜாக்கெட்டில் காய்ன் போட்டு விளையாடுகிறார்கள்.. சூடேற்றும் வகையில் குளிக்கிறார்கள்.. இப்படியே முதலிரவை கழிக்கிறார்கள்..
இவர்களுடன் யோகி பாபு, முனிஷ்காந்த், மனோபாலா, மயில்சாமி, மதுமிதா என ஏகப்பட்ட காமெடியன்கள் உள்ளனர். சில இடங்களில் மட்டும் நம்மை கிச்சு கிச்சு மூட்டுகின்றனர்.
தயாரிப்பாளர் ரவீந்தர் தன் பங்குக்கு நகைச்சுவை செய்ய முயற்சித்துள்ளார். அடல்ட் ஒன்லி படம்தான் என்பது முதலிலே தெரிந்து விடுகிறது- எனவே இன்னும் ரசிக்கத்தக்க வகையில் பாக்யராஜ் பாணியில் இரட்டை அர்த்த வசனங்களை அள்ளித் தெளித்திருக்கலாம். ஒரு சில டபுள் மீனிங் ஜோக்குகள் எடுபடுகின்றன.
டெக்னீஷியன்கள்..
ஏதோ சொல்ல மனம் துடிக்குதே.. TALK LESS WORK MORE உள்ளிட்ட பாடல்கள் நிச்சயம் ரசிகர்களை கவரும். பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் படத்தை பார்க்க வைத்துள்ளார் தரண் குமார்.
இவரையும் ஒளிப்பதிவாளரையும் நிச்சயம் பாராட்டலாம். ஓரிரு காட்சிகளை தவிர படம் முழுக்க ஒரே அறையில்தான் கதை தொடர்கிறது. அதை தனது ஒளிப்பதிவால் ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ரமேஷ் சக்கரவர்த்தி எனலாம்.
விடிவதற்குள் 108 கன்னி பெண்களை கொண்டு வந்து அதற்கான முதலிரவு தாம்பத்ய பூஜை போடுவது எல்லாம் ரொம்ப ஓவர். நம்பும்படியாக இல்லை. கேட்டால் லாஜிக் வேண்டாம் என்பார்கள்.. சரி அதைவிடுங்க..
2 சாமியாராக வருகிறார் மயில்சாமி.. குயில்சாமி.. (இருவரும் ஒருவரே..) பிரகாஷ்ராஜ் நமஹ… என தமிழ் சினிமா வில்லன் பெயர்களை சொல்கிறார்.. மந்திரம் கூட ஏதாவது ரசிக்கும்படி சொல்ல வேண்டாமா..? டயலாக் கூட எழுத மாட்டீர்களா இயக்குனர் ஸ்ரீஜர்.
5 வயது சிறுவர்கள் விளையாடும் போது கூட வசனம் எழுதி விளையாடுவார்கள் போல.. ஆனால் இவர்கள்…??
கதையே இல்லாமல் ஜாலிக்காக எடுத்து சூப்பர் ஹிட்டான படங்கள் இங்கு எத்தனயோ உள்ளன. படம் இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்தால் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் புதுமுக இயக்குனர்களே…
Murungaikkai Chips movie review