தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடெங்கிலும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த சில தினங்களுக்கு முன் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சட்டசபையில் இடம் பெற்றுள்ள, 13 கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் இடம் பெற்றனர்.
இந்த குழுவானது நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த அவ்வப்போது கூடி விவாதிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இதில் அதிமுக ஆட்சியின் முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரும் இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள முழு ஊரடங்கு வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் நாளை மறுநாள் (மே 22) காலை வேளையில் தலைமை செயலகத்தில் 13 எம்எல்ஏ.,க்கள் அடங்கிய குழுவுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்வார் என கூறப்படுகிறது.
அப்போது கொரோனா பரவல் தடுப்பு பணிகள் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஊரடங்கு நீடிக்குமா? என காத்திருக்கிறது தமிழகம்..
Will lockdown extend in Tamil Nadu ?