தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக. ஸ்டாலின் கலந்துக் கொண்டார்.
அப்போது விருதுகளை வழங்கினார்.
பெரியார் விருது – மிசா மதிவாணன்
அண்ணா விருது – எல்.மூக்கையா
கலைஞர் விருது – கும்மிடிப்பூண்டி வேணு
பேராசிரியர் விருது – முபாரக்
பாவேந்தர் விருது- வாசுகி ரமணன்
உள்ளிட்டோருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.
முப்பெரும் விழாவில் முதலமைச்சர் முக. ஸ்டாலின் உரையாற்றினார்.
அதில் முக்கியமானவை..
தமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சி தான் என்கிற வகையில் நமது செயல்பாடு அமைந்திட வேண்டும்.
9 மாவட்டங்களில் வருகிற ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் அதன்பிறகு வருகிற நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக 100 சதவீதம் வெற்றி பெற்றாக வேண்டும்.
கோட்டையில் கையெழுத்திட்டு அறிவிக்கப்படும் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர உள்ளாட்சி நிர்வாகத்தில் திமுகவினர் இடம் பிடிப்பது முக்கியம்.
ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் பல நல்லத் திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். இனி வருகிற ஒவ்வொரு மாதங்களிலும் திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளது.
இந்த விழாவில் முரசொலி செல்வம் எழுதிய ‘முரசொலி – சில நினைவலைகள்’ எனும் நூல் வெளியிடப்பட்டது..
DMK rule should no longer be permanent says MK Stalin