தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : துருவா, வெண்பா, சார்லி கல்பனா, லிங்கா, ஜெயசந்திரன் மற்றும் பலர்.
இயக்கம் : துவாரக்ராஜா
இசை : தரன்குமார்
ஒளிப்பதிவு: பாலாஜி சுப்ரமணியம்
எடிட்டர்: முனிஷ்
கலை: ரமேஷ்
பி.ஆர்.ஓ. : வின்சன் சி.எம்.
தயாரிப்பு : மதியழகன், ரம்யா (எட்ஸ்ட்ரா எண்டர்டெயின்மெண்ட்)
கதைக்களம்…
பார்த்த உடனே சிலரை லவ் செய்ய தோனும் அல்லவா? அதுபோல் ஹீரோ துருவாவை பார்த்த உடனே +2 மாணவி வெண்பாவுக்கு காதல் வருகிறது.
துருவாவுக்கும் காதல் வந்தாலும் அவள் பள்ளி மாணவி, ரொம்ப குள்ளம் என்பதால் வெளிக்காட்ட முடியாமல் தவிக்கிறார்.
மேலும் இருவருக்கும் 8 வயது வித்தியாசம் வேற. இதனால் நண்பர்கள் கிண்டலடிக்க, மறைத்து மறைத்து லவ் செய்கிறார்.
இந்த ஒன்லைனை வைத்து படத்தை சுவாரஸ்யமாக கொண்டு சொல்கிறார் இயக்குனர் துவாரக் ராஜா.
கேரக்டர்கள்…
வயது குறைவான, குள்ளமான பெண்ணை லவ் செய்யும் போது துருவா துறுதுறு. தன் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்.
கற்றது தமிழ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் இவர். இதில் கதையின் நாயகியாக வந்துள்ளார். வார்ம் வெல்கம் வெண்பா.
நடிப்பிலும் அழகிலும் க்யூட் பெண் வெண்பா. ஸ்கூல் யூனிபார்மிலும் கலர் டிரெஸ்ஸிலும் தன் பப்பி காதலை சொல்லும் இடங்களில் ரசிக்க வைக்கிறார்.
18வயதுக்குள் காதல் வந்தால் பெண்கள் என்ன செய்வார்கள்? என்பதை ரசிக்கும்படி செய்திருக்கிறார் வெண்பா.
ஹீரோவின் நண்பர்களாக வரும் இருவரும் ரசிக்க வைக்கிறார்கள். ஹீரோவை கிண்டலடிப்பது முதல் கருத்து புதுசு என்பது வரை ஜாலியாக கொண்டு செல்கிறார்கள்.
வெண்பாவின் அப்பாவாக சார்லி சபாஷ் போட வைக்கிறார்.
துருவாவின் அம்மாவாக கல்பனா. இவர் நடித்த கடைசிப்படம் இதுதானாம். கோமாவில் இருந்து மீண்டு வந்த பிறகு மகனை பார்க்கும் காட்சிகள் கல்பனா கலக்கல்.
தாய்மாமனாக வரும் ஜெயச்சந்திரன் மிடுக்கு. நடிப்பிலும் ஜெயமே. ஆட்டோ டிரைவர், பள்ளி மாணவர்கள் என அனைவரும் அருமையான தேர்வு.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஒரு சில பார்த்த காட்சிகள் என்றாலும் அதை தன் ஒளிப்பதிவின் மூலம் பாலாஜி சொல்லும் வகையில் கவர்கிறார்.
தரன்குமார் இசையில் பாடல்கள் ஓகே. துவாரக்ராஜா பாடல் வரிகளும்.
அட என்னப்பா? இந்த ஹீரோ இப்படி தம் அடிக்கிறாரு என ஆடியன்சே கவலைப்படும் அளவுக்கு ஊதி தள்ளுகிறார் ஹீரோ.
ஆனால் ஹீரோவை பார்த்து அம்மாவும் காதலியும் உன்னையும் கொன்னு, என்னையும் கொன்னுடாதே என கேட்கும் காட்சிகள் அருமை. இதன்பின்னராவது புகை பிடிப்பவர்கள் திருந்தினால் சரி.
நிறைய தம் அடிப்பவர்களால் நிறைய ஓட முடியாது என சொல்லும் காட்சிகளும் பின்னர் தம் பற்ற வைக்கும் காட்சிகளும் அருமை.
காதல் கசக்குதய்யா… காதல் என்றும் கசக்காது