தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : அமர்-மேக்னா, சித்தார்த் – உமாஸ்ரீ இவர்களின் நண்பர்கள், சிங்கம் புலி, முத்துக்காளை, உமா, கசாலி, ஷர்மிளா, காளையப்பன், சிவநாராயணமூர்த்தி மற்றும் பலர்.
இசை: சாகித்யா
ஒளிப்பதிவு: அசோகன் (எ) நந்து
இயக்கம் : ஆர்.வியார்
பி.ஆர்.ஓ.: ஆனந்த்
தயாரிப்பாளர் : பேரண்ட்ஸ் பிக்சர்ஸ் சண்முகம்
கதைக்களம்…
அமர், சித்தார்த்த உள்ளிட்ட 5 சிறுவர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள்.
இவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி கட்டிட வேலை செய்கின்றனர். இவர்களின் மேஸ்திரிதான் சிங்கம் புலி.
இவர்கள் ஐந்து பேரும் எதை செய்தாலும் சேர்ந்தேதான் செய்வார்கள். விலை மாதுவை அனுபவித்தாலும் ஐந்து பேரும்தான்.
இவர்களின் கட்டிட வேலைக்கு ஒரு பெண் (உமாஸ்ரீ) வருகிறாள்.
அதில் சித்தார்த்துக்கு மட்டும் அந்த பெண் மீது காதல் வருகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ள நினைக்கின்றனர்.
இதனிடையில் கான்ட்ராக்டர் மகள் மேக்னா இன்னொருவன் மீது காதல் கொள்கிறாள்.
அதன்பின்னர் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக்கதை.
கதாபாத்திரங்கள்…
அமர் (மேக்னாவின் காதலன்) – மேக்னா (முதலாளியின் மகள், அமரின் காதலி)
உமாஸ்ரீ (கட்டிட பணிபுரியும் பெண்,சித்தார்த்தின் காதலி) – சித்தார்த்(உமா ஸ்ரீயின் காதலன்)
இவர்களுடன் சிங்கம் புலி,முத்துக்காளை, உமா, கசாலி,ஷர்மிளா , காளையப்பன், சிவநாராயண மூர்த்தி, ஜெரால்டு, ராஜசேகர், நசீர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஐந்து நண்பர்கள் இடையில் ஒரு பெண் வந்தால், என்ன பிரச்சினைகள் வரும் என்பதை தெளிவாக எடுத்து சொல்லியிருக்கிறார் டைரக்டர்.
அந்த பெண் நம்பிக்கை வைத்து, அவர்களின் வாழ்க்கை மாற்றி இன்னும் அழகாக்குகிறார்.
மழைக் காலத்தில் கட்டிடத் தொழிலாளர்கள் படும் கஷ்டங்களை அருமையாக காட்டியுள்ளார்.
காட்சிகள் சொல்லி வைத்ததுபோல், எந்த ட்விஸ்ட் இல்லாமல் வருகிறது.
ஆனால் க்ளைமாக்ஸ் கொஞ்சம் எதிர்பாராதது.
நண்பர்களின் கதையை இன்னும் ஆழமாக நாடகத்தனம் இல்லாமல் சொல்லி இருந்தால் ஒரு புது வசந்தம் கிடைத்திருக்கும்.