தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னையில் வேலை பார்க்கிறார் நாயகன் ராஜீவ் ஆனந்த்.
ஒரு நாள் இரவு அவரது அப்பா இறந்துவிட்டதாக தகவல் வரவே ஊருக்கு புறப்பட்டு செல்கிறார்.
இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குடும்பம் என்பதால், தந்தையின் சடலத்தை பொது வழியில் செல்ல அனுமதி மறுக்கின்றனர் வேற்று சாதியினர்.
இவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வழியோ முட்கள் நிறைந்த பகுதியாகும்.
எனவே அந்த பொது வழியில் எடுத்து செல்ல முனைகிறார். உயர் அதிகாரிகளை சந்தித்த பிறகும் இதற்கு வழியும் விடையும் கிடைக்கவில்லை.
எனவே தன் நண்பர்களுடன் உதவியுடன் கோர்ட்டுக்கு செல்கிறார். அந்த 3 நாட்களாக தந்தையின் சடலம் அவரது வீட்டிலேயே (ஐஸ் பெட்டியில்) இருக்கிறது.
ஒரு வழியாக பொது வழியி சடலத்தை எடுத்துச் செல்ல கோர்ட் அனுமதியளிக்கிறது.
அப்படியிருந்தும் ஊர் அதிகாரிகள், போலீஸ் பட்டாளம், ஜாதி வெறியர்கள் சடலத்தை எடுக்க தடுக்கின்றனர்.
பின்னர் என்ன செய்தார் நாயகன்? என்பதே படத்தின் மீதிக்கதை.
யதார்த்த நாயகனாக நடித்துள்ளார் ராஜீவ் ஆனந்த்.
ஜாதி வெறியால் அவர் படும் இன்னல்கள் அனுதாப்த்தை உண்டாக்கிறது.
காட்சிகளில் வரும், ஊர் நல்லவர், ராஜீவ்வின் நண்பர்கள், அவரது காதலி, வக்கீல் என அனைவரும் கச்சிதம்.
இது ஒரு படம் என்பதை விட ஆவணப்படம் என்பதே சரி.
ஒரே கேமரா ஆங்கிள். நேரடி ஆடியோ ஒளிப்பதிவு என்பதே படத்தின் மைனஸ் ஆகவுள்ளது.
கதைக்களமும் நடிகர்களும் சரி. ஆனால் படம் முழுவதும் இதையே பேசுவதால் ரசிகர்களுக்கு போரடித்துவிடும்.
மற்றபடி இந்த ஆவணப்படம் ஒரு நல்ல முயற்சி. படத்தின் க்ளைமாக்ஸ் யாரும் எதிர்பாராத ஒன்று. அது கண்ணீரை வரவழைக்கும்.
மனுசங்கடா… ஜாதி வெறியர்களே நீங்கள் மனுசங்களா..?
Manusangada movie review